அடுத்த ஷாக்.. காங்., மூத்த தலைவர் ஏகே அந்தோணியின் மகன் பாஜகவில் இணைந்தார்.. கேரளாவில் செம ட்விஸ்ட்
டெல்லி: காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் கேரளா முதல்வருமான ஏகே அந்தோணியின் மகன் அனில் அந்தோணி இன்று திடீரென பாஜகவில் இணைந்தார். பிரதமர் மோடி குறித்த பிபிசி ஆவணப்படத்துக்கு ஏற்கனவே எதிர்ப்பு தெரிவித்து கடந்த ஜனவரியில் காங்கிரஸில் தனது பொறுப்புகளை ராஜினாமா செய்த நிலையில் அனில் அந்தோணி இன்று பாஜகவில் இணைந்து கொண்டார்.
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவர் ஏகே அந்தோணி. கேரளாவை சேர்ந்தவர். சோனியா காந்திக்கு மிகவும் நெருக்கமாக அறியப்படும் நபர்களில் இவரும் ஒருவர். இவர் கேரளா முதல் அமைச்சராகவும், மத்திய அமைச்சராகவும் இருந்தார்.

இவரது மகன் அனில் அந்தோணி. இவரும் காங்கிரஸ் கட்சியில் செயல்பட்டு வந்தார். கேரள மாநில காங்கிரஸ் கட்சியின் சமூக வலைதள பிரிவு ஒருங்கிணைப்பாளராகவும், அகில இந்திய அளவில் சமூக வலைதளம் மற்றும் டிஜிட்டர் தகவல் தொழில்நுட்ப பிரிவு இணை ஒருங்கிணைப்பாளராக அனில் ஆண்டோனி செயல்பட்டு வந்தார்.
இந்நிலையில் தான் சமீபத்தில் பிரதமர் மோடி குறித்த பிபிசி ஆவணப்படம் வெளியானது. இதற்கு பாஜக கடும் எதிர்ப்பு தெரிவித்தது. மேலும் மத்திய அரசு இந்த ஆவணப்படத்துக்கு தடை விதித்தது. இந்த தடையை மீறி காங்கிரஸ், இடதுசாரி கட்சியினர் பல இடங்களில் ஆவணப்படத்தை ஒளிபரப்பு செய்தனர். குறிப்பாக கேரளாவில் பிபிசி ஆவணப்படத்துக்கு வெளிப்படையாக காங்கிரஸ், இடதுசாரி கட்சிகள் ஆதரவு தெரிவித்தன. இதற்கு அனில் அந்தோணி எதிர்ப்பு தெரிவித்தார்.

இதுபற்றி அவர், ‛‛பாஜகவுடன் எனக்கு கருத்து வேறுபாடுகள் உள்ளன. இருப்பினும் தவறான எண்ணம் கொண்ட பிபிசியின் கருத்தை ஆதரிப்பது என்பது நாட்டின் இறையாண்மையின் மதிப்பை சீர்குலைக்க செய்வது போல் இருக்கும்'' என தெரிவித்து இருந்தார். இவரது கருத்துக்கு காங்கிரஸ் கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதையடுத்து காங்கிரஸ் கட்சியின் பொறுப்பில் இருந்து விலகி கொள்வதாக அனில் அந்தோணி அறிவித்ததோடு அதற்கான கடிதங்களை கட்சி தலைமைக்கு அனுப்பி வைத்தார். இந்நிலையில் தான் இன்று அனில் அந்தோணி பாஜகவில் இணைந்துள்ளார். டெல்லி பாஜக தலைமை அலுவலகத்தில் நடந்த விழாவில் அனில் அந்தோணி மத்திய அமைச்சர் பியூஸ் கோயலை சந்தித்து தன்னை பாஜகவில் இணைத்து கொண்டார். இந்த சம்பவம் கேரளா காங்கிரஸ் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
நடிகை கவுதமியை மீண்டும் ஏமாற்றிய அதிமுக – பாஜக.. ராஜபாளையம் ஜான் பாண்டியனுக்கு ஒதுக்கியதன் பின்னணி -
சிங்கம் களம் இறங்கிருச்சு.. சிங்காநல்லூரில் களம் காணும் அண்ணாமலை? அக்கா தமிழிசை எங்கே தெரியுமா? -
மதுரை தெற்கில் பாஜக வெல்லுமா.. செளராஷ்டிரா வாக்குகளை நம்பும் ராம சீனிவாசன்.. பூமிநாதன் சமாளிப்பாரா? -
இந்தியாவுக்கு வழிவிட்ட ஈரான்.. கேஸ் தட்டுப்பாடு சரியாகுமா? இல்லத்தரசிகளே இதை கவனியுங்க! -
"அந்த" 54 தொகுதிகள் தான் மேஜிக்.. மம்தாவை காலி செய்ய சக்கர வியூகம்.. இறங்கி அடிக்கும் பாஜக! -
தேர்தலில் போட்டியில்லை.. டெல்லிக்கு கடிதம் எழுதிய அண்ணாமலை.. பாஜகவில் டிவிஸ்ட் -
சேப்டி கேம் ஆடுகிறாரா எடப்பாடி? தென் மண்டலத்தை பாஜகவிற்கு தாரை வார்த்ததில் உள் அர்த்தம் இருக்கிறதா? -
சென்னையில் 16 தொகுதிகளில் அதிமுக போட்டியிடும் 13 தொகுதிகள் விவரம்.. 3ல் கூட்டணி கட்சிகள் போட்டி -
தேர்தல் நேரத்தில் கிளம்பிய பூதம்.. ரூ.4 கோடி பிடிபட்ட வழக்கில் நயினார் நாகேந்திரனை ED விசாரிக்க மனு! -
அண்ணாமலைக்கு சீட் கொடுக்க கூடாது.. எடப்பாடி எடுத்த முடிவு.. பாஜக தொகுதி பங்கீட்டில் என்ன நடந்தது? -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
ஜோதிடர் சொன்ன வார்த்தை? நயினார் நாகேந்திரன் நெல்லை தொகுதியில் போட்டியிடாதது ஏன்? பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications