பட்டாசாக வரும் நாசில் பூஸ்டர் டோஸ்! இறுதி சோதனை தொடங்கிய பாரத் பயோடெக்- மூக்கிலேயே வைரசை அழிக்குமாம்
டெல்லி: இந்தியாவில் தற்போது கொரோனா 3ஆம் அலை ஏற்பட்டுள்ள நிலையில், நேரடியாக மூக்கில் செலுத்தக் கூடிய பூஸ்டர் டோஸ் வேக்சின் சோதனையை மேற்கொள்ள பாரத் பயோடெக் நிறுவனத்திற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.
கடந்த 2 ஆண்டுகளாகவே உலக நாடுகளை அலறவிட்டுக் கொண்டிருக்கும் ஒன்றாக கொரோனா வைரஸ் உள்ளது. உலகெங்கும் பல லட்சம் பேரை நாம் கொரோனாவால் இழந்துள்ளோம்.
கொரோனா பாதிப்பைக் கட்டுப்படுத்த உலகின் பல்வேறு நாடுகளும் தீவிரமாகப் போராடி வருகின்றனர். இருப்பினும், கொரோனாவை முழுவதுமாக ஒழிப்பது கிட்டதட்ட முடியாத ஒன்றாக மாறிவிட்டது.

வேக்சின்
தற்போதைய சூழலில் வேக்சின் மட்டுமே கொரோனாவுக்கு எதிரான பேராயுதமாக பார்க்கப்படுகிறது. கொரோனா வேக்சின்கள் தீவிர கொரோனா பாதிப்பு மற்றும் உயிரிழப்பைத் தடுப்பது தெளிவாகத் தெரிவதால் வேக்சின் பணிகளையே தற்போது உலகின் பல்வேறு நாடுகளும் மிகத் தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. இந்தியாவிலும் இதுவரை 160 கோடிக்கும் அதிகமான வேக்சின்கள் இதுவரை மக்களுக்குப் போடப்பட்டுள்ளன.

பூஸ்டர் டோஸ்
இந்தியா உள்ளிட்ட சில நாடுகளில் பூஸ்டர் டோஸ் பணிகளும் தொடங்கப்பட்டுள்ளன. அதேபோல கொரோனாவுக்கு எதிராக புதிய வேக்சின்களை கண்டுபிடிக்கும் ஆய்விலும் உலக ஆய்வாளர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், ஹைதராபாத்தின் பாரத் பயோடெக் நிறுவனம் நேரடியாக மூக்கில் செலுத்தக் கூடிய பூஸ்டர் டோஸ் சோதனைகளில் ஈடுபட்டுள்ளது. ஏற்கனவே 2 டோஸ் கோவாக்சின் பெற்றவர்களுக்கு இந்த பூஸ்டர் டோஸை அளிக்கலாம் என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

நாசில் ஸ்ப்ரே
இந்நிலையில், இந்த நாசில் ஸ்ப்ரே வேக்சினின் மூன்றாம் கட்ட மருத்துவ பரிசோதனைகளை நடத்த தற்போது இந்திய மருத்துவ கட்டுப்பாட்டு அமைப்பு அனுமதி வழங்கியுள்ளது. இந்தியா முழுவதும் மொத்தம் 9 இடங்களில் இந்த சோதனை நடத்தப்படும். ஊசி, சிரஞ்ச் உள்ளிட்டவை இல்லாமல் நேரடியாக மூக்கில் செலுத்தப்படுவதால், குறைந்த காலத்தில் அதிகப்படியான நபர்களுக்கு பூஸ்டர் டோஸை செலுத்த முடியும் என பாரத் பயோடெக் நம்பிக்கை தெரிவித்துள்ளது.

என்ன செய்யும்
BBV154 என்ற இந்த மூக்கில் செலுத்தப்படும் வேக்சின், வைரஸ் நமது உடலில் பரவ தொடங்கும் மூக்கிலேயே கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுப்பதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும், இதை மிக எளிதாகச் செலுத்திக் கொள்ளலாம் என்பதால் இதற்காகத் தனியாகப் பயிற்சி பெற்ற சுகாதாரப் பணியாளர்கள் யாரும் தேவையில்லை என்றும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இதன் மூன்றாம் கட்ட சோதனைகளை மேற்கொள்ளக் கடந்த மாதம் பாரத்பயோடெக் அனுமதி கோரி இருந்த நிலையில், தற்போது அனுமதி கிடைத்துள்ளது.

அனுமதி
முன்னதாக சமீபத்தில் தான் கோவாக்சின் மற்றும் கோவிஷீல்ட் வேக்சின்களை நேரடியாகச் சந்தையில் கிடைக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்திருந்தது. இருப்பினும், எப்போது முதல் கோவாக்சின் மற்றும் கோவிஷீல்டுகளை நேரடியாகச் சந்தையில் கிடைக்கும் என்பது குறித்த தகவல்களை மத்திய அரசு இதுவரை அறிவிக்கவில்லை. இந்தச் சூழலில் தான் தற்போது பூஸ்டர் டோஸ் சோதனைக்கும் மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
-
தெறித்து ஓடும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்! பாதாளத்திற்கே போகும் இந்திய பங்குச்சந்தைகள்.. 3 காரணங்கள் -
ஈரானில் விழுந்த குண்டுகளால்.. இந்தியாவில் உயர்ந்த குடிநீர் விலை.. இன்னும் என்னவெல்லாம் நடக்குமோ! -
வந்தாச்சு LPG ATM.. இனி காத்திருக்கவே வேண்டாம்! வெறும் 2 நிமிடத்தில் புதிய சிலிண்டர் ஈஸியா வாங்கலாம் -
பெரிய சிக்கலில் இந்தியா! 1970ல் நடந்தது போல.. இப்போதும் நடக்கப்போகுது! வெளியான ஷாக் தகவல்! -
"தேங்க் யூ இந்தியா.. உங்க உதவியை நாங்கள் மறக்கவே மாட்டோம்.." போருக்கு நடுவே நன்றி சொன்ன ஈரான் -
ரெடியா இருங்க மக்களே! சட்டுன்னு ஏறப்போகும் பெட்ரோல், டீசல் விலை! தேதி குறிச்சாச்சு! -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்?












Click it and Unblock the Notifications