விவசாயிகளுடனான பேச்சவார்த்தை திருப்தி.. 2 கோரிக்கைளில் ஒருமித்த முடிவு.. வேளாண் அமைச்சர் பேட்டி
டெல்லி: டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளுடன் நடத்திய 6ம் கட்ட பேச்சுவார்த்தை திருப்தியாக இருந்ததாக வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் தெரிவித்துள்ளார். 4 கோரிக்கையில் 2 கோரிக்கைகளில் ஒருமித்த முடிவு எட்டப்பட்டது என்றும் கூறினார்.
கடந்த செப்டம்பர் மாதம் மத்திய அரசால் இயற்றப்பட்ட மூன்று வேளாண் சட்டங்களை ரத்து செய்யக் கோரி ஆயிரக்கணக்கான விவசாயிகள் போராடி வருகிறார்கள். குறிப்பாக பஞ்சாப், ஹரியானா மற்றும் உத்தரபிரதேசத்தின் சில பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் டெல்லியின் எல்லைகளில் கடந்த ஒரு மாதமாக முகாமிட்டு போராடுகிறார்கள்,

மத்திய அரசு இந்த வேளாண் சட்டங்கள் விவசாயிகளுக்கு உதவுவதற்கும் அவர்களின் வருமானத்தை அதிகரிப்பதற்கும் இலக்காகக் கொண்ட பெரிய விவசாய சீர்திருத்தம் என்கிறது. ஆனால் புதிய சட்டங்கள் குறைந்தபட்ச ஆதார விலையை இல்லாமல் செய்வதுடன். மண்டி முறையை பலவீனப்படுத்தும் என்றும், இதன் மூலம் பெரிய கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு சாதகமாகும் என்று விவசாயிகள் அஞ்சுகிறார்கள். எனவே சட்டங்களை ரத்து செய்யாவிட்டால் வரும் நாட்களில் போராட்டத்தை தீவிரப்படுத்த போவதாக மத்திய அரசை எச்சரித்து வருகிறார்கள்.
இதனிடையே போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளிடம் இன்று மத்திய அரசு ஆறாவது சுற்று பேச்சுவார்த்தை நடத்தியது. மூன்று வேளாண் சட்டங்களை ரத்து செய்வதற்கான வழிமுறைகள் மற்றும் எம்.எஸ்.பி மீதான சட்ட உத்தரவாதம் குறித்து மட்டுமே விவாதம் இருக்க வேண்டும் என்ற நிபந்தனையின் பேரில் பேச்சுவார்ததையில் விவசாய அமைப்புகள் வேளாண் அமைச்சர் தோமருடன் பங்கேற்றன,.

இந்த பேச்சுவார்த்தைக்கு பின் வேளாண் அமைச்சர் நரேந்திர சிங் தோமர் பேசுகையில், விவசாயிகளுடன் நடத்திய 6ம் கட்ட பேச்சுவார்த்தை திருப்தியாக இருந்தது.
விவசாயிகளின் 4 கோரிக்கைகளில் இரண்டில் ஒருமித்த முடிவு எட்டப்பட்டது. ஜனவரி 4ஆம் தேதி விவசாயிகளுடன் அடுத்தகட்ட பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்று கூறினார்.












Click it and Unblock the Notifications