நிலைமை மோசமாகிவிட்டது.. கொரோனா ஸ்டேஜ் 3ல் நுழைந்துவிட்டோம்.. இந்திய மெடிக்கல் அசோசியேஷன் எச்சரிக்கை!
டெல்லி: இந்தியாவில் கொரோனா பாதிப்பு மிக மோசமான நிலையில் உள்ளது, நாம் ஸ்டேஜ் 3 பரவலுக்குள் நுழைந்துவிட்டோம் என்று இந்திய மெடிக்கல் அசோசியேஷன் (IMA) தெரிவித்துள்ளது.
இந்தியாவில் நேற்று மட்டும் 34000 கொரோனா கேஸ்கள் ஒரே நாளில் பதிவானது. இதனால் இந்தியாவில் மொத்த கொரோனா பாதிப்பு 1058318 ஆக உயர்ந்துள்ளது. பலி எண்ணிக்கை 26535 ஆக உயர்ந்துள்ளது.
நிமிடத்திற்கு நிமிடம் இந்தியாவில் கொரோனா கேஸ்கள் மற்றும் பலி எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கடந்த 12 மணி நேரத்தில் 17 ஆயிரம் கேஸ்கள் வந்துள்ளது.

மோசமான பரவல்
இந்த நிலையில் இந்தியாவில் கொரோனா பாதிப்பு மிக மோசமான நிலையில் உள்ளது, நாம் ஸ்டேஜ் 3 பரவலுக்குள் நுழைந்துவிட்டோம் என்று இந்திய மெடிக்கல் அசோசியேஷன் (IMA) தெரிவித்துள்ளது. இது தொடர்பாக ஐஎம்ஏ தலைவர் விகே மோங்கா தெரிவித்துள்ள கருத்தில், இந்தியாவில் வேகமாக கொரோனா கேஸ்கள் அதிகரிக்க தொடங்கி உள்ளது.

தினமும் வரும் கேஸ்கள்
தினமும் 30 ஆயிரத்திற்கும் அதிகமான கேஸ்கள் வர தொடங்கி உள்ளது. இந்தியாவில் மிக மிகவும் மோசமான சூழ்நிலை ஆகும். இதற்கு பல காரணங்கள் இருக்கிறது. முன்பு நகரத்தில் மட்டுமே கொரோனா பரவியது. தற்போது கிராமத்திற்கும் கொரோனா பரவ தொடங்கி உள்ளது. இது மிக மோசமான அறிகுறியாகும். இதனால்தான் ஸ்டேஜ் 3 பரவலான சமூக பரவல் ஏற்பட்டுவிட்டது என்று கூறுகிறோம்.

மிக கடினம்
இதை கட்டுப்படுத்துவது கடினம். கிராமங்கள் முழுக்க கொரோனா பரவல் வேகம் எடுக்க தொடங்கி உள்ளது. நினைத்தை விட வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இதை தடுக்க 70% பேருக்கு கொரோனா ஏற்பட்டு, அதில் இருந்து அவர்கள் மீள வேண்டும், அல்லது தடுப்பூசி கண்டுபிடிக்க வேண்டும். இதை தவிர வேறு வழியில்லை என்று அவர் தனது பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.

கேரளா ஒப்புக்கொண்டது
கேரளாவிலும் திருவனந்தபுரம் உள்ளிட்ட பகுதியில் சமூக பரவல் ஏற்பட்டு இருப்பதாக அம்மாநில அரசு ஒப்புக்கொண்டு இருக்கிறது.ஆனால் இன்னும் மத்திய அரசு சமூக பரவலை ஒப்புக்கொள்ளவில்லை. கொரோனா சமூக பரவல் ஏற்பட்டுவிட்டதாக மத்திய அரசோ, தமிழக அரசோ கூறவில்லை. ஆனால் புதிய திருப்பமாக இந்திய மெடிக்கல் அசோசியேஷன் (IMA) இந்தியாவில் சமூக பரவல் ஏற்பட்டுவிட்டது என்று தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications