Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சிறையில் இருந்தால் என்ன! சின்ன பிரச்னையை கூட கவனித்து கெஜ்ரிவால் போட்ட 2வது உத்தரவு! அரண்ட அதிகாரிகள்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: மதுபான கொள்கை விவகாரத்தில் சிறையில் உள்ள கெஜ்ரிவால் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்யாத நிலையில், அவர் அங்கிருந்தபடியே தனது இரண்டாவது உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.

டெல்லி மதுபான கொள்கை விவகாரத்தில் கெஜ்ரிவால் கடந்த வாரம் அமலாக்கத் துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். அவர் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

Delhi CM Arvind Kejriwal passes 2nd Order from Jail AAP says Government-From-Jail

இருப்பினும் சிறையில் இருந்தாலும் கெஜ்ரிவால் முதல்வர் பதவியில் தொடர்வார் என்றும் தேவைப்பட்டால் சிறையில் இருந்தபடியே அவர் டெல்லி அரசை நடத்துவார் என்றும் ஆம் ஆத்மி வட்டாரங்கள் அறிவித்தன.

உத்தரவு: இரண்டு நாட்களுக்கு முன்பு தான் கெஜ்ரிவால் சிறையில் இருந்தபடியே தனது உத்தரவைப் பிறப்பித்த நிலையில், இப்போது இரண்டு நாட்கள் கழித்து ஜெயலிலில் இருந்தபடியே அவர் இரண்டாவது உத்தரவைப் பிறப்பித்துள்ளார். டெல்லியில் அம்மாநில அரசு மொஹல்லா கிளினிக்குகளை நடத்தி வரும் நிலையில், அங்கே இலவச மருந்துகள் மற்றும் பரிசோதனைகள் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என அவர் உத்தரவிட்டுள்ளார்.

கெஜ்ரிவால் உத்தரவை டெல்லி சுகாதார அமைச்சர் சௌரப் பரத்வாஜ் செய்தியாளர்களிடம் பகிர்ந்து கொண்டார். கெஜ்ரிவால் சிறையில் இருந்தாலும் டெல்லியில் வசிக்கும் எந்தவொரு மக்களும் அசவுகரியத்தைச் சந்திக்கக் கூடாது என்பதற்காகவே முதல்வர் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளதாக சௌரப் பரத்வாஜ் தெரிவித்தார்.

உத்தரவில் உள்ளது என்ன: இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், "அவர் உள்ளே இருந்தாலும் சரி வெளியே இருந்தாலும் சரி, சாதாரண நபர் அரசு மருத்துவமனைக்குச் செல்லும் அங்கே அனைத்து சேவைகளும் அவருக்குக் கிடைக்க வேண்டும். நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்தவர் எங்கு வேண்டுமானாலும் சென்று மருந்துகளை வாங்க முடியும். ஆனால், ஏழைக்கு அரசு மருத்துவமனை மட்டுமே இருக்கிறது.

டெல்லியில் பல லட்சம் ஆதரவற்ற குடும்பங்கள் அரசைத் தான் முழுமையாக நம்பி இருக்கிறார்கள். சில குறிப்பிட்ட நோய்களுக்கு வாழ்நாள் முழுக்க மருந்துகளை எடுத்துக் கொள்ள வேண்டி இருக்கும். அந்த மருந்துகளும் மொஹல்லா கிளினிக்குகளில் தான் கிடைக்கிறது. மேலும், வழக்கமான ரத்த பரிசோதனைகளுக்காகப் பலர் டெல்லி அரசின் மொஹல்லா கிளினிக்குகளை நம்பி இருக்கிறார்கள்.

சின்ன பிரச்சினை கூட: இருப்பினும், இந்த இலவச டெஸ்டிங்கில் சில பிரச்சினைகள் இருப்பதாகச் சிலர் புகார் அளிப்பதாக முதலமைச்சருக்குத் தகவல் கிடைத்துள்ளது. சிறையில் இருந்தாலும் மக்கள் சிக்கலை சந்திக்கக் கூடாது என்பதற்காக சின்ன பிரச்சினையை கூட கவனித்து கெஜ்ரிவால் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார். அனைத்து மருத்துவமனைகளிலும், மொஹல்லா கிளினிக்குகளிலும் பரிசோதனைகள் மற்றும் மருந்துகளை இலவசமாக வழங்குவதை உறுதி செய்ய வேண்டும் என முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

கடவுள் போல: எங்களுக்கு அவரது உத்தரவு என்பது கடவுளின் உத்தரவு போல.. உடனடியாக நாங்கள் போர்க்கால அடிப்படையில் இந்த விவகாரத்தில் நடவடிக்கை எடுப்போம். கெஜ்ரிவால் சிறையில் இருக்கிறார், ஆனால் அவர் ஒவ்வொரு நொடியும் டெல்லி வாசிகளைப் பற்றியே நினைத்துக் கொண்டிருக்கிறார். தான் இல்லாத நேரத்திலும் எந்த சேவையும் பாதிக்கப்படக்கூடாது என்பது மட்டுமே அவரது கவலை.. நாங்கள் 24 மணி நேரமும் வேலை செய்து டெல்லி மக்களுக்கு எந்தவொரு சிரமத்தையும் எதிர்கொள்ளாமல் இருப்பதை உறுதி செய்வோம்" என்றார்.

முன்னதாக கடந்த ஞாயிற்றுக்கிழமை, டெல்லி அமைச்சர் அதிஷி சிறையில் இருக்கும் கெஜ்ரிவாலின் முதல் ஆர்டரை பகிர்ந்து கொண்டார். அதில் அவர் கோடைக் காலம் நெருங்கும் நிலையில், தண்ணீர் பற்றாக்குறையை எதிர்கொள்ளும் பகுதிகளுக்கு போதுமான தண்ணீர் வழங்குவதை உறுதி செய்யவும், சாக்கடை பிரச்சினைகளை உடனடியாக சரி செய்யவும் கெஜ்ரிவால் உத்தரவிட்டதாக அதிஷி தெரிவித்தார். இந்தத் தகவலைப் பகிர்ந்து கொள்ளும் அதிஷி கண்ணீர்விட்டார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+