இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 12,338 பேருக்கு கொரோனா.. 164 பேர் பலி!
டெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 12,338 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இந்தியாவில் கொரோனா கேஸ்கள் பெரிய அளவில் சரிந்துள்ளது. 223 நாட்களில் மிக குறைவான ஆக்டிவ் கேஸ்கள் இந்தியாவில் தற்போது உள்ளது. 1,76,599 பேர் இந்தியாவில் ஆக்டிவ் நோயாளிகளாக உள்ளனர்.
கடந்த 24 மணி நேரத்தில் 164 பேர் இந்தியாவில் பலியாகி உள்ளனர். 4,52,485 பேர் இதுவரை கொரோனா காரணமாக இந்தியாவில் பலியாகி உள்ளனர்.

ஆக்டிவ் கேஸ்கள்
இந்தியாவில் மூன்றாம் அலை ஏற்படுவதற்கான அறிகுறிகள் தெரியவில்லை. நேற்று முன் தினம் வரை 15 ஆயிரத்திற்கும் அதிகமாக கேஸ்கள் பதிவாகி வந்தது. ஆனால் நேற்று 13 ஆயிரத்திற்கும் குறைவாக கேஸ்கள் பதிவாகி உள்ளது. இந்தியாவில் இதுவரை மொத்தமாக 3,40,93,387 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 19,452 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். 3,34,51,170 பேர் இந்தியாவில் மொத்தமாக டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

தமிழ்நாடு
தமிழ்நாட்டில் கொரோனா பெரிய அளவில் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. முறையான கொரோனா தடுப்பு நடவடிக்கைள், வேக்சின் முகாம்கள் காரணமாக கொரோனா பரவல் குறைக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் கொரோனா காரணமாக 26,88,284 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.தமிழ்நாட்டில் புதிதாக 1192 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் இதுவரை 35,912 பேர் கொரோனா காரணமாக பலியாகி உள்ளனர். அங்கு மொத்தமாக 26,37,802 பேர் இதுவரை குணமடைந்து உள்ளனர். அங்கு 14,570 பேர் ஆக்டிவ் நோயாளிகளாக உள்ளனர். கடந்த 24 மணி நேர்தத்தில் தமிழ்நாட்டில் 13 பேர் பலியாகி உள்ளனர்.
Recommended Video

கேரளா
கேரளாவில் ஒரு பக்கம் புயல் வெள்ளம் காரணமாக பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இன்னொரு பக்கம் தொடர்ந்து 6 ஆயிரத்திற்கும் அதிகமாக கேஸ்கள் பதிவாகி வருகிறது. அங்கு கடந்த 24 மணி நேரத்தில் 6676 பேருக்கு கொரோனா ஏற்பட்டது. கேரளாவில் கொரோனா காரணமாக 48,60,997 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். அங்கு 83,250 பேர் ஆக்டிவ் நோயாளிகளாக உள்ளனர். அங்கு இதுவரை 26,925 பேர் கொரோனா காரணமாக பலியாகி உள்ளனர். அங்கு மொத்தமாக 47,50,293 பேர் இதுவரை குணமடைந்து உள்ளனர். அங்கு புதிதாக 60 பேர் பலியாகி உள்ளனர்.

மகாராஷ்டிரா
மகாராஷ்டிராவில் மூன்றாம் அலை வேகமாக ஏற்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அங்கு மூன்றாம் அலைக்கான அறிகுறிகள் எதுவும் தெரியவில்லை. மகாராஷ்டிராவில் கொரோனா காரணமாக 65,93,182 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். அங்கு புதிதாக 1485 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அங்கு 28,008 பேர் ஆக்டிவ் நோயாளிகளாக உள்ளனர். அங்கு இதுவரை 1,39,816 பேர் கொரோனா காரணமாக பலியாகி உள்ளனர். அங்கு மொத்தமாக 64,21,756 பேர் இதுவரை குணமடைந்து உள்ளனர். அங்கு புதிதாக 27 பேர் பலியாகி உள்ளனர்.

கர்நாடகா
கர்நாடகாவில் கொரோனா காரணமாக 29,83,673 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். அங்கு புதிதாக 214 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கர்நாடகாவில் இதுவரை 37,953 பேர் கொரோனா காரணமாக பலியாகி உள்ளனர். அங்கு மொத்தமாக 29,36,527 பேர் இதுவரை குணமடைந்து உள்ளனர். அங்கு 9164 பேர் ஆக்டிவ் நோயாளிகளாக உள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் கர்நாடகாவில் 12 பேர் பலியாகி உள்ளனர்.
-
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு












Click it and Unblock the Notifications