கொரோனா தொற்று...காத்திருக்கும் பண்டிகைகள்...டல்லாகுமா விற்பனை!!
டெல்லி: கொரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் நாடு முழுவதும் பொது முடக்கம் செய்யப்பட்டுள்ளது. இதனால் ஏப்ரல் முதல் ஜூன் வரை தொழில் நிறுவனங்கள், வர்த்தக நிறுவனங்கள் மூடப்பட்டு தொழில் மந்தம் ஏற்பட்டது. இன்னும் எவ்வளவு நாட்களுக்கு கொரோனா தொற்று இருக்கும், வர்த்தகம் எப்போது மீளும் என்ற நிச்சயமற்ற தன்மை இருந்து வருகிறது.
இந்த நிலையில் இனி தீபாவளி போன்ற பண்டிகைகளும் வருகின்றன. பண்டிகைகள் வரும்போது நிறுவனங்களும் தள்ளுபடி அளிக்கின்றன. இந்த சமயத்தில், நகை விற்பனை, கார், பைக், எலக்ட்ரானிக் பொருட்கள் விற்பனை அதிகமாக இருக்கும். வெளிநாடுகளுக்கு செல்வது, சுற்றுலா செல்வது என்று விமான நிறுவனங்களுக்கும் பெரிய வருமானத்தை எட்டிப் பிடிக்கும்.

உணவுப் பொருட்கள்:
இதுமட்டுமல்ல, தினமும் அழியும் உணவுப் பொருட்களுக்கும் அதிகளவில் கிராக்கி இருக்கும். கடந்த வியாழக்கிழமை வடஇந்தியாவில் தீஜ் என்ற விழா கொண்டாடப்பட்டது. இனி வரும் ஆகஸ்ட் மாதம் ரக்ஷா பந்தன், ஈத் அல் அதா ஆகிய பண்டிகைகள் வரவிருக்கிறது. இதையொட்டி கணேஷ் சதுர்த்தி வரவுள்ளது. இதையடுத்து நாட்டின் முக்கிய பண்டிகைகள் செப்டம்பர், அக்டோபர் ஆகிய மாதங்களில் வரும்.

கையில் காசு இல்லை:
ஆனால், கடந்த ஆண்டுகளில் இருந்ததுபோன்று நடப்பாண்டில் வர்த்தக நிறுவனங்களில் பெரிய அளவில் விற்பனை இருக்காது என்றே கூறப்படுகிறது. வேலை இல்லாமல் பலரும் தங்களது தொழில்களை மாற்றிக் கொண்டு கூலி வேலைக்கு செல்கின்றனர். சிலர் வேலை இழந்து அன்றாட உணவுக்கே கஷ்டப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. தொழில் நிறுவனங்கள் இன்னும் மூடப்பட்டுள்ளன. இந்த நிலையில் தீபாவளி போன்ற பண்டிகைகளுக்கு பெரிய அளவில் செலவிட மக்கள் முன் வரமாட்டார்கள் என்ற கருத்தே எழுந்துள்ளது.

இரு சக்கர வாகன தயாரிப்பு:
பஜாஜ் போன்ற இரு சக்கர வாகன உற்பத்தியில் ஈடுபட்டு இருக்கும் நிறுவனங்கள் தொடர்ந்து கொரோனா பொது முடக்கத்திலும் உற்பத்தி செய்து வருகிறது. தீபாவளி, தசரா போன்ற பண்டிகைகளின்போது தேவை அதிகரித்தாலும், தேவைக்கு ஏற்ப வாகனங்களின் இருப்பு இருக்குமா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.

சீனாவில் இருந்து இறக்குமதி:
பொதுவாக இந்தியாவில் இருக்கும் இரு சக்கர வாகனங்ககள் மூலப் பொருட்களுக்கு சீனாவையே நம்பி இருக்கின்றன. இந்தியாவுக்கு சீனாவில் இருந்து 26% மூலப்பொருட்கள் இறக்குமதி செய்யப்படுகின்றன. சீனாவை தவிர்த்து வேறு நாடுகளில் இருந்தும் இறக்குமதி செய்ய முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.
Recommended Video

பயணிகள் இல்லை:
கொரோனா தொற்று காரணமாக உள்நாட்டிற்குள் 50 சதவீத விமானங்கள் அனுமதிக்கப்படுகின்றன. ஆனால், விமானங்கள் காலியாக செல்கின்றன. மக்கள் இன்னும் விமானங்களில் பயணிக்க தங்களை தயார்படுத்திக் கொள்ள விரும்பவில்லை என்பதையே இது காட்டுகிறது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications