காற்று மாசு.. கட்டுப்படுத்த தவறிய டெல்லி அரசுக்கு எதிராக போராட்டம்! மாணவர்கள் கைது
டெல்லி: டெல்லியில் காற்று மாசு அதிகரித்திருக்கும் நிலையில், அதை கட்டுப்படுத்தக்கோரி மாணவர்களும், பொதுமக்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் டெல்லி போலீசார் மாணவர்களை கைது செய்திருக்கின்றனர்.
பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுடன் இந்தப் போராட்டத்தில் பங்கேற்றிருந்தனர். சுத்தமான காற்றை உறுதி செய்ய அரசு அவசர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் முழக்கமிட்டு இருந்தனர்.

போராட்டத்தில் ஈடுபட்டிருந்த சுற்றுச்சூழல் ஆர்வலர் பவ்ரீன் கந்தாரி, "அதிகாரிகளை நாங்கள் சந்திக்க விரும்புகிறோம். முதலமைச்சருடன் சந்திப்பிற்கு கோரிக்கை விடுத்தோம், ஆனால் மறுக்கப்பட்டது. பல பெற்றோர்கள் இங்கு வந்துள்ளார்கள், ஏனெனில் அவர்களின் குழந்தைகள் பாதிக்கப்படுகிறார்கள். காற்று மாசு காரணமாக டெல்லியில் ஒவ்வொரு மூன்று குழந்தைகளில் ஒருவருக்கு நுரையீரல் பாதிப்பு உள்ளது. சுத்தமான காற்றைச் சுவாசிக்கும் குழந்தைகளை விட இவர்கள் சுமார் 10 ஆண்டுகள் குறைவாக வாழ்கிறார்கள்" என்று
முன்னாள் முதல்வர் ஷீலா தீட்சித் இது குறித்து கூறுகையில், "ஒரு காலத்தில், டெல்லி ஒரு பசுமையான தலைநகராக மக்கள் மத்தியில் பெயர் பெற்றிருந்தது. இன்று, இது உலகின் மிகவும் மாசடைந்த நகரங்களில் ஒன்றாக உள்ளது. அரசியல்வாதிகள் பொறுப்பேற்பதற்குப் பதிலாக ஒருவரையொருவர் குறை கூறிக்கொண்டிருக்கிறார்கள்" என்று விமர்சித்திருக்கிறார்.
காற்றின் தரத்தை அறிந்து கொள்ள காற்று மாசு குறியீடு பயன்படுத்தப்படுகிறது. இந்த குறியீடு 500ஐ தொடும் போது அந்த பகுதியில் காற்று கடுமையான அளவுக்கு மாசடைந்திருக்கிறது என்று அர்த்தம். டெல்லியை பொறுத்தவரை, காற்று மாசு 600ஐ தொட்டிருக்கிறது. எனவே டெல்லி பாஜக அரசுக்கு எதிராக ஆம் ஆத்மி, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சியின் தலைவர்களும் இந்த போராட்டத்தில் பங்கேற்றிருக்கின்றனர். போராட்டத்தில் பங்கேற்றிருந்த பொதுமக்கள் கூறுகையில்,
"எங்களது போராட்டம் அமைதியானது. மோசமடைந்து வரும் சூழல் குறித்து அரசாங்கத்தின் செயலற்ற தன்மையை மக்கள் கவனத்திற்கு கொண்டுவரவே இந்தப் போராட்டம்" என்று கூறியிருக்கின்றனர்.
மறுபுறம் ஆம் ஆத்மி தலைவர் பிரியங்கா கக்கர், "ரேகா குப்தா 13 ஏர் பியூரிஃபையர்களை ஆர்டர் செய்துவிட்டு தனது அலுவலக வீட்டிற்குள் உட்கார்ந்திருக்கிறார் - அவர் இங்கு வந்திருக்க வேண்டும். இது மக்கள் கோபம். ஏனெனில் பாஜக அரசாங்கம் மாசுபாட்டை சரிசெய்ய ஒரு சிறிய நடவடிக்கை கூட எடுக்கவில்லை, இந்த முறை அனைவருக்கும் தெரியும். பாஜக அரசாங்கம் தரவுகளைத் திரிக்காமல் மக்களுடன் களத்தில் இருந்திருக்க வேண்டும்" என்று வலியுறுத்தியுள்ளார்.
போராட்டத்திற்கு ஆதரவு அதிகரித்திருக்கும் நிலையில், போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களை போலீசார் கைது செய்திருக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
-
"தேங்க் யூ இந்தியா.. உங்க உதவியை நாங்கள் மறக்கவே மாட்டோம்.." போருக்கு நடுவே நன்றி சொன்ன ஈரான் -
பெரிய சிக்கலில் இந்தியா! 1970ல் நடந்தது போல.. இப்போதும் நடக்கப்போகுது! வெளியான ஷாக் தகவல்! -
ரெடியா இருங்க மக்களே! சட்டுன்னு ஏறப்போகும் பெட்ரோல், டீசல் விலை! தேதி குறிச்சாச்சு! -
தெறித்து ஓடும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்! பாதாளத்திற்கே போகும் இந்திய பங்குச்சந்தைகள்.. 3 காரணங்கள் -
துரந்தர் இல்லை.. துரோகி.. இந்திய விமான படை வீரர் அதிரடி கைது! பாகிஸ்தானுக்காக உளவு பார்த்தது அம்பலம் -
ஈரானில் விழுந்த குண்டுகளால்.. இந்தியாவில் உயர்ந்த குடிநீர் விலை.. இன்னும் என்னவெல்லாம் நடக்குமோ! -
வந்தாச்சு LPG ATM.. இனி காத்திருக்கவே வேண்டாம்! வெறும் 2 நிமிடத்தில் புதிய சிலிண்டர் ஈஸியா வாங்கலாம் -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
தங்கம் வைத்திருப்போருக்கு பெரிய மாற்றம்! ஏப் 1 முதல் 6 டிஜிட் HUID கட்டாயம்! உங்க பழைய நகை என்னாகும் -
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்?












Click it and Unblock the Notifications