மோடி பற்றி அவதூறு பேச்சு.. விமானத்தில் இருந்து இறக்கி காங். நிர்வாகி கைது.. சில மணி நேரத்தில் ஜாமீன்
பிரதமர் மோடி குறித்து அவதூறாக பேசிய வழக்கில் அசாம் மாநில போலீசாரால் டெல்லியில் கைது செய்யப்பட்ட பவன் கேராவிற்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால ஜாமீன் வழங்கியது
டெல்லி: பிரதமர் மோடி குறித்து அவதூறாக பேசியதாக டெல்லி விமான நிலையத்தில் வைத்து காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் பவன் கேராவை அசாம் மாநில போலீசார், விமானத்தில் இருந்து இறக்கி கைது செய்தனர். இந்த நிலையில் சில மணி நேரங்களில் உச்ச நீதிமன்றம் பவன் கேராவிற்கு இடைக்கால ஜாமீன் வழங்கியுள்ளது.
காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர்களில் ஒருவர் பவன்கேரா. டெல்லியை சேர்ந்த பவன் கேரா கடந்த சில தினங்களுக்கு முன்பாக செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அதானி விவகாரத்தில் நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை அமைக்க முன்வராத மத்திய அரசையும் பிரதமர் மோடியையும் கடுமையாக விமர்சித்து பேசினார்.

வழக்குப்பதிவு செய்த போலீஸ்
தனது பேட்டியின் போது, "நரசிம்ம ராவ் ஜேபிசி அமைத்து இருக்கிறார். அடல் பிகாரி வாஜ்பாயாலும் ஜேபிசி அமைக்க முடியும் என்றால், நரேந்திர கவுதம் தாஸ்.. "மன்னிக்கவும்" தாமோதர்தாஸ் மோடிக்கு கூட்டுக்குழு அமைப்பதில் என்ன பிரச்சினை? என்று பேசியிருந்தார். பவன்கேராவின் பேச்சுக்கு பாஜக கடும் எதிர்ப்பு தெரிவித்து இருந்தது. பவன் கேராவின் பேச்சுக்கு எதிராக பாஜகவினர் அளித்த புகாரின் பேரில் அசாம் போலீசார் வழக்குப்பதிவு செய்து இருந்தனர்.

விமானத்தில் இருந்து இறக்கி கைது
இந்த நிலையில், காங்கிரஸ் கட்சியின் தேசிய மாநாட்டிற்கு செல்வதற்காக டெல்லியில் இருந்து இண்டிகோ விமானம் மூலமாக சத்தீஷ்கருக்கு பவன் கேரா புறப்பட்டார். அப்போது விமான நிலையத்திற்கு வந்த அசாம் போலீஸ் அதிகாரிகள், முதல் தகவல் அறிக்கையை காட்டி பவன் கேராவை விமானத்தில் இருந்து இறக்கி கைது செய்தனர். இந்த சம்பவத்தால் டெல்லி விமான நிலையத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. விமான நிலைய டார்மாக்கில் காங்கிரஸ் நிர்வாகிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மன்னிப்பு கோரிவிட்டதாக..
இத்தகைய பரபரப்புக்கு மத்தியில் உச்ச நீதிமன்றத்தில், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும் முத்த வழக்கறிஞருமான அபிஷேக் சிங்வி, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி ஒய் சந்திரச்சூட்டிடம் முறையிட்டார். பிற்பகல் 3 மணிக்கு இந்த முறையீட்டை வைக்குமாறு தலைமை நீதிபதி கேட்டுக்கொண்டதையடுத்து இந்த விவகாரம் 3 மணிக்கு முறையிடப்பட்டது. அப்போது மூத்த வழக்கறிஞர் அபிஷேக் சிங்வி கூறுகையில், பவன் கேரா தவறு செய்து விட்டதாகவும் அதற்காக மன்னிப்பு கோரிவிட்டதாகவும் கூறினார்.

28 ஆம் தேதி வரை இடைக்கால ஜாமீன்
மேலும், பவன் கேராவிற்கு எதிராக பல்வேறு மாநிலங்களில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. எனவே நாங்கள் எப்.ஐ.ஆரை ரத்து செய்ய கோரவில்லை. இடைக்கால நிவாரணம் தான் கோருகிறோம்" என்று வாதிட்டார். தொடர்ந்து தலைமை நீதிபதி கூறுகையில், "மனுதாரர் (பவன் கேரா) மன்னிப்பு கோரியிருக்கிறார். நிபந்தனையற்ற மன்னிப்பு கோருவதாகவும் கூறினார். பவன்கேராவிற்கு வரும் 28 ஆம் தேதி வரை இடைக்கால ஜாமீன் வழங்கப்படுகிறது. டெல்லி துவரகா நீதிமன்றம் இடைக்கால ஜாமீனை அளிக்கும்" என்று உத்தரவிட்டது.

கைது செய்வதற்கு தடை
மேலும் பல்வேறு மாநிலங்களில் பவன் கேராவிற்கு எதிராக பதியப்பட்ட வழக்குகளை ஒரே இடத்திற்கு மாற்றுவது குறித்து பதிலளிக்குமாறு அசாம், உத்தர பிரதேசம் ஆகிய மாநில அரசுகளுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. அதேபோல், கைது செய்வதற்கு தடை மற்றும் வெவ்வேறு இடங்களில் பதியப்பட்ட அனைத்து வழக்குகளையும் ஒன்றாக மாற்றுவது தொடர்பான மனுவை வரும் 27 ஆம் தேதிக்கு விசாரணைக்கு பட்டியலிடவும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
-
பாஜக உள்ளே புகுந்துருச்சு ப்ரோ.. ஆண்டுக்காண்டு அதிகரிக்கும் சீட் எண்ணிக்கை! 20ஐ 27ஆக்கிய அமித் ஷா! -
திமுகவையே ஓவர்டேக் செய்த எடப்பாடி.. அதிமுக – பாஜக தொகுதி பங்கீட்டில் இப்படி நடந்ததே இல்லை! பின்னணி -
TN Election: 1-ல்தான் பாஜக ஜெயிக்குமா? திமுக 180-ஆ? டெல்லியை அதிர வைத்த ANS அதிர்ச்சி சர்வே! -
3 முறை பிரதமர்.. பாஜகவிற்கே எடப்பாடி 27 தான் தந்துள்ளார்.. காங்கிரசுக்கு 28.. திமுகவினர் குமுறல் -
அவிநாசி அல்லது மேட்டுப்பாளையம்.. 2ல் ஒரு தொகுதியில் போட்டியிடும் மத்திய இணையமைச்சர் எல்.முருகன்? -
சிங்காநல்லூர் அல்லது கவுண்டம்பாளையம்.. ஒரு தொகுதியை கொடுங்க.. பியூஷ் கோயலிடம் கேட்ட அண்ணாமலை? -
பாமக போட்டியிடும் 18 தொகுதிகள் எவை? வெளியானது உத்தேச பட்டியல்.. எல்லாமே வட மாவட்டங்களில்? -
இன்னும் சற்று நேரத்தில் NDA கூட்டணி தொகுதிப் பங்கீடு.. அதிமுக அலுவலகத்துக்கு விரைந்த பியூஷ் கோயல் -
என்டிஏவில் எல்லா நாளும் கார்த்திகை.. ஒரே குடும்பமா இருக்கோம்! சென்னை வந்ததும் கோயல் சொன்ன வார்த்தை! -
அசைக்க முடியாத சாதனையைச் செய்த மோடி! 8,931 நாள் அரசு பதவி! உலக அளவில் உயரும் டிஜிட்டல் செல்வாக்கு! -
மதுரை வடக்கில் சரவணனுக்கு சீட் இல்லையா? தாமரை சின்னத்தில் களமிறங்கும் திருமாறன்.. பின்னணியில் மூவர்! -
சாத்தூர் தொகுதியில் போட்டியா? எங்கும் போட்டியிடுவேன்.. நயினார் நாகேந்திரன் நேரடியாக சொன்ன பதில்!












Click it and Unblock the Notifications