மொத்த உள்நாட்டு உற்பத்தி கடும் சரிவு.. 1991-க்கு பிறகு மிக முக்கியமான பட்ஜெட்.. மணீஷ் திவாரி கருத்து
டெல்லி: மொத்த உள்நாட்டு உற்பத்தி சரிவில் இருக்கும் நிலையில் 1991-ம் ஆண்டுக்கு பிறகு இது மிக முக்கியமான பட்ஜெட் என்று காங்கிரஸ் எம்.பி. மணீஷ் திவாரி கூறியுள்ளார்.
நாடாளுமன்றத்தில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மத்திய பட்ஜெட்டை இன்று தாக்கல் செய்கிறார்.
வரலாற்றில் முதன்முறையாக இம்முறை மின்னணு பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது.

பட்ஜெட் இன்று தாக்கல்
நாடு முழுவதும் கொரோனா பாதிப்பால் இதுவரை இல்லாத அளவு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில் நாடாளுமன்றத்தில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மத்திய பட்ஜெட்டை இன்று தாக்கல் செய்கிறார்.நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் கடந்த 29-ம் தேதி தொடங்கியது.

முதன்முறை மின்னணு பட்ஜெட்
அன்றைய தினம் இரு அவைகளின் கூட்டுக்கூட்டத்தில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உரையாற்றினார். பின்னர் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.இன்று காலை 11 மணிக்கு 2021-22 நிதியாண்டுக்கான பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல்செய்கிறார். இம்முறை முதன்முறையாக,மின்னணு பதிவாக பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது.

மொத்த உள்நாட்டு உற்பத்தி சரிவு
இதை காண்பதற்கு இணையதள முகவரி அளிக்கப்பட்டுள்ளது. அதில் பட்ஜெட் விவரங்கள் உடனுக்குடன் வெளியிடப்படும். இந்த நிலையில் காங்கிரஸ் எம்.பி. மணீஷ் திவாரி பட்ஜெட் குறித்து டுவிட்டரில் கருத்து கூறியதாவது:- 1991-ம் ஆண்டுக்கு பிறகு மிக முக்கியமான பட்ஜெட்டாகும். மொத்த உள்நாட்டு உற்பத்தியானது சரிவின் 37-வது மாதத்தில் உள்ளது.

நிதி அமைச்சர் ஒப்புக் கொள்வார்
நிலைமையின் தீவிரத்தை நிதி அமைச்சர் நிர்மலா சிதராமன் ஒப்புக்கொள்கிறார் என்று நான் நம்புகிறேன். எவ்வாறாயினும், பொருளாதார கணக்கெடுப்பு ஏதேனும் இருந்தால், நீங்கள் பெறக்கூடியது எந்தவொரு பொருளையும் புழுக்கமான சான்ஸ் அல்ல என்று மணீஷ் திவாரி கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications