நாட்டிலேயே முதல்முறை.. உடலில் கீறல் கூட இருக்காது.. ராஜு ஸ்ரீவத்சவா போஸ்ட்மார்ட்டம் பின்னணி
டெல்லி: மறைந்த பாலிவுட் நடிகர் ராஜு ஸ்ரீவத்சவாவிற்கு உடலை வெட்டாமல் மெய்நிகர் முறையில் உடல் கூறாய்வு செய்யப்பட்டுள்ளது. நாட்டிலேயே முதல்முறையாக உடலை வெட்டாமல் உடல் கூறாய்வு செய்யப்படுவது இதுவே முதல்முறையாகும்.
பாலிவுட் திரையுலகின் பிரபல நகைச்சுவை நடிகரான ராஜு ஸ்ரீவஸ்தவா கடந்த ஆகஸ்ட் 10ம் தேதி உடற்பயிற்சி கூடத்தில் பயிற்சி செய்துகொண்டிருக்கும்போது திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டு மயங்கி விழுந்தார்.
இதனையடுத்து அவர் டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.

பிரபலங்கள் இரங்கல்
ராஜு ஸ்ரீவஸ்தவா மறைந்த செய்தியை அவரது குடும்பத்தினர் உறுதி செய்துள்ளனர். இதனையடுத்து அவரது மறைவுக்கு பிரபலங்கள் இரங்கல் தெரிவித்துவருகின்றனர். இவரது மறைவு கலையுலகுக்கு மிகப்பெரிய இழப்பு என பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்ட ஏராளமான பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

நவீன முறையில் உடற்கூறாய்வு
எய்ம்ஸ் மருத்துவமனையில் உயிரிழந்த நடிகர் ராஜு ஸ்ரீவஸ்தவாவின் உடல் மருத்துவர்களால் நவீன வடிவில் மெய்நிகர் முறையில் உடற்கூறாய்வு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் நாட்டிலேயே முதல்முறையாக மெய்நிகர் முறையில் உடற்கூறாய்வு செய்யப்பட்டுள்ளது. தெற்கு ஆசியாவிலேயே டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் முதல் மெய்நிகர் தடயவியல் ஆய்வகம் அமைக்கப்பட்டுள்ளது. அதன் மூலமாகவே மெய்நிகர் முறையில் உடற்கூறாய்வு செய்யப்பட்டுள்ளது.

நவீன முறை என்றால் என்ன?
இதுகுறித்து எய்ம்ஸ் மருத்துவமனையின் தடயவியல் பிரிவின் தலைமை மருத்துவர் சுதிர் குப்தா கூறுகையில், ஒருவர் உயிரிழந்தால், உடலில் உள்ள அனைத்து பாகங்கள் அறுக்கப்பட்டு மருத்துவர்களால் பரிசோதனை செய்யப்படும். அதன் பின்னர் மீண்டும் அனைத்து பாகங்களும் சரியாக தைக்கப்பட்டு உறவினர்களிடம் உடல் ஒப்படைக்கப்படும். இதுதான் பொதுவாக செய்யப்படும் உடற்கூறாய்வு முறை. இதற்கு சில நேரம், சில நாட்கள் கூட காத்திருக்க வேண்டும். இவ்வகைக்கு பெரும்பாலான மக்கள் ஆட்சேபம் தெரிவித்து வருகிறார்கள்.

மெய்நிகர் முறை
இந்த மெய்நிகர் முறையில், உடல் ஒரு வளைவில் வைக்கப்பட்டு சிடி ஸ்கேன் செய்யப்படும். இந்த சிடி ஸ்கேன் நுட்பம், உடலில் உள்ள அனைத்து பகுதிகளையும் மருத்துவர்களுக்கு காட்டிவிடும். பழைய முறையில் உடலில் உள்ள சில பகுதிகளை மருத்துவர்ளால் பார்க்க முடியாது. ஆனால் மெய்நிகர் முறையில் உடலில் உள்ள அனைத்து பாகங்களையும் மருத்துவர்களால் தெரிந்துகொள்ள முடியும். மெய்நிகர் முறையிலான உடற்கூறாய்வு நாங்கள் நேரலையில் பார்ப்பதோடு, எண்ணற்ற முறை பிரேத பரிசோதனை அறிக்கையை மருத்துவர்களால் படிக்க முடியும் என்று தெரிவித்தார்.

