விவசாயிகள் குற்றம்சாட்டிய ... தீப் சித்து பாஜக ஆதரவாளரா?... வைரலாகி வரும் புகைப்படம்!
டெல்லி: டெல்லி செங்கோட்டையில் நேற்று நடந்த சம்பவத்தில் சீக்கிய மதக்கொடியை ஏற்ற தீப் சித்து காரணமாக இருந்ததாக விவசாயிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.
இந்த நிலையில் தீப் சித்து பாஜக ஆதரவாளர் எனவும் பாஜகவின் குர்தாஸ்பூர் எம்.பி., நடிகர் சன்னி தியோலுக்கும் அவருக்கும் நெருக்கம் உள்ளதாகவும் குற்றம் சாட்டப்படுகிறது.
பிரதமர் நரேந்திர மோடி, நடிகர் சன்னி தியோல் ஆகியோருடன் தீப் சித்து இருக்கும் ஒரு புகைப்படம் சமூக ஊடக தளங்களில் வைரலாகி வருகிறது.

பரபரப்பான டெல்லி
வேளாண் சட்டங்களை திரும்ப பெறக்கோரி டெல்லியில் விவசாயிகள் நடத்திய டிராக்டர் பேரணியில் சமூக விரோதிகள் புகுந்தனர். இதனால் போராட்டம் திசை மாறியது. சிலர் போலீசார் அனுமதி வழங்கிய பாதையில் செல்லாமல் வேறு பாதையில் சென்றதால் போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினார்கள். போலீசார் தடியடி, கண்ணீர்ப் புகை குண்டுகளை வீசினார்கள். டெல்லி செங்கோட்டையில் ஏறி விவசாய சங்க கொடிகள் ஏற்றப்பட்டன. டெல்லியே பரபரப்பானது.

தீப் சித்து மீது குற்றச்சாட்டு
பஞ்சாபி நடிகரும், பாடகருமான தீப் சித்துதான் இளைஞர்களை செங்கோட்டைக்கு அணிவகுத்து சென்று சீக்கிய மதக் கொடியை ஏற்றிவைக்க இளைஞர்களை தூண்டியதாக விவசாய சங்கங்கள் குற்றம் சாட்டின. தீப் சித்து போராட்டத்தை திசை திருப்பி காலிஸ்தானி இயக்கத்தை ஆதரித்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டது. இந்த நிலையில் பாஜகவின் குர்தாஸ்பூர் எம்.பி., நடிகர் சன்னி தியோளுக்கும், தீப் சித்துவுக்கும் நெருக்கம் உள்ளதாகவும், தீப் சித்து பாஜக ஆதரவாளர் எனவும் குற்றம் சாட்டப்படுகிறது.

வைரலான புகைப்படம்
பிரதமர் நரேந்திர மோடி, நடிகர் சன்னி தியோல் ஆகியோருடன் தீப் சித்து இருக்கும் ஒரு புகைப்படம் சமூக ஊடக தளங்களில் வைரலாகி வருகிறது. கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் பாரதிய ஜனதா தேர்தலில் போட்டியிட்ட நடிகர் சன்னி தியோலுக்கு தேர்தல் ஏஜெண்டாக பணியாற்றியவர் தீப் சித்து ஆவார். அப்போது அவர் 2019 மக்களவைத் தேர்தலில் தியோலுக்காக பிரச்சாரம் செய்ததாகக் கூறப்படுகிறது. பின்னர் அவர் விவசாயிகளுக்காக சம்பு மோர்ச்சா என்ற அமைப்பை தொடங்கினார். தற்போது விவசாயிகள் போராட்டம் தொடங்கியது முதலே அதில் தன்னை இணைத்துக்கொள்ள முயற்சித்து வந்ததாக தெரிகிறது.

தீப் சித்து விளக்கம்
இந்த நிலையில்தான் செங்கோட்டையில் மதக்கொடியை ஏற்ற தீப் சித்து காரணமாக இருந்ததாக விவசாயிகள் குற்றம்சாட்டியுள்ளனர். இதைத்தொடர்ந்து தனது பேஸ்புக் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ள தீப் சித்து, தங்களது எதிர்ப்பை காட்டுவதன் அடையாளமாகவே செங்கோட்டையை நோக்கி பேரணி சென்றதாகவும், அங்கு தேசியக் கொடியை இறக்கவில்லை என்றும் தங்களுடைய கொடியை மட்டும் ஏற்றியதாகவும் விளக்கம் அளித்துள்ளார்.
-
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்?












Click it and Unblock the Notifications