பீகாரில் சின்ன கட்சிகள் கூட ஜெயிச்சிருக்கே.. காங்கிரஸ் தோற்க காரணம் என்ன தெரியுமா? ப.சிதம்பரம் பளிச்
டெல்லி: பீகார் மற்றும் சட்டசபை இடைத் தேர்தல் முடிவுகளை வைத்து பார்க்கும்போது, அடிமட்ட அளவில் காங்கிரஸ் கட்சி பலவீனமாக இருப்பது தெளிவாக தெரிகிறது என்று அந்த கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
பீகார் சட்டசபை தேர்தல் மற்றும் 11 மாநிலங்களில் நடைபெற்ற இடைத் தேர்தல் முடிவுகளில் காங்கிரஸ் கட்சி பலத்த பின்னடைவை சந்தித்தது.
பீகார் மாநிலத்தில் எதிர்க்கட்சியின் கூட்டணி ஆட்சியை பிடிக்க முடியாமல் போக காங்கிரஸ் கட்சி பெரும் முட்டுக்கட்டையாக மாறியது என்ற குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

கபில் சிபல் சர்ச்சை
இந்த நிலையில்தான் காங்கிரஸ் வீழ்ச்சி அடைந்துள்ளது என்பதை தலைமை புரிந்து கொள்ள வேண்டும் என்றுதான் சமீபத்தில் மூத்த தலைவர் கபில் சிபல் தெரிவித்திருந்தார். இவரது கருத்துக்கு ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, சல்மான் குர்ஷித் போன்ற பிற தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர். இந்த நிலையில்தான் ப.சிதம்பரம், தைனிக் பாஸ்கர் என்ற ஹிந்தி பத்திரிகை ஒன்றுக்கு அளித்துள்ள சிறப்பு பேட்டியில் கூறி உள்ளதை பாருங்கள்.

ப.சிதம்பரம் கருத்து
மத்திய பிரதேசம், குஜராத், உத்தரப்பிரதேசம் மற்றும் கர்நாடகா ஆகிய மாநிலங்களில் நடைபெற்ற இடைத் தேர்தல்களில் காங்கிரஸ் தோல்வியடைந்துள்ளதுதான் என்னை மிகவும் கவலைப் படுத்துகிறது. இந்த முடிவுகளை வைத்து பார்க்கும்போது அமைப்பு ரீதியாக காங்கிரஸ் வலுவாக இல்லை என்பதும்அடிமட்ட அளவில் காங்கிரசு பலவீனமாக இருக்கிறது என்பதும் புரிகிறது.

ரொம்ப நாள் ஆகவில்லையே
பீகார் மாநிலத்தில் ராஷ்டிரிய ஜனதா தளம் காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு இருந்தது. வெற்றிக்கு மிக நெருக்கமாகச் சென்ற போதிலும் நாம் ஏன் தோற்றோம் என்பதை விரிவாக ஆலோசிக்க வேண்டும். இத்தனைக்கும், ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சட்டீஸ்கர் மற்றும் ஜார்க்கண்ட் ஆகிய மாநிலங்களில் நடைபெற்ற தேர்தல்களில் காங்கிரஸ் வெற்றி பெற்று மிகவும் அதிக நாட்கள் ஒன்றும் கடந்து போய்விடவில்லை. அப்படி இருந்தும், இப்போது இம்மாநிலங்களில் தோற்றதற்கான காரணம் என்ன என்பது பற்றி ஆலோசிக்க வேண்டியது அவசியம்.

சின்ன கட்சிகளை பாருங்க
சிறிய கட்சிகளான, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்-எம்எல், ஏஐஎம்ஐஎம் (ஓவைசி கட்சி) போன்ற கட்சிகள் கூட பீகாரில் நல்ல ரிசல்ட் பெற்றுள்ளன. அமைப்பு ரீதியாக பலமாக இருந்தால், அடிமட்ட அளவில் பலமாக இருந்தால், சாதிக்க முடியும் என்பதற்கு அவை உதாரணமாக மாறியுள்ளன. அடிமட்ட அளவில் பலமாக இருந்தால் பீகாரில் பாஜக கூட்டணியை தோற்கடித்திருக்க முடியும். இவ்வாறு, ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் தலைவர்
அதேநேரம், காந்தி குடும்பத்தை சேராத ஒருவர் காங்கிரஸ் கட்சிக்கு தலைமை ஏற்க வேண்டும் என்று ராகுல்காந்தி வலியுறுத்தி உள்ளாரே என்ற கேள்விக்கு, பதிலளித்துள்ள சிதம்பரம், காங்கிரஸ் கட்சியின் கூட்டத்தில் யாரை தலைவராக தேர்ந்தெடுப்பார்கள் என்பதை நாம் தீர்மானிக்க முடியாது. யார் வேண்டுமானாலும் அந்த தேர்தலில் போட்டியிட முடியும் என்று கூறியுள்ளார் சிதம்பரம்.
-
அடித்து ஆடிய எடப்பாடி.. திமுக கேம்பில் எதிர்பார்க்காத குளறுபடி.. ஸ்டாலின் மனதில் என்ன இருக்கிறது?.. -
"உங்களுக்கு 3 நாள் தான் டைம்.. உடனே காலி பண்ணுங்க.." காங்கிரஸுக்கு அதிர்ச்சி கொடுத்த நோட்டீஸ் -
ஆதவ் அர்ஜூனா போட்ட குண்டு.. தூக்கி அடிக்கப்பட்ட காங்கிரஸ் மாநில பொதுச் செயலாளர் செல்வம் -
எண்ணி 2 நாள்.. காங்கிரஸ் முக்கிய நிர்வாகிகள் தவெகவில் இணைவார்கள்.. குட்டையை குழப்பும் ஆதவ் அர்ஜுனா -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா?












Click it and Unblock the Notifications