ஏழைகளுக்கு மாதம் ரூ.6000 வழங்கப்படும்.. காங். அதிரடி வாக்குறுதி.. ராகுல் காந்தி மாஸ்டர் ஸ்டிரைக்!
காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால் மாதம்தோறும் குறைந்தபட்ச வருமானம் ரூ.6000 வழங்கப்படும் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வாக்குறுதி அளித்து இருக்கிறார்.
Recommended Video

டெல்லி: காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால் மாதம்தோறும் குறைந்தபட்ச வருமானம் ரூ.6000 வழங்கப்படும் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வாக்குறுதி அளித்து இருக்கிறார்.
காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் இந்தியாவில் உள்ள அனைத்து ஏழைகளுக்கும் சமமாக குறைந்தபட்ச வருமானம் வழங்கப்படும் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி சில வாரங்களுக்கு முன் வாக்குறுதி அளித்து இருந்தார். அது குறித்த முழு விவரங்களை தற்போது அவர் வெளியிட்டு இருக்கிறார்.
லோக்சபா தேர்தல் இப்போது களைகட்ட தொடங்கி இருக்கிறது. காங்கிரஸ் கட்சி இந்த தேர்தலில் வெற்றிபெறுவதற்கான மிக முக்கியமான வாக்குறுதி ஒன்றை அளித்து இருக்கிறது.

குறைந்தபட்ச வருமானம்
குறைந்தபட்ச வருமானம் என்பதை ஆங்கிலத்தில் Minimum Basic Income என்று அழைப்பார்கள். இதன்படி என்ன வேலை பார்த்தாலும், எந்த பொறுப்பில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள ஏழ்மையான குடும்பங்களுக்கு குறைந்தபட்ச சம்பளம் ஒன்று வழங்கப்படும். இது உலகில் சில நாடுகளில் மட்டும் நடைமுறையில் உள்ளது.

காங்கிரஸ் கொண்டு வருகிறது
இதைத்தான் காங்கிரஸ் கொண்டு வர உள்ளதாக தற்போது தெரிவித்துள்ளது. காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் இந்தியாவில் உள்ள அனைத்து வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள ஏழைகளுக்கும் சமமாக குறைந்தபட்ச வருமானம் வழங்கப்படும் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். எவ்வளவு ரூபாய் அளிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

எவ்வளவு ரூபாய்
காங். ஆட்சிக்கு வந்தால் மாதம்தோறும் குறைந்தபட்ச வருமானம் ரூ.6000 வழங்கப்படும் என்று ராகுல் காந்தி கூறியுள்ளார். 5 கோடி குடும்பம் இதனால் பயன் அடையும். 25 கோடி ஏழை மக்கள் இதன் மூலம் பயன் அடைவார்கள். ஏழ்மை நிலையில் உள்ளவர்களில் 20% பேர் ஊதிய உறுதித் திட்டதால் பயன்பெறுவர், என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார்.

எந்த குடும்பம்
மாதம் 12,000 கீழ் சம்பாதிக்கும் குடும்பங்கள் இந்த வருமானத்தை பெற தகுதியானவர்கள். இவர்களின் ஊதியத்தை ஈடுகட்டுவதற்காக மாதம் இந்த 6000 ரூபாய் வழங்கப்படும். இதன் மூலம் வருடம் இவர்கள் ரூ.72000 ரூபாய் பெறுவார்கள்.

எப்படி அளிக்கப்படும்
இந்த பணம் நேரடியாக மக்களின் வங்கி கணக்கிற்கு அளிக்கப்படும். மக்கள் வறுமை கோட்டிற்கு கீழ் இருந்தால் தானாக பணம் அவர்களின் வங்கி கணக்கிற்கு சென்றுவிடும். இது தொடர்பாக அவர்கள் யாரிடமும் பணம் கேட்டு மாதம்தோறும் விண்ணப்பிக்க வேண்டியது கிடையாது.

உலகில் இல்லை
உலகில் இது போன்ற வகையில் அதிகமாக வருமானம் கொடுக்கும் நாடுகள் எதுவும் கிடையாது. எல்லா கணக்கும் செய்து பின் இதை செயல்படுத்த முடியும் என்பதால்தான் இந்த திட்டத்தை அறிவித்து இருக்கிறோம் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார்.
-
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம் -
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
பிரதமர் மோடி ராஜினாமா செய்ய நேரிடும்.. எனக்குத் தெரிந்த தகவல்களை சொன்னால்..சுப்பிரமணியன் சுவாமி பதிவு -
சீனியர் பெண்ணுடன் உறவில் இருக்கும் இஷான் கிஷன்.. அகமதாபாத் மைதானத்தில் காதலை அறிவித்த பாக்கெட் டைனமோ -
தப்பா எடுத்துக்காதீங்க.. விஜயிடம் சொன்ன ராகுல்.. பாஜக பக்கம் தவெக போக.. இப்படி ஒரு ஷாக் காரணமா? -
ரொம்ப ஓவர்.. டி20 உலகக்கோப்பை வெற்றிக்கு பின்.. மைதானத்தில் காதலியுடன் எல்லை மீறிய ஹர்திக் பாண்டியா! -
இந்தியன் வங்கியின் சூப்பர் தங்க நகைக்கடன் திட்டம்.. 3 லட்சம் வரை ஆவணங்களின்றி அரை மணி நேரத்தில் பணம் -
நியூசிலாந்து தொடரால் உடைந்துவிட்டேன்.. கிரிக்கெட் கடவுள் செய்த அட்வைஸ்.. நெகிழும் சஞ்சு சாம்சன்! -
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க புதிய ரூல்ஸ் .. மக்கள் அறிய வேண்டிய 25 நாட்கள் விதிமுறை -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
மக்கள் நீதி மய்யம் இப்படி கேட்கும்ன்னு நினைக்கவே இல்லையே.. ஒரு செகண்ட் ஸ்டன் ஆன திமுக.. என்னாச்சு?












Click it and Unblock the Notifications