சீனாவின் வூகான் நகரில் இருந்து 76 இந்தியர்களை மீட்டு வந்தது விமானப் படை விமானம்
டெல்லி: சீனாவின் வூகான் நகரில் இருந்து 76 இந்தியர்களை பாதுகாப்பாக மீட்டு வந்துள்ளது இந்திய விமானப் படை விமானம். மேலும் 36 வெளிநாட்டவரையும் விமானப் படை விமானம் அழைத்து வந்துள்ளது.
Recommended Video
சீனாவில் கொரோனா வைரஸ் தாக்குதல் நிலைகுலைய வைத்துள்ளது. 2000க்கும் அதிகமானோரை பலி கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் உலகின் பல நாடுகளையும் நடுநடுங்க வைத்துள்ளது.

இதனையடுத்து சீனாவில் இருந்து இந்தியர்களை பாதுகாப்பாக தாயகம் அழைத்து வரும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் ஒரு கட்டமாக கொரோனா வைரஸால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள வூகான் நகரில் இருந்து 76 இந்தியர்கள் நேற்று விமானப் படை விமானம் மூலம் டெல்லிக்கு அழைத்து வரப்பட்டனர்.
இவர்களுடன் வங்கதேசம், சீனா, மியான்மர், மாலத்தீவு, தென் ஆப்பிரிக்கா, அமெரிக்கா, மடகாஸ்கர் நாடுகளைச் சேர்ந்த 36 பேரையும் விமானப் படை விமானம் அழைத்து வந்துள்ளது. ஏற்கனவே சீனாவில் இருந்து 647 இந்தியர்கள் மீட்கப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications