இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 12,907 பேருக்கு கொரோனா.. 251 பேர் பலி!
டெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 12,907 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த 2 வாரமாக இந்தியாவில் தொடர்ந்து 13 ஆயிரத்திற்கும் குறைவாக கேஸ்கள் பதிவாகி வருகிறது.
இந்தியாவில் இதுவரை 3,42,85,612 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதில் 3,36,61,339 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 13,152 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.
1,52,606 பேர் தற்போது இந்தியாவில் ஆக்டிவ் நோயாளிகளாக உள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 251 பேர் இந்தியாவில் பலியானார்கள். 4,58,470 பேர் இதுவரை இந்தியாவில் பலியாகி உள்ளனர்.

தமிழ்நாடு
தமிழ்நாட்டில் தொடர்ந்து 1100க்கும் கீழ் கொரோனா கேஸ்கள் பதிவாகி உள்ளது. தமிழ்நாட்டில் கொரோனா காரணமாக 27,02,623 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். தமிழ்நாட்டில் புதிதாக 1009 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் இதுவரை 36,116 பேர் கொரோனா காரணமாக பலியாகி உள்ளனர். மொத்தமாக 26,55,015 பேர் இதுவரை குணமடைந்து உள்ளனர். அங்கு 11,492 பேர் ஆக்டிவ் நோயாளிகளாக உள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் தமிழ்நாட்டில் 19 பேர் பலியாகி உள்ளனர்.

கேரளா
தமிழ்நாட்டில் கேஸ்கள் தொடர்ந்து குறைந்தாலும் கேரளாவில் இன்னும் கேஸ்கள் கட்டுப்படுத்தப்படவில்லை. கேரளாவில் தொடர்ந்து பாதிப்பு உயர்ந்து வருகிறது. இதனால் நேற்று கேரளாவில் மட்டும் புதிதாக 529 பேர் பலியாகி உள்ளனர். கேரளாவை கடந்த வாரம் திடீரென அதிகரித்த கேஸ்கள் மீண்டும் குறைய தொடங்கி உள்ளது. அங்கு கடந்த 24 மணி நேரத்தில் 7167 பேருக்கு கொரோனா ஏற்பட்டது. கேரளாவில் கொரோனா காரணமாக 49,68,657 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். அங்கு 74,529 பேர் ஆக்டிவ் நோயாளிகளாக உள்ளனர். அங்கு இதுவரை 31,681 பேர் கொரோனா காரணமாக பலியாகி உள்ளனர். அங்கு மொத்தமாக 48,57,181 பேர் இதுவரை குணமடைந்து உள்ளனர்.

கர்நாடகா
கர்நாடகாவில் கடந்த 24 மணி நேரத்தில் 250க்கும் கீழ் கொரோனா கேஸ்கள் பதிவாகி வருகிறது. கர்நாடகாவில் கொரோனா காரணமாக 29,88,333 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். அங்கு புதிதாக 292 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கர்நாடகாவில் இதுவரை 38,082 பேர் கொரோனா காரணமாக பலியாகி உள்ளனர். அங்கு மொத்தமாக 29,41,578 பேர் இதுவரை குணமடைந்து உள்ளனர். அங்கு 8,644 பேர் ஆக்டிவ் நோயாளிகளாக உள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் கர்நாடகாவில் 29 பேர் பலியாகி உள்ளனர்.

மகாராஷ்டிரா
மகாராஷ்டிராவில் கொரோனா காரணமாக 66,11,078 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். அங்கு புதிதாக 1201 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அங்கு 16,658 பேர் ஆக்டிவ் நோயாளிகளாக உள்ளனர். அங்கு இதுவரை 1,40,216 பேர் கொரோனா காரணமாக பலியாகி உள்ளனர். அங்கு மொத்தமாக 64,50,585 பேர் இதுவரை குணமடைந்து உள்ளனர். அங்கு புதிதாக 20 பேர் பலியாகி உள்ளனர்.
-
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
சும்மா துங்கும் பொக்கிஷம்.. இந்திய வீடு, கோயில்கள் முடங்கிய 32,000 டன் தங்கம்! மத்திய அரசின் ப்ளான்! -
“இந்திய எல்லையை ஆக்கிரமித்திருக்கிறோம்..” நேபாள பிரதமரின் பேச்சால் உள்நாட்டில் வெடித்த சர்ச்சை! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக!












Click it and Unblock the Notifications