டெல்லி தேர்தல்.. வெளியான லேட்டஸ்ட் சிவோட்டர் சர்வே.. கெஜ்ரிவால் ஹேப்பி!
டெல்லி: டெல்லி சட்டசபைத் தேர்தலை மையமாக கொண்டு அரசியல் சூடு அதிகரித்துள்ளது. ஆம் ஆத்மி, பாஜக, காங்கிரஸ் ஆகிய மூன்று கட்சிகளிடையே மும்முனை போட்டி நடைபெற்றாலும், ஆட்சியை பிடிப்பது ஆம் ஆத்மியா, பாஜகவா என்பதே பலரது கேள்வியாக உள்ளது.
இந்த நிலையில்தான், டெல்லி சட்டமன்றத் தேர்தல் தொடர்பாக ஒரு கருத்துக் கணிப்பு வெளியாகியுள்ளது.

சிவோட்டர் மற்றும் ஸ்நாப் போல் (cvoter snap poll survey) வெளியிட்ட கருத்துக் கணிப்பு முடிவில் கெஜ்ரிவால் ஹேப்பியாகும் ஒரு தகவல் வெளியாகியுள்ளது.
விஷயம் இதுதான்.. அந்த கருத்துக் கணிப்பில் ஆட்சியை மாற்ற விரும்புகிறீர்களா என கேட்கப்பட்டது. 45% மக்கள் அரசு மாற வேண்டும் என்று கூறியுள்ளனர். ஆனால், 51% மக்கள் ஆம் ஆத்மி அரசு தொடர விரும்புகிறார்களாம். இது ஜனவரி 15ம் தேதி எடுத்த கருத்துக் கணிப்பாகும். ஜனவரி 6ம் தேதி எடுத்த கணிப்புடன் ஒப்பிடுகையில், ஆம் ஆத்மி கட்சிக்கு சிறிய முன்னேற்றம் காணப்படுகிறது.
சிவோட்டரின் யஷ்வந்த் தேஷ்முக் கூறுகையில், "முன்பு காங்கிரஸ் வாக்குகள் குறைந்தால் ஆம் ஆத்மி கட்சிக்கு அது செல்லும் என்று சொல்லப்பட்டது. ஆனால் இம்முறை பாஜகவிற்கும் சில ஆதாயம் கிடைக்க வாய்ப்புள்ளது." என்று தாமரை கட்சி மகிழ்ச்சியடையும் சேதியையும் சேர்த்தே சொல்லியுள்ளார்.
'ஆம் ஆத்மி' கட்சியின் ஸ்டார் பிரசாரகர்களாக ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால், அவரது மனைவி சுனிதா கெஜ்ரிவால், டெல்லி முதல்வர் ஆதிதி, பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் ஆகியோர் களம் கண்டுள்ளனர். இது தவிர
40 பேர் கொண்ட பிரசாரக் குழுவில் உள்ளோர்:
- பாராளுமன்ற உறுப்பினர் சஞ்சய் சிங், ராகவ் சத்தா, ஹர்பஜன் சிங்
- முன்னாள் துணை முதல்வர் மனீஷ் சிஸோடியா
- அமைச்சர் சௌரப் பரத்வாஜ், கோபால் ராய்
டெல்லி சட்டசபைத் தேர்தல்:
- வாக்குப்பதிவு: பிப்ரவரி 5
- வாக்கு எண்ணிக்கை: பிப்ரவரி 8
- முதன்மை போட்டி: ஆம் ஆத்மி, பாஜக, காங்கிரஸ்












Click it and Unblock the Notifications