விவசாயிகளுடனான பேச்சவார்த்தை திருப்தி.. 2 கோரிக்கைளில் ஒருமித்த முடிவு.. வேளாண் அமைச்சர் பேட்டி
டெல்லி: டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளுடன் நடத்திய 6ம் கட்ட பேச்சுவார்த்தை திருப்தியாக இருந்ததாக வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் தெரிவித்துள்ளார். 4 கோரிக்கையில் 2 கோரிக்கைகளில் ஒருமித்த முடிவு எட்டப்பட்டது என்றும் கூறினார்.
கடந்த செப்டம்பர் மாதம் மத்திய அரசால் இயற்றப்பட்ட மூன்று வேளாண் சட்டங்களை ரத்து செய்யக் கோரி ஆயிரக்கணக்கான விவசாயிகள் போராடி வருகிறார்கள். குறிப்பாக பஞ்சாப், ஹரியானா மற்றும் உத்தரபிரதேசத்தின் சில பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் டெல்லியின் எல்லைகளில் கடந்த ஒரு மாதமாக முகாமிட்டு போராடுகிறார்கள்,

மத்திய அரசு இந்த வேளாண் சட்டங்கள் விவசாயிகளுக்கு உதவுவதற்கும் அவர்களின் வருமானத்தை அதிகரிப்பதற்கும் இலக்காகக் கொண்ட பெரிய விவசாய சீர்திருத்தம் என்கிறது. ஆனால் புதிய சட்டங்கள் குறைந்தபட்ச ஆதார விலையை இல்லாமல் செய்வதுடன். மண்டி முறையை பலவீனப்படுத்தும் என்றும், இதன் மூலம் பெரிய கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு சாதகமாகும் என்று விவசாயிகள் அஞ்சுகிறார்கள். எனவே சட்டங்களை ரத்து செய்யாவிட்டால் வரும் நாட்களில் போராட்டத்தை தீவிரப்படுத்த போவதாக மத்திய அரசை எச்சரித்து வருகிறார்கள்.
இதனிடையே போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளிடம் இன்று மத்திய அரசு ஆறாவது சுற்று பேச்சுவார்த்தை நடத்தியது. மூன்று வேளாண் சட்டங்களை ரத்து செய்வதற்கான வழிமுறைகள் மற்றும் எம்.எஸ்.பி மீதான சட்ட உத்தரவாதம் குறித்து மட்டுமே விவாதம் இருக்க வேண்டும் என்ற நிபந்தனையின் பேரில் பேச்சுவார்ததையில் விவசாய அமைப்புகள் வேளாண் அமைச்சர் தோமருடன் பங்கேற்றன,.

இந்த பேச்சுவார்த்தைக்கு பின் வேளாண் அமைச்சர் நரேந்திர சிங் தோமர் பேசுகையில், விவசாயிகளுடன் நடத்திய 6ம் கட்ட பேச்சுவார்த்தை திருப்தியாக இருந்தது.
விவசாயிகளின் 4 கோரிக்கைகளில் இரண்டில் ஒருமித்த முடிவு எட்டப்பட்டது. ஜனவரி 4ஆம் தேதி விவசாயிகளுடன் அடுத்தகட்ட பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்று கூறினார்.
-
சிலிண்டர் முன்பதிவு செய்பவர்களுக்கு ஷாக் நியூஸ்! இனி இது இல்லைனா கேஸ் வராது.. மத்திய அரசின் தடை? -
பாகிஸ்தானை விட மோசமான நிலையில் இந்தியா.. உலகின் மகிழ்ச்சியான நாடுகள் ரிப்போர்ட்டில் செம பெரிய ஷாக்! -
170ல் அதிமுக.. பாஜக, பாமக, அமமுக உட்பட கூட்டணி கட்சிக்கு 64 தொகுதிகள்.. எடப்பாடி போட்டுள்ள கணக்கு! -
ஒரு தொகுதிக்குள் சுருங்கிய ஓட்டக்கார தேவர் மகன்.. தனி மரமான ஓ.பன்னீர்செல்வம்! டெபாசிட்டாவது தேறுமா? -
இரட்டை இலைக்கு ‘குட்பை’.. அதிமுகவை அடக்கிய பாஜக? திமுக கூட்டணிக்கு அடிக்கப்போகும் அதிர்ஷ்டம் -
ப்ளீஸ் சார்.. என் ஹனிமூனை விட்ருவீங்களா? கலெக்டருக்கு வித்தியாசமான மனு தந்த கேரளா அரசு பள்ளி ஆசிரியை -
சிறகடிக்க ஆசை: விஜயாவை அசிங்கப்படுத்திய வக்கீல்.. மீனா அருமை இப்போதாவது புரிந்ததே..! முத்து போட்ட அடி -
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 50% தாண்டினால் என்ன நடக்கும்? வீட்டு வாடகைப்படியிலும் மாற்றம்? -
திமுக சொன்ன அந்த வார்த்தை.. தொகுதி பங்கீட்டில் அதிருப்தியான மநீம.. நாளை கமல்ஹாசன் ஆலோசனை -
குடிப்பழக்கத்தை நிறுத்திவிட்டேன்.. பாட்டிலை தொட்டு 6 மாதமாகிவிட்டது.. ஜாலியாக சொன்ன சாஹல்! -
அதிமுக முன்னாள் அமைச்சர்களின் உருவபொம்மைகளுக்கு செருப்பு மாலை! பொள்ளாச்சியில் பரபரப்பு -
திரிஷா பற்றிய மொத்த பிரச்சனைகளுக்கும் ஒரே போஸ்டில் அவரே பதில்.. இப்படி ஒரு ரியாக்ஷனை எதிர்பார்க்கலையே












Click it and Unblock the Notifications