மக்களுக்கு நற்செய்தி: 23 மாநிலங்களில் 47 மாவட்டங்களில் 14 நாட்களாக ஒரு கொரோனா பாதிப்பும் இல்லை!
டெல்லி: நாட்டின் 23 மாநிலங்களில் 47 மாவட்டங்களில் கடந்த 14 நாட்களாக ஒருவர் கூட கொரோனாவால் பாதிக்கப்படவில்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
Recommended Video
கொரோனாவால் இந்தியாவில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 500ஐ நெருங்கியுள்ளது. கொரோனாவை கட்டுப்படுத்த லாக்டவுன் மே 3-ந் தேதி வரை அமல்படுத்தப்பட்டிருக்கிறது.

கொரோனாவின் தாக்கம் அதிகம் இல்லாத பகுதிகளில் ஏப்ரல் 20 முதல் இயல்பு வாழ்க்கை படிப்படியாக திரும்ப உள்ளது. பல்வேறு கட்டுப்பாடுகளுடன் நாளை முதல் இயல்பு வாழ்க்கைக்கு அனுமதி அளிக்கப்பட்டிருக்கிறது.
இதனிடையே நாட்டின் 23 மாநிலங்களில் 47 மாவட்டங்களில் கடந்த 14 நாட்களாக ஒருவருக்கு கூட கொரோனா பாதிப்பு இல்லை என மத்திய அரசு தெரிவித்திருக்கிறது. கடந்த 28 நாட்களில் கர்நாடகாவின் குடகு, புதுவையின் மாகே பகுதிகளில் ஒருவருக்கு கூட கொரோனா பாதிப்பு இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications