திமுக தலைவர் ஸ்டாலினுக்கு மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வாழ்த்து
டெல்லி: திமுக தலைவர் முக ஸ்டாலின், கேரள முதல்வர் பினராயி விஜயன், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானார்ஜி ஆகியோருக்கு பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
திமுக தலைவர் ஸ்டாலினுக்கு மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வாழ்த்து தெரிவித்துள்ளார். தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுக வெற்றியடைந்ததற்காக வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்

கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கும் ராஜ்நாத் சிங் வாழ்த்து தெரிவித்துள்ளார். இரண்டாவது முறையாக இடதுசாரிகள் ஆட்சியை தக்கவைத்துள்ளனர். அங்கு மீண்டும் பினராயி முதல்வராக பொறுப்பேற்க உள்ளார். இதையடுத்து ராஜ்நாத் சிங் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

சட்டசபை தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்துள்ள மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜிக்கு பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வாழ்த்து தெரிவித்துள்ளார். அடுத்து அமையப்போகும் ஆட்சி சிறப்பாக இருக்க வாழ்த்துவதாக தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications