ஹைட்ராக்சி குளோரோகுயின் சோதனைக்கு தடை.. ஹு உடன் திடீரென மோதும் இந்தியா.. புது சர்ச்சை!
டெல்லி: ஹைட்ராக்சி குளோரோகுயின் மருந்தின் சோதனையை நிறுத்துவதாக உலக சுகாதார மையம் அறிவித்ததற்கு இந்தியாவின் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
Recommended Video
ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மருந்தை கொரோனா பாதிப்பிற்கு மருந்தாக கொடுப்பதையும், அதில் மருத்துவ சோதனைகள் செய்வதையும் நிறுத்த வேண்டும் என்று உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது. மலேரியாவிற்கு எதிராக பயன்படுத்தப்படும் ஹைட்ராக்சிகுளோரோகுய்ன் மருந்தை கொரோனாவிற்கு எதிராக பயன்படுத்த அமெரிக்கா உள்ளிட்ட உலகின் பல நாடுகள் முயன்று வந்தது. இந்த மருந்தை அமெரிக்க அதிபர் டிரம்ப் கடந்த இரண்டு மாதம் முன் பரிந்துரை செய்தார்.

ஆனால் தற்போது ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மருந்தின் சோதனையை உலக சுகாதார மையம் நிறுத்தி உள்ளது. இந்த மருந்தின் பாதுகாப்பு குறித்த சோதனை முடிவுகள் வந்த பின் ஹைட்ராக்ஸி குளோரோகுயின் குறித்து அறிவிப்போம். அதுவரை ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மருந்தை கொரோனா பாதிப்பிற்கு மருந்தாக கொடுப்பதையும், அதில் மருத்துவ சோதனைகள் செய்வதையும் நிறுத்த வேண்டும் என்று உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் ஹைட்ராக்சி குளோரோகுயின் மருந்தின் சோதனையை நிறுத்துவதாக உலக சுகாதார மையம் அறிவித்ததற்கு இந்தியாவின் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இந்தியாவில் தற்போது ஹைட்ராக்சி குளோரோகுயின் மருந்தை அதிகமாக பயன்படுத்த மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
போலீஸ் அதிகாரிகள், முன்னிலை பணியாளர்கள், சுகாதார பணியாளர்கள், மருத்துவ பணியாளர்கள் இதை உட்கொள்ள வேண்டும் என்று அரசு பரிந்துரை செய்ய தொடங்கி உள்ளது. இந்த நிலையில்தான் உலக சுகாதார மையம் இதன் பயன்பாட்டிற்கு தடை விதித்து இருக்கிறது.
இந்த நிலையில் உலக சுகாதார மையம் இந்த தடையை விதிக்கும் முன் அனைத்து விஷயங்களையும் கருத்தில் கொள்ளவில்லை. இந்த மருந்து எவ்வளவு பலன் அளிக்கும், எவ்வளவு சக்தி வாய்ந்தது இந்த மருந்து, இது எவ்வளவு பாதுகாப்பானது என்பதை உலக சுகாதார மையம் கருத்தில் கொள்ளவில்லை .
இந்த மருந்தின் பயன்களை கருத்தில் கொள்ளாமல் உலக சுகாதார மையம் இந்த முடிவை எடுத்துள்ளது என்று மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இந்த ஹைட்ராக்சி குளோரோகுயின் மருந்து குறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று காலை முக்கிய முடிவு எடுக்க வாய்ப்புள்ளது என்று கூறுகிறார்கள்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications