Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கொரோனா பரவல் அதிகரிப்பு- மாநில சுகாதாரத்துறை அமைச்சர்களுடன் மத்திய அமைச்சர் நாளை ஆலோசனை

Subscribe to Oneindia Tamil

டெல்லி: கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் மாநிலங்களின் சுகாதாரத்துறை அமைச்சர்களுடன் மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா நாளை ஆலோசனை நடத்த உள்ளார்.

இந்தியாவில் ஒருநாள் கொரோனா பாதிப்பு தற்போது 5,000-த்தை தாண்டியுள்ளது. இந்தியாவில் கொரோனா ஆக்டிவ் கேஸ்கள் எண்ணிக்கையும் 25,000-த்தை தாண்டியிருக்கிறது. கொரோனா மரணங்களும் பரவலாக பதிவாகி இருக்கின்றன.

Coronavirus: Union Minister Mansukh Mandaviya to hold review with states Health Ministers

இந்த நிலையில் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக மாநிலங்களின் சுகாதாரத் துறை அமைச்சர்களுடன் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா நாளை ஆலோசனை நடத்த உள்ளார்.

நாட்டில் ஏற்கனவே பல மாநிலங்களில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பொது இடங்களில் பொதுமக்கள் முக கவசம் அணியவும் அறிவுறுத்தப்பட்டிருக்கிறது. இந்த நிலையில் நாளை மத்திய அமைச்சர் நடத்தும் ஆலோசனைக் கூட்டத்தில் கூடுதல் வழிகாட்டுதல் நெறிமுறைகள் வெளியிடப்படக் கூடும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.டெல்லி: கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் மாநிலங்களின் சுகாதாரத்துறை அமைச்சர்களுடன் மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா நாளை ஆலோசனை நடத்த உள்ளார்.

இந்தியாவில் ஒருநாள் கொரோனா பாதிப்பு தற்போது 5,000-த்தை தாண்டியுள்ளது. இந்தியாவில் கொரோனா ஆக்டிவ் கேஸ்கள் எண்ணிக்கையும் 25,000-த்தை தாண்டியிருக்கிறது. கொரோனா மரணங்களும் பரவலாக பதிவாகி இருக்கின்றன. கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் கொரோனா பாதிப்பு எப்படி இருந்ததோ அதே நிலை தற்போது உருவாகி இருக்கிறது.

இந்த நிலையில் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக மாநிலங்களின் சுகாதாரத் துறை அமைச்சர்களுடன் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா நாளை ஆலோசனை நடத்த உள்ளார்.

நாட்டில் ஏற்கனவே பல மாநிலங்களில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பொது இடங்களில் பொதுமக்கள் முக கவசம் அணியவும் அறிவுறுத்தப்பட்டிருக்கிறது. இந்த நிலையில் நாளை மத்திய அமைச்சர் நடத்தும் ஆலோசனைக் கூட்டத்தில் கூடுதல் வழிகாட்டுதல் நெறிமுறைகள் வெளியிடப்படக் கூடும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியாவில் கொரோனா நிலவரம்: நாடு தழுவிய தடுப்பூசி இயக்கத்தின் கீழ் இதுவரை மொத்தம் 220.66 கோடி தடுப்பூசி டோஸ்கள் வழங்கப்பட்டுள்ளன. இதில் 95.21 கோடி இரண்டாம் தவணை தடுப்பூசி டோஸ்களும், 22.87 கோடி முன்னெச்சரிக்கை டோஸ்களும் அடங்கும். கடந்த 24 மணி நேரத்தில் 1,993 டோஸ் தடுப்பூசிகள் அளிக்கப்பட்டுள்ளன.

இந்தியாவில் தற்போது 25,587 பேர் கொவிட் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இது 0.06 சதவீதமாகும். தொற்றிலிருந்து மீண்டவர்களின் விகிதம் 98.75 சதவீதம். கடந்த 24 மணி நேரத்தில் 2,826 பேர் பாதிப்பிலிருந்து மீண்டுள்ளனர். இதுவரை குணமடைந்தவர்களின் எண்ணிக்கை மொத்தம் 4,41,82,538 பேர். கடந்த 24 மணி நேரத்தில் 5,335 பேருக்கு புதிதாக தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. தினசரி பாதிப்பு விகிதம் 3.32% வாராந்திர பாதிப்பு விகிதம் 2.89%. இதுவரை மொத்தம் 92.23 கோடி சோதனைகள் நடத்தப்பட்டுள்ளன. கடந்த 24 மணி நேரத்தில் 1,60,742 சோதனைகள் நடத்தப்பட்டுள்ளன.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+