எவ்வளவு செலவு?
இந்த மெய்நிகர் முறையிலான உடற்கூறாய்வு முறை கண்டறிய எய்ம்ஸ் மருத்துவர்கள் அமெரிக்கா, ஐரோப்பா உள்ளிட்ட பகுதிகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டனர். அங்கிருந்து ஜெர்மனி உள்ளிட்ட நாடுகளில் இந்த தொழில்நுட்பம் கண்டுபிடிக்கப்பட்டது. டெல்லியில் மெய்நிகர் தடயவியல் ஆய்வு கூடத்தை அமைக்க சுமார்ரூ.10 கோடி வரை செலவிடப்பட்டுள்ளது. நடிகர் ராஜு ஸ்ரீவஸ்தவா உடலில் செய்யப்பட்ட உடற்கூறாய்வில் ஒரே ஒரு ஊசி மட்டுமே கையில் குத்தப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. அதுவும் எய்ம்ஸ் மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்ற காலத்தில் செலுத்தப்பட்டது என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இரவிலும் பிரேத பரிசோதனை
அதேபோல் எய்ம்ஸ் மருத்துவமனையில் 24 மணி நேரமும் உடற்கூறாய்வு நடைபெற்று வருவதாக சுதிர் குப்தா தெரிவித்துள்ளார். இந்த புதிய தொழில்நுட்பத்தின் சிறப்பு என்னவென்றால், இதுபோன்ற உடற்கூறாய்வை இரவு நேரங்களில் செய்யும்போதும், அதன் முடிவுகள் மிகவும் சிறப்பாக உள்ளன. அந்த முடிவுகள் நீதிமன்றத்தாலும் ஏற்றுக்கொள்ளப்படும் என்று தெரிவித்தார்.
-
முதல் விக்கெட்? திமுக கூட்டணிக்கு ‘குட்பை' சொல்லும் வேல்முருகன்.. அதிருப்திக்கு என்ன காரணம்? பின்னணி இதுதான் -
ஆதவை கண்டித்த ரஜினிகாந்த்..பாஜக சரத்குமாரை எப்போது கண்டிப்பிங்க.. வீடியோவால் சூப்பர் ஸ்டாரை சீண்டும் தவெக -
130 தொகுதிகளில் வெற்றி! திமுகவை அலற விட்ட எம்ஜிஆர்.. 77க்குப் பின் 10 ஆண்டுகள் பறந்த அதிமுக கொடி! -
"போரில் புதின் என்ட்ரி".. ஈரான் உச்ச தலைவரை ராணுவ விமானத்தில் தூக்கி சென்ற ரஷ்யா? பரபரப்பு தகவல் -
காட்டி கொடுக்கும் ரஷ்யா.. அமெரிக்க படைகள் தலைக்கு மேல் சுற்றும் கத்தி.. பெரிய சிக்கலில் டிரம்ப்? -
சிங்கம் களமிறங்கிடுச்சு.. காலை சிவி சண்முகம்.. மாலை திண்டுக்கல் சீனிவாசன்! வாயை விட்டதால் கண்டனம்! -
பழைய மீட்டர் போய் புது மீட்டர் வந்தாலே கரண்ட் பில் எகிறுகிறதா? EB வாரியம் சொல்லாத அந்த 1 ரகசியம் இதோ -
"விவாகரத்து + தேர்தல்".. சென்னையில் சொத்துகளை அவசரஅவசரமாக விற்கும் நடிகர் விஜய்..ஷாக் காரணங்கள் -
வாரத்தில் 4 நாள் தான் வேலை.. 3 நாள் லீவு! எரிபொருள் தட்டுப்பாட்டை கட்டுப்படுத்த இலங்கை அதிரடி முடிவு -
சூப்பர் ஸ்டார் ரஜினி சொன்ன 4 பேரை கவனிச்சீங்களா? விஜய்யை முளையிலேயே ஆஃப் செய்து? எங்கேயோ கேட்ட குரல் -
கூட்டணி சேர விடாமல் விஜய்யை தடுக்கும் "அந்த" 2 பேர்? பணத்திற்கு எங்க போறது? குமுறும் தவெகவினர் -
Thaai Kizhavi OTT: ஓடிடியில் வெளியாகும் தாய் கிழவி.. எப்போது, எதில் பர்க்கலாம்? வெளியான தகவல்












Click it and Unblock the Notifications