மிக மோசமான நாள்.. இந்தியாவில் இதுவரை இல்லாத அளவிற்கு பதிவான கொரோனா கேஸ்கள்.. ஷாக்கிங் டேட்டா!
டெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 13,103 கொரோனா கேஸ்கள் பதிவாகி உள்ளது. இதுவரை இல்லாத அளவிற்கு 24 மணி நேரத்தில் அதிக கேஸ்கள் பதிவாகி உள்ளது.
இந்தியாவில் கொரோனா கேஸ்கள் நாளுக்கு நாள் தீவிரம் அடைந்து வருகிறது. உலக அளவில் நினைத்து பார்க்க முடியாத வேகத்தில் கொரோனா பரவி வருகிறது. இந்தியாவில் மொத்த கேஸ்களின் எண்ணிக்கை 367,264 ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 341 பேர் பலியாகி இருக்கிறார்கள். 12,262 பேர் மொத்தமாக இந்தியாவில் பலியாகி உள்ளனர்.

இந்தியாவில் மொத்தம் 1,60,519 ஆக்டிவ் நோயாளிகள் உள்ளனர். மொத்தமாக 1,94,438 பேர் குணமடைந்து உள்ளனர். மகாராஷ்டிராவில் மொத்த கேஸ்களில் எண்ணிக்கை 1,16,752 ஆக உயர்வு. அங்கு நேற்று மட்டும் 3307 கேஸ்கள் பதிவானது. அங்கு பலி எண்ணிக்கை 5651 ஆக உள்ளது.
தமிழகத்திலும் நேற்று அதிகமாக கேஸ்கள் பதிவானது. தமிழகத்தில் நேற்று 2174 கேஸ்கள் பதிவானது. மொத்தமாக நேற்று 50193 பேர் தமிழகத்தில் கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டு உள்ளனர். தமிழகத்தில் பலி எண்ணிக்கை 576 ஆக உயர்ந்துள்ளது,.
டெல்லியில் நேற்று மட்டும் 2414 கேஸ்கள் புதிதாக பதிவாகி உள்ளது. அங்கு மொத்த கேஸ்களின் எண்ணிக்கை 47102 ஆக உயர்ந்துள்ளது. அங்கு மொத்தமாக இதுவரை 1904 பேர் பலியாகி உள்ளனர். குஜராத்தில் கொரோனா காரணமாக 1561 பேர் பலியாகி உள்ளனர். அங்கு நேற்று புதிதாக 520 கேஸ்கள் பதிவானது. மொத்தமாக அங்கு 25148 கொரோனா நோயாளிகள் உள்ளனர்.
Recommended Video
நாடு முழுக்க நேற்று அதிக அளவில் கொரோனா சோதனைகள் செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் மட்டும் 25 ஆயிரம் பேருக்கு நேற்று கொரோனா சோதனைகள் செய்யப்பட்டது. இதன் காரணமாகவும் கூட நாடு முழுக்க நேற்று அதிக கேஸ்கள் வந்து இருக்கலாம் என்கிறார்கள்.












Click it and Unblock the Notifications