வேலையின்மை, விலைவாசியை விடுங்க.. தேர்தலில் பாஜகவுக்கு கைகொடுக்கும் 'ராமர் கோயில்'! ஆய்வில் தகவல்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: லோக்சபா தேர்தல் நெருங்கி வரும் நிலையில், பாஜக அரசு செய்ததில் மக்களுக்கு பிடித்தது எது என்கிற கேள்விக்கு, ராமர் கோயில் கட்டியதுதான் என்று பலரும் பதிலளித்துள்ளனர். லோக்நிதி மற்றும் சிஎஸ்டிஎஸ் இணைந்து நடத்திய கருத்துக்கணிப்பில் இந்த தகவல்கள் வெளியாகியுள்ளன.

இன்றும் ஒரு வாரத்தில் லோக்சபா தேர்தல் தொடங்க இருக்கும் நிலையில் அரசியல் கடசிகள் தீவிர பரப்புரையை மேற்கொண்டிருக்கின்றன. இந்நிலையில், இந்த தேர்தலின் முக்கியமான பிரச்னைகள், மத்திய பாஜக அரசின் நடவடிக்கைகள் குறித்து லோக்நிதி மற்றும் சிஎஸ்டிஎஸ் அமைப்பு இணைந்து ஆய்வுகளை மேற்கொண்டிருந்தது. தற்போது இந்த ஆய்வின் முடிவுகள் வெளியாகியுள்ளன.

CSDS-Lokniti study says Ram temple issue will create favorable environment for BJP in Lok Sabha elections

அதாவது, ராமர் கோயில் கும்பாபிஷேகம் நடந்து முடிந்து இரண்டு மாதங்கள் கழித்து இந்த ஆய்வு நடத்தப்பட்டிருக்கிறது. பாஜக அரசு செய்ததில் மக்களுக்கு பிடித்தது எது என்கிற கேள்விக்கு, ராமர் கோயில் கட்டியதுதான் என்று 22% பேர் பதிலளித்துள்ளனர். ராமர் கோயிலை கட்டுவது இந்து அடையாளத்தை உறுதிப்படுத்த உதவும் என்று 22% பேரில் பாதிபேர் கூறியுள்ளனர். அதிலும் பெண்களை விட ஆண்களே இந்த கருத்தை அழுத்தமாக தெரிவித்து வருகின்றனர்.

ராமர் கோயில் இந்து அடையாளங்களை ஒருங்கிணைக்கும் என்று 46% பெண்ககும், 49% ஆண்களும் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். சாதிவாரியாக பார்த்தால், இந்து உயர் சாதியினரும், அதைத் தொடர்ந்து நடுத்தர வகுப்பினரும், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினரும் இக்கருத்தையை வெளிப்படுத்தியுள்ளனர். நகர்ப்புறத்தில் 52% பேரும், கிராமப்புறங்களில் 50% பேரும் இக்கருத்தை பிரதிபலிக்கின்றனர். தேசிய அளவில், கிழக்கும் மற்றும் தென்னிந்திய மக்களைவிட, வட மற்றும் மேற்கு பகுதி மக்கள்தான் ராமார் கோயில் கட்டுதை பெருமளவு வரவேற்றிருக்கின்றனர்.

அதேநேரம் ராமர் கோயில் மத பிளவுகளுக்கான வாய்ப்பை உருவாக்கும் என்றும் அவர்கள் கூறியுள்ளனர். ராமர் கோயில் குறித்து பாசிட்டிவாக பதிலளித்தவர்களில் ஒவ்வொரு 5 பேரில் ஒருவர் மதர பிளவு குறித்த அச்சத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

இந்த ஆய்வின்படி பார்த்தால், ராமர் கோயில் விவகாரத்தில் பாஜக தேர்தல் பரப்புரையில் பயன்படுத்தினால் அது நல்ல பலனை கொடுக்கும் என்று தெரிவதாக லோக்நிதி-சிஎஸ்டிஎஸ் தெரிவித்திருக்கிறது. இல்லையென்றாலும் கூட பாஜக என்பது, இந்துக்களுக்கான கட்சி என்று தன்னை ஏற்கெனவே நிலை நிறுத்திக்கொண்டது என்றும் கூறியுள்ளது.

முன்னதாக இந்த தேர்தலில் மக்கள் எதிர்கொள்ளும் முக்கிய பிரச்னை குறித்தும் லோக்நிதி-சிஎஸ்டிஎஸ் சில ஆய்வு முடிவுகளை வெளியிட்டிருந்தது. அதன்படி, வேலையின்மை மற்றும் விலைவாசி உயர்வுதான் முதல் இரண்டு பெரிய பிரச்னையாக மக்கள் பார்க்கிறார்கள் என கூறியிருந்தது. ஏற்கெனவே காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் இந்த விஷயத்தை கையில் எடுத்து மத்திய அரசுக்கு எதிராக பரப்புரை மேற்கொண்டு வரும் நிலையில், ஆய்வும் இதையே சுட்டிக்காட்டியிருந்தது விவாதங்களை கிளப்பியது.

இருப்பினும், ராமர் கோயில், வளர்ச்சி உள்ளிட்ட விஷயங்கள் மூலம் இதனை மாற்ற முடியும் என்று பாஜக உறுதியாக நம்புகிறது. எப்படி இருப்பினும் இந்த தேர்தல் இரு தரப்பிலும் பலமான போட்டியை உருவாக்கியிருக்கிறது என்று அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+