துணை ஜனாதிபதியாக பதவியேற்றார் சிபி ராதாகிருஷ்ணன்.. ஜெகதீப் தன்கர் - மோடி பங்கேற்பு
டெல்லி: நம் நாட்டின் 15வது துணை ஜனாதிபதியாக தமிழகத்தை சேர்ந்த சிபி ராதாகிருஷ்ணன் இன்று பதவியேற்றார். டெல்லியில் நடந்த விழாவில் ஜனாதிபதி திரெளபதி முர்மு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். இந்த விழாவில் மாஜி துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர், பிரதமர் மோடி, அமித்ஷா உள்பட பிற மத்திய அமைச்சர்கள், எம்பிக்கள், கூட்டணி மற்றும் பாஜக தலைவர்கள் பங்கேற்றனர்.
நம் நாட்டின் துணை ஜனாதிபதியாக இருந்தவர் ஜெகதீப் தன்கர். இவர் கடந்த ஜூலை 21ம் தேதி ராஜினாமா செய்தார். தனது உடல்நலனை குறிப்பிட்டு அவர் ராஜினாமா செய்தார்.

இதையடுத்து துணை ஜனாதிபதி தேர்தல் அறிவிக்கப்பட்டது. பாஜக தலைமையிலான என்டிஏ கூட்டணியில் தமிழகத்தை சேர்ந்த சிபி ராதாகிருஷ்ணன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். இவர் பாஜகவில் செயல்பட்டார். மகாராஷ்டிரா ஆளுநராக பணியாற்றி வந்த நிலையில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.
இவருக்கு போட்டியாக ‛இந்தியா' கூட்டணி சார்பில் முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி சுதாகர் ரெட்டி வேட்பாளராக நிறுத்தப்பட்டார். கடந்த 9ம் தேதி நாடாளுமன்றத்தில் தேர்தல் நடந்தது. மொத்தம் 767 எம்.பிக்கள் வாக்களித்தனர். இதில் 15 வாக்குகள் செல்லாமல் போனது. 13 எம்பிக்கள் வாக்களிக்கவில்லை. இதனால் வெற்றி பெற ஒருவர் 377 வாக்குகள் பெற வேண்டும் என்ற நிலை இருந்தது.
வாக்கு எண்ணிக்கையில் சிபி ராதாகிருஷ்ணன் 452 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இவரை எதிர்த்து போட்டியிட்ட சுதர்சன் ரெட்டிக்கு 300 வாக்குகளை பெற்றிருந்தார். சிபி ராதாகிருஷ்ணனுக்கு எதிர்பார்த்ததை விட 14 வாக்குகள் அதிகமாக கிடைத்துள்ளது. அந்த வாக்குகள் ‛இந்தியா' கூட்டணி கட்சி எம்பிக்களின் வாக்குகளாகும்.
இந்நிலையில் தான் சிபி ராதாகிருஷ்ணன் நாட்டின் 15வது துணை ஜனாதிபதியாக இன்று பதவியேற்றார். பதவியேற்பு விழா டெல்லியில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் இன்று காலை 10 மணிக்கு நடைபெற்றது. ஜனாதிபதி திரெளபதி முர்மு, சிபி ராதாகிருஷ்ணனுக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
இந்த பதவியேற்பு விழாவில் முன்னாள் துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர், வெங்கையா நாயுடு, ஹமீது அன்சாரி, பிரதமர் மோடி, அமித்ஷா உள்பட மத்திய அமைச்சர்கள், எம்பிக்கள், பாஜக தலைவர்கள் பங்கேற்றனர். இதன்மூலம் சிபி ராதாகிருஷ்ணன் தமிழகத்தில் இருந்து துணை ஜனாதிபதியான 3வது நபர் என்ற பெருமையை பெற்றார்.
இதற்கு முன்பு 1952 முதல் 1962ம் ஆண்டு வரை டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் துணை ஜனாதிபதியாக இருந்தார். அதன்பிறகு கேஆர் நாராயணன் 1992 ம் ஆண்டு முதல் 1997 ம் ஆண்டு வரை துணை ஜனாதிபதியாக இருந்தார். இவர்களை தொடர்ந்து இன்று சிபி ராதாகிருஷ்ணன் துணை ஜனாதிபதியாக பொறுப்பேற்றார்.
துணை ஜனாதிபதியான சிபி ராதாகிருஷ்ணன் முன்னதாக தனது மகாராஷ்டிரா ஆளுநர் பதவியில் இருந்து விலகினார். இதையடுத்து மகாராஷ்டிரா ஆளுநர் பணியை குஜராத் ஆளுநர் ஆச்சாரிய தேவவிரத் கூடுதலாக கவனிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications