Social Distancing- கொரோனா பரவாமல் தடுக்க சமூக ஒன்றுகூடல்களைத் தவிர்ப்போம்
டெல்லி: கொரோனா தொடர்ந்து பரவாமல் தடுக்கும் வகையில் சமூக ஒன்று கூடல்களை கூடுமானவரை தவிர்ப்பதை ஒவ்வொருவரும் தவறாமல் பின்பற்றுதல் அவசியமாகும். இதனைத்தான் அனைத்து அரசுகளும் வலியுறுத்தியும் வருகின்றன.
கொரோனா என்பது மனிதர்களிடையே எளிதில் பரவக் கூடியதாக இருக்கிறது. இதனால்தான் மனிதர்கள் ஒன்று கூடும் இடங்களில் அனைத்துவிதமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

மேலும் பொது கூட்டங்கள், பொது வழிபாடுக, ஒன்று கூடுதல்களைத் தவிர்க்க வேண்டும் என்றும் அரசுகள் வேண்டுகோள் விடுக்கின்றன. இப்படியான சமூக ஒன்றுகூடல்களைத் தவிர்ப்பதன் மூலம் வைரஸ் நோய் மற்றவர்களுக்கு பரவுவதைத் தடுக்கவும் முடியும்.
மற்றொரு தனிமனிதராக உங்களுக்கு வைரஸ் தொற்று தாக்காமலும் இருக்கும். தனி மனிதர் மற்றும் சமூக நலன் கருதியே ஒன்றுகூடல்களைத் தவிர்க்க வேண்டும் என்கின்றன அரசுகள். இதனைவிடுத்து எங்களது நம்பிக்கைகள், பழக்க வழக்கங்கள்... அவற்றை கைவிட முடியாது என அரதப்பழமைவாதம் பேசுவதில் எந்த ஒரு பயனுமே இல்லை என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்.
ஈரான் அரசும் இப்படியான ஒன்று கூடல்களைத்தான் தவிர்க்க எச்சரித்தது. ஆனால் இதனை பொதுமக்கள் மீறுதலை வழக்கமாக வைத்ததாலேயே அந்த நாட்டு அரசு, இப்படியே போனால் பல லட்சம் பேர் பலியாகும் நிலை வரும் எனவும் எச்சரித்துள்ளதையும் நாம் நினைவில் கொள்ள வேண்டும். சரி பொது நிகழ்ச்சிகளுக்குத்தான் போக வேண்டாம் எனில் பணிகளை எப்படி மேற்கொள்வது?
விஞ்ஞானமயமாகிவிட்ட இந்த காலத்தில் அலுவலகங்களுக்கு சென்றுதான் பணிபுரிய வேன்டும் என்பது இல்லை. வீட்டில் இருந்தே பணிபுரிகிற வாய்ப்பை பெரும்பாலான நிறுவனங்கள் ஏற்படுத்தி கொடுத்திருக்கின்றன. பெருமளவிலான பணியாளர்கள் ஒன்று கூடுவது அவசியம் என்கிற நிலையைக் கூட இத்தகைய வீட்டில் இருந்து பணிபுரிதல் வாய்ப்புகள் எளிதாக மாற்றிவிடுகின்றன. இதனை ஏற்கும் மனநிலைக்கு நாமும் முன்வர வேண்டும்.
சீனாவில்தான் கொரோனா வைரஸ் தாக்கத் தொடங்கியது. அதே சீனாதான் இப்போது இந்த தாக்குதலில் இருந்து விடுபட்டும் வருகிறது. இதற்கு காரணம் முழு வீச்சில் சமூக ஒன்று கூடல்களை தடுத்து நிறுத்தியதும்கூட என்பதும் சுட்டிக்காட்டப்படுகிறது. ஆனால் சமூக ஒன்று கூடல்களில் இருந்து தங்களை தனிமைப்படுத்துதல் அல்லது தவிர்த்தல் என்பது இதுபோன்ற காலங்களில் மிகவும் அவசியமானதே.
-
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
29 + 9.. அதிமுக கூட்டணியில் பாஜக - அமமுகவுக்கு எத்தனை சீட்? இறங்கி வராத எடப்பாடி பழனிச்சாமி -
உலக நாடுகளுக்கே மிகப்பெரிய ஆபத்து.. நிலைமை கையை மீறி போகுது.. ரஷ்யா புதின் தந்த 'ஷாக்' வார்னிங் -
"நீங்கள் ஸ்டாலினை சீண்டி இருக்கலாம்.. ஆனால் என்னிடம் வேண்டாம்.!" ஆளுநர் ரவிக்கு மம்தா எச்சரிக்கை -
பவன் கல்யாண் போட்ட தூண்டில்.. நாமக்கல்லில் 70% எகிறும் விஜய் கிராஃப்.. திமுகவுக்கு 4 பக்கம் ஆபத்து? -
எடப்பாடியை முதல்வராக மோடி - அமித்ஷா அறிவிக்காதது ஏன்.. காரணம் இதுதான்.. உடைத்த பிரபலம் -
விசிக 8, மதிமுக 4.. நாளைக்குள் தொகுதி பங்கீட்டை முடிக்கும் திமுக.. குறைந்த தொகுதிகளில் உதயசூரியன்! -
ஒரு குண்டு கூட வீசாமல்.. அமெரிக்காவை காலி செய்யும் சீனாவின் "ரகசிய" ஆயுதம்.. ஆட்டம் மொத்தமா மாறுது -
பச்சை, வெள்ளை, சர்க்கரை ரேஷன் அட்டையில் அரசு சலுகைகள்! 3 மாதம் பொருட்கள் வாங்காவிட்டால் கார்டு கட்? -
175 சீட் "மாஸ்டர் பீஸ்" தலைகீழாக போகுதே? கியரை மாற்றிய திமுக, அஇஅதிமுக.. லட்டு சான்ஸ் மிஸ் ஆகிறதே? -
நாடு முழுதும் ESMA அமல்.. கியாஸ் சிலிண்டர் தட்டுப்பாட்டால் மத்திய அரசு அதிரடி.. மீறினால் அவ்வளவுதான்












Click it and Unblock the Notifications