24 மணி நேரத்தில் 11,000+ கொரோனா கேஸ்கள்.. 321 மரணங்கள்.. இந்தியாவில் மிக மோசமாகும் நிலைமை!
டெல்லி: இந்தியாவில் கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 333,008 ஆக உயர்ந்துள்ளது. உலக அளவில் இந்தியா கொரோனா பாதிப்பில் நான்காம் இடத்தில் உள்ளது.
Recommended Video
இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா மிக தீவிரமாக பரவி வருகிறது. பிப்ரவரி இறுதியில் தொடங்கிய பாதிப்பு தற்போது விஸ்வரூபம் எடுத்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் இந்தியாவில் 11,382 கொரோனா கேஸ்கள் பதிவாகி உள்ளது.
இந்தியாவில் கொரோனா பலி எண்ணிக்கை 9,520 ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் நேற்று மட்டும் கொரோனா காரணமாக 321 பேர் பலியாகி உள்ளனர். இந்தியாவில் இதுவரை 1,69,689 பேர் குணமடைந்து உள்ளனர்.
1,53,760 பேர் ஆக்டிவ் நோயாளிகளாக இருக்கிறார்கள். 8,944 பேர் மிக மோசமான உடல் நிலையோடு இருக்கிறார்கள். ஒரே நாளில் இந்தியாவில் 9952 பேர் குணப்படுத்தப்பட்டு உள்ளனர்.இந்தியாவில் மகாராஷ்டிராதான் மிக மோசமாக கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டு உள்ளது.
மகாராஷ்டிராவில் மொத்தம் 1,07,958 கேஸ்கள் உள்ளது. தமிழகத்தில் மொத்தம் 44,661 பேர் கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டு உள்ளனர். டெல்லியில் 41182 பேர் கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். குஜராத்தில் 23,038 கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள்.
சாதாரண சளி, காய்ச்சல்... பற்றிக்கொள்ளும் கொரோனா பீதி... கசாயத்தை நாடும் மக்கள்
உத்தர பிரதேசத்தில் 3,118 பேர் கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். ராஜஸ்தானில் 12,401 பேர் கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். மேற்கு வங்கத்தில் 10,698 பேர் கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள்.மத்திய பிரதேசத்தில் 10,641 பேர் கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள்.