ஜூலை 14க்கு பிறகு.. நாட்டில் முதல் முறையாக தினசரி கொரோனா பாதிப்பு குறைந்தது.. ஆனா காரணம் இதுதான்
டெல்லி: ஜூலை 14ம் தேதிக்கு பிறகு, முதல் முறையாக, இந்தியாவில், தினசரி கொரோனா நோய்த் தொற்று, 30,548 என்ற அளவுக்கு குறைந்துள்ளது என்ற தகவலை மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.
நாட்டில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 88.45 லட்சம் என்ற அளவுக்கு உள்ளது. நேற்று காலை முதல் திங்கள்கிழமை காலை வரை நாடு முழுக்க கொரோனாவால் 435 பேர் பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை, 1 லட்சத்து 30 ஆயிரத்து 70 என்ற அளவில் உள்ளது. கொரோனா தாக்கப்பட்டதில் 82.49 லட்சம் பேர், நோய் பாதிப்பிலிருந்து மீண்டுள்ளனர்.
ஜூலை 14ம் தேதிக்கு பிறகு நாட்டில் கொரோனா பாதிப்பு அதிகரித்தது. அதை ஒப்பிட்டால், இப்போதுதான் முதல் முறையாக ஒரு நாளைய கொரோனா பாதிப்பு இந்த அளவுக்கு குறைந்துள்ளது. ஆனால் இது மகிழ்ச்சியடையக் கூடிய விஷயமா என்பதுதான் கேள்வி.

ஏனெனில், கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பு குறைவாக இருக்க காரணம், நோய் பாதிப்பு குறைந்ததா, அல்லது, பரிசோதனை எண்ணிக்கை குறைந்ததா என்ற கேள்வி எழுந்துள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமை முதல், 10 லட்சத்திற்கும் குறைவான சாம்பிள்கள்தான் பரிசோதிக்கப்பட்டுவருகிறது. கடந்த சனிக்கிழமை 8 லட்சம் பரிசோதனைகள் மட்டும் செய்யப்பட்டுள்ளன. இதனால்தான், பாதிப்பு எண்ணிக்கை குறைவாக இருந்துள்ளதாக கூறப்படுகிறது.
-
100% எத்தனால் எரிபொருள்.. கிரீன் சிக்னல் கொடுத்த மத்திய அரசு! பெரிய பிரச்சனை.. மக்களே உஷார்! -
ஒரு சொட்டு கூட பெட்ரோல் இருக்காது.. ஆனாலும் வண்டி பட்டாசாக ஓடும்.. அதென்ன E100 எரிபொருள்? -
இந்தியக் கப்பல்கள் மீது ஈரான் ட்ரோன் தாக்குதல்.. டிரம்பின் பகீர் குற்றச்சாட்டும், பின்னணியும்! -
இந்தியர்கள் உட்பட வெளிநாட்டினருக்கு மட்டும் தடை.. AI வைத்து அமெரிக்கா ஆடும் கேம்? பின்னணி -
60 எச்சரிக்கை.. 8 முறை விமானம் மூலம் வார்னிங்.. அமெரிக்கா தாக்குதலில் இந்தியர்கள் பலியானது எப்படி? -
இந்தியாவை சூழும் புதிய பிரச்சனை! 64% நிலைமை மோசம்! சாட்டிலைட் படங்களில் தெரிய வந்த அதிர்ச்சி -
சீனா, பாகிஸ்தானுக்கு ஷாக் கொடுத்த இந்தியா! 2 நாட்களில்.. 3 ஏவுகணை சோதனைகள்! DRDO அசத்தல்! -
இந்திய மாலுமிகள் மீது அட்டாக்! அமெரிக்க வெளியுறவு செயலாளரை கூப்பிட்டு கண்டனம் தெரிவித்த மத்திய அரசு! -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை -
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான்












Click it and Unblock the Notifications