Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"கடைசி மூச்சு வரை தேசத்திற்காக கடினமாக உழைப்பேன்".. துணை ஜனாதிபதி வேட்பாளர் சிபி ராதாகிருஷ்ணன் உறுதி

Subscribe to Oneindia Tamil

டெல்லி: "எனது கடைசி மூச்சு வரை தேசத்திற்காக கடினமாக உழைப்பேன் என்று உறுதியளிக்கிறேன்" என பாஜக கூட்டணி சார்பில் துணை குடியரசுத் தலைவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள சி.பி.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் தமிழ்நாட்டைச் சார்ந்த சி.பி.ராதாகிருஷ்ணன் குடியரசு துணைத் தலைவர் பதவிக்குப் போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. குடியரசு துணைத் தலைவராக இருந்த ஜெகதீப் தங்கர் ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, புதிய குடியரசு துணைத் தலைவரைத் தேர்வுசெய்வதற்கான தேர்தல், அடுத்த மாதம் 9-ஆம் தேதி நடைபெறுகிறது.

CP Radhakrishnan Vows to Serve Nation Till Last Breath as NDA s Vice Presidential Candidate

தேசிய ஜனநாயக கூட்டணியில் வேட்பாளரைத் தேர்வு செய்ய பிரதமர் நரேந்திர மோடி, பாஜக தலைவர் ஜெ.பி.நட்டா ஆகியோருக்கு கூட்டணி தலைவர்கள் அதிகாரம் வழங்கியுள்ளனர். அதன்படி, தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் தமிழ்நாட்டைச் சார்ந்த சி.பி.ராதாகிருஷ்ணன் குடியரசு துணைத் தலைவர் பதவிக்குப் போட்டியிடுவார் என்று ஜெ.பி.நட்டா அறிவித்துள்ளார். தமிழ்நாட்டைச் சார்ந்த சி.பி.ராதாகிருஷ்ணன் தற்போது மகாராஷ்டிரா மாநில ஆளுநராக உள்ள நிலையில், துணை ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

கடைசி மூச்சு வரை

"NDA கூட்டணியின் குடியரசு துணைத் தலைவர் வேட்பாளராக என்னை தேர்ந்தெடுத்ததற்காக பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா உள்ளிட்டோருக்கு மனமார்ந்த நன்றி. அவர்கள் என் மீது வைத்திருக்கும் நம்பிக்கைக்காகவும், தேசத்திற்கு சேவை செய்ய எனக்கு வாய்ப்பளித்ததற்காகவும் நான் நெகிழ்ச்சியடைகிறேன். எனது கடைசி மூச்சு வரை தேசத்திற்காக கடினமாக உழைப்பேன் என்று உறுதியளிக்கிறேன்" என சி.பி.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.

என்.டி.ஏ கூட்டணி சார்பில் துணை ஜனாதிபதி வேட்பாளராக தேர்வு செய்யப்பட்டுள்ள மஹாராஷ்டிரா ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு பிரதமர் மோடி , மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, நிர்மலா சீதாராமன், தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

பிரதமர் நரேந்திர மோடி

பிரதமர் மோடியின் பதிவில், "சி.பி ராதாகிருஷ்ணன் தனது அர்ப்பணிப்பு, பணிவு மற்றும் அறிவுத்திறன் ஆகியவற்றால் பொது வாழ்வில் நீண்ட ஆண்டுகள், தன்னை வேறுபடுத்திக் காட்டியுள்ளார். அவர் வகித்த பல்வேறு பதவிகளின் போது, சமூக சேவை மற்றும் விளிம்புநிலை மக்களுக்கு அதிகாரம் அளிப்பதில் எப்போதும் கவனம் செலுத்தியுள்ளார். தமிழகத்தின் அடிமட்டத்தில் அவர் விரிவான பணிகளைச் செய்துள்ளார். எங்கள் கூட்டணியின் துணை ஜனாதிபதி வேட்பாளராக அவரை பரிந்துரைக்க என்.டி.ஏ கூட்டணி முடிவு செய்ததில் நான் மகிழ்ச்சியடைகிறேன்." எனக் குறிப்பிட்டுள்ளார்.

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா

அமித்ஷாவின் வாழ்த்துச் செய்தியில், "என்டிஏ கூட்டணி துணை ஜனாதிபதி வேட்பாளராக தேர்வு செய்யப்பட்டுள்ள மஹாராஷ்டிரா ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு வாழ்த்துகள். நாடாளுமன்ற உறுப்பினராக, ஆளுநராக உங்களின் பங்கு அரசியலமைப்பு கடமைகளை திறம்பட நிறைவேற்றி உள்ளீர்கள். உங்கள் பரந்த அனுபவமும் ஞானமும் ராஜ்யசபாவின் கவுரவத்தை உயர்த்தும் என நம்புகிறேன். இந்த முடிவுக்காக பிரதமர் மோடியையும், பாஜக நாடாளுமன்றக் குழு உறுப்பினர்களையும் வாழ்த்துகிறேன்." எனக் குறிப்பிட்டுள்ளார்.

எடப்பாடி பழனிசாமி

எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட பதிவில், "தேசிய ஜனநாயகக் கூட்டணியின் துணை ஜனாதிபதி வேட்பாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மஹாராஷ்டிரா ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு எனது இதயங்கனிந்த வாழ்த்துகள். இது பாஜக மூத்த தலைவரும், ஆளுநருமான சி.பி.ராதாகிருஷ்ணனின் பொது சேவைக்கும், மக்கள் மீதான அர்ப்பணிப்புமிக்க சமூக செயற்பாடுகளுக்கும் கிடைத்த மணிமகுடமாகும்.

தேசிய ஜனநாயகக் கூட்டணியின் சார்பில் தமிழகத்தைச் சேர்ந்த ஒருவரை துணை ஜனாதிபதி வேட்பாளராக தேர்ந்தெடுத்தமைக்கு பிரதமர் மோடிக்கும், பாஜக மூத்த தலைவர்களுக்கும் பாஜக தலைவர் நட்டாவுக்கும் எனது மனமார்ந்த நல்வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்." எனத் தெரிவித்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+