Social Distancing- கொரோனா பரவாமல் தடுக்க சமூக ஒன்றுகூடல்களைத் தவிர்ப்போம்
டெல்லி: கொரோனா தொடர்ந்து பரவாமல் தடுக்கும் வகையில் சமூக ஒன்று கூடல்களை கூடுமானவரை தவிர்ப்பதை ஒவ்வொருவரும் தவறாமல் பின்பற்றுதல் அவசியமாகும். இதனைத்தான் அனைத்து அரசுகளும் வலியுறுத்தியும் வருகின்றன.
கொரோனா என்பது மனிதர்களிடையே எளிதில் பரவக் கூடியதாக இருக்கிறது. இதனால்தான் மனிதர்கள் ஒன்று கூடும் இடங்களில் அனைத்துவிதமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

மேலும் பொது கூட்டங்கள், பொது வழிபாடுக, ஒன்று கூடுதல்களைத் தவிர்க்க வேண்டும் என்றும் அரசுகள் வேண்டுகோள் விடுக்கின்றன. இப்படியான சமூக ஒன்றுகூடல்களைத் தவிர்ப்பதன் மூலம் வைரஸ் நோய் மற்றவர்களுக்கு பரவுவதைத் தடுக்கவும் முடியும்.
மற்றொரு தனிமனிதராக உங்களுக்கு வைரஸ் தொற்று தாக்காமலும் இருக்கும். தனி மனிதர் மற்றும் சமூக நலன் கருதியே ஒன்றுகூடல்களைத் தவிர்க்க வேண்டும் என்கின்றன அரசுகள். இதனைவிடுத்து எங்களது நம்பிக்கைகள், பழக்க வழக்கங்கள்... அவற்றை கைவிட முடியாது என அரதப்பழமைவாதம் பேசுவதில் எந்த ஒரு பயனுமே இல்லை என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்.
ஈரான் அரசும் இப்படியான ஒன்று கூடல்களைத்தான் தவிர்க்க எச்சரித்தது. ஆனால் இதனை பொதுமக்கள் மீறுதலை வழக்கமாக வைத்ததாலேயே அந்த நாட்டு அரசு, இப்படியே போனால் பல லட்சம் பேர் பலியாகும் நிலை வரும் எனவும் எச்சரித்துள்ளதையும் நாம் நினைவில் கொள்ள வேண்டும். சரி பொது நிகழ்ச்சிகளுக்குத்தான் போக வேண்டாம் எனில் பணிகளை எப்படி மேற்கொள்வது?
விஞ்ஞானமயமாகிவிட்ட இந்த காலத்தில் அலுவலகங்களுக்கு சென்றுதான் பணிபுரிய வேன்டும் என்பது இல்லை. வீட்டில் இருந்தே பணிபுரிகிற வாய்ப்பை பெரும்பாலான நிறுவனங்கள் ஏற்படுத்தி கொடுத்திருக்கின்றன. பெருமளவிலான பணியாளர்கள் ஒன்று கூடுவது அவசியம் என்கிற நிலையைக் கூட இத்தகைய வீட்டில் இருந்து பணிபுரிதல் வாய்ப்புகள் எளிதாக மாற்றிவிடுகின்றன. இதனை ஏற்கும் மனநிலைக்கு நாமும் முன்வர வேண்டும்.
சீனாவில்தான் கொரோனா வைரஸ் தாக்கத் தொடங்கியது. அதே சீனாதான் இப்போது இந்த தாக்குதலில் இருந்து விடுபட்டும் வருகிறது. இதற்கு காரணம் முழு வீச்சில் சமூக ஒன்று கூடல்களை தடுத்து நிறுத்தியதும்கூட என்பதும் சுட்டிக்காட்டப்படுகிறது. ஆனால் சமூக ஒன்று கூடல்களில் இருந்து தங்களை தனிமைப்படுத்துதல் அல்லது தவிர்த்தல் என்பது இதுபோன்ற காலங்களில் மிகவும் அவசியமானதே.
-
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
Free Fridge: அதிமுகவின் இலவச பிரிட்ஜ்! யாருக்கெல்லாம் கிடைக்கும்? எவ்வளவு ரூபாய்க்கு இருக்கும்? -
யார் அந்த அதிர்ஷ்டசாலி? நகைக்கடை, விவசாயக்கடன் தள்ளுபடி, மாதம் 10000 சலுகை? விவசாயிகளின் செம திட்டம் -
சிறகடிக்க ஆசை : கண்ணீர் விட்டு அழுத மனோஜ்.. இவருக்கா இந்த நிலைமை? முத்து மீனா செய்த செயல்! கதையே மாறுது -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
Illatharasi: இல்லத்தரசிகளுக்கு ரூ 8000! திமுக கூப்பனில் பிரிட்ஜ், வாஷிங் மெஷின் வாங்க முடியுமா? -
சிறுசேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்தவர்களுக்கு சூப்பர் சர்ப்ரைஸ்.. ஏப்ரல் 1 மத்திய அரசின் அதிரடி -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே -
சிலிண்டர் ஏஜென்சி வைத்திருக்கும் நண்பனின் தந்தைக்கு மாதம் 1.90 லட்சம் வருமானம்.. நெட்டிசன் தகவல் -
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்? -
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்












Click it and Unblock the Notifications