Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தமிழகத்தை தொடர்ந்து வரிசை கட்டிய கர்நாடகா! வறட்சி நிதி எங்கே? மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் அட்வைஸ்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: கடும் வறட்சியால் பாதிக்கப்பட்டிருக்கும் தங்கள் மாநிலத்திற்கு வறட்சி நிவாரண நிதி வழங்க வேண்டும் என்று கர்நாடக அரசு மத்திய அரசுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், இந்த விவகாரத்தில் போட்டி இருக்க கூடாது என்று அறிவுறுத்தியுள்ளனர்.

கர்நாடக மாநிலத்தில் கடந்த ஆண்டு பருவமழை எதிர்பார்த்த அளவுக்கு மழை பொழிவை கொடுக்கவில்லை. எனவே, மாநிலத்தின் முக்கிய அணைகளில் நீர் முன்னெப்போதையும் விட குறைந்திருக்கிறது. இதனால் பெங்களூர் போன்ற நகரங்களில் கடும் தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டிருக்கிறது. இது சுமார் ரூ.18 ஆயிரம் கோடிக்கு மேல் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாக அம்மாநில அரசு கூறியுள்ளது. வறட்சியை எதிர்கொள்ளள நிவாரணம் கேட்டிருந்த நிலையில், மத்திய அரசு தரப்பிலிருந்து நிவாரணம் இன்னும் வழங்கப்படவில்லை.

Court instructs not to compete as Karnataka government has asked for drought fund

எனவே, மத்திய அரசுக்கு நிவாரணம் வழங்க உத்தரவிட வேண்டும் என்று கூறி உச்சநீதிமன்றத்தில் மாநில அரசு வழக்கு தொடுத்திருந்தது. இந்த வழக்கு இன்று நீதிபதிகள் பி.ஆர்.கவாய் மற்றும் சந்தீப் மேத்தா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. மத்திய அரசு தரப்பில் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா மற்றும், கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஆர்.வெங்கடரமணி ஆஜராகியிருந்தனர்.

கர்நாடக மாநில அரசு சார்பில் ஆஜராகியிருந்த மூத்த வழக்கறிஞர் கபில் சிபில், "கடந்த ஆண்டு நடுப்பகுதியில் மாநில அரசு வறட்சி குறித்து மத்திய அரசுக்கு கடிதம் எழுதியிருந்தது. இதனையடுத்து ஒரு குழு அமைக்கப்பட்டு, அக்குழு ஆய்வை மேற்கொண்டது. குழுவின் அறிக்கை மத்திய அரசுக்கு கடந்த ஆண்டு அக்டோபரில் வழங்கப்பட்டிருக்கிறது. அறிக்கை வழங்கப்பட்டு ஆறு மாதங்கள் ஆன பின்னரும் கூட இப்போது வரை அறிக்கை குறித்து எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை" என கபில் சிபில் வாதாடினார்.

அதேநேரம் ஒரு மாதத்திற்குள் இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். வாதங்களை கேட்ட நீதிபதிகள், மாநில அரசுக்கு பதிலளிக்க இரண்டு வாரங்கள் அவகாசத்தை மத்திய அரசுக்கு வழங்கியுள்ளனர். மேலும் ஏற்கெனவே, தமிழ்நாடு வெள்ள நிவாரணம் கேட்டும், கேரளா கூடுதல் கடன் பெற அனுமதி கேட்டும் கடந்த வாரங்களில் உச்சநீதிமன்றத்தை நாடியிருந்ததை சுட்டிக்காட்டி கவலையும் தெரிவித்திருந்தனர். மட்டுமல்லாது, இந்த விவகாரத்தில் மத்திய மாநில அரசுகளுக்கு இடையே போட்டி வேண்டாம் என்றும் நீதிபதிகள் கூறியுள்ளனர்.

கர்நாடகாவை பொறுத்த அளவில் தற்போது ஆழ்துளை கிணறுகள் கூட வற்றிவிட்டதால் தண்ணீருக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கிறது. எனவே டேங்கர் லாரி தண்ணீரின் விலை பலமடங்கு உயர்ந்திருக்கிறது. நிலைமையை எதிர்கொள்ள முடியாத ஐடி ஊழியர்கள் சென்னை நோக்கி படையெடுத்திருக்கிறார்கள். வறட்சியை சமாளிக்க மாநில அரசும் முடிந்த வரை முயற்சிகளை மேற்கொண்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+