வேட்பு மனு.. கடைசி நாளில் கெஜ்ரிவாலுக்கு வந்த சிக்கல்.. 6 மணி நேரம் காத்திருப்பு.. இறுதியில் சுபம்
டெல்லி: டெல்லி சட்டசபை தேர்தலுக்கான வேட்புமனுவை தாக்கல் செய்ய இன்றே கடைசி நாள் என்கிற நிலையில், அரவிந்த் கெஜ்ரிவால் பிற்பகலே தேர்தல் அலுவலகத்திற்கு சென்றுவிட்டாலும் கூட்டம் அதிகமாக இருந்ததால் அவருக்கு 45வது டோக்கன் வழங்கப்பட்டது 6 மணி நேர காத்திருப்புக்கு பிறகு அவர் வேட்பு மனுதாக்கல் செய்தார்.
டெல்லி சட்டசபை தேர்தல் பிப்ரவரி 8ம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மிக்கும், எதிர்க்கட்சியான பாஜகவுக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது. காங்கிரஸ் கட்சியும் போட்டியில் உள்ளது.
டெல்லி சட்டசபை தேர்தலில் போட்டியிடுவோர் வேட்பு மனு தாக்கல் செய்வதற்கு இன்று கடைசி நாளாகும். இந்நிலையில் நேற்று சரியான நேரத்திற்கு சென்று முதல்வர் கெஜ்ரிவால் வேட்பு மனுதாக்கல் செய்யவில்லை.

புதுடெல்லி தொகுதி
புது டெல்லி தொகுதியில் போட்டியிடும் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தேர்தல் ஆணையர் அலுவலகத்தை திங்கள்கிழமை பிற்பகல் 3 மணிக்குள் அடைந்திருக்க வேண்டும். அங்கு ஆவணங்களை தாக்கல் செய்திருக்க வேண்டும்.

செல்லவில்லை
ஆனால் போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருந்ததால் பிற்பகல் 3 மணிக்குள் அவர் நடத்திய பிரம்மாண்ட வாகன பேரணி நிறைவடையவில்லை சரியான நேரத்திற்கு அவரால் செல்ல முடியவில்லை. இதனால் தான் கெஜ்ரிவால் நேற்று வேட்பு மனு தாக்கல் செய்யவில்லை.

கெஜ்ரிவால் மனு
இந்நிலையில் கடைசி நாளான இன்று புதுடெல்லி சட்டசபை தேர்தல் அலுவலகத்திற்கு சரியான நேரத்திற்கு முன்னதாக கெஜ்ரிவால் சென்றுவிட்டார். ஆனால் கூட்டம் மிக அதிகமாக இருப்பதால் அவரால் தற்போது வரை வேட்பு மனு தாக்கல் செய்ய இயலவில்லை. கெஜ்ரிவாலுக்கு டோக்கன் நம்பர் 45 ஐ கொடுத்திருந்தார்கள்

கெஜ்ரிவால் மகிழ்ச்சி
கெஜ்ரிவால் இது தொடர்பாக வெளியிட்டுள்ள ட்வீட் பதிவில். எனது வேட்பு மனுவை தாக்கல் செய்ய காத்திருக்கிறது. எனது டோக்கன் எண் 45. வேட்பு மனு தாக்கல் செய்ய இங்கு பலர் இருந்தனர். ஜனநாயகத்தில் பலர் பங்கேற்றதில் மகிழ்ச்சி அடைகிறேன், "என்று தெரிவித்துள்ளார். இதனிடையே இதில் சதி இருப்பதாக ஆம் ஆத்மி குற்றம்சாட்டி உள்ளது.

பழிவாங்கப்படுகிறாரா
இதற்கிடையில், ஆம் வேட்பாளர் எம்.எல்.ஏ சௌரப் பரத்வாஜ் சுமார் 35 வேட்பாளர்கள் தேர்தல் அலுவலகத்தில் முறையான வேட்பு மனுக்கள் அல்லது 10 முன்மொழிவாளர்கள் கூட இல்லாமல் அமர்ந்திருப்பதாக குற்றம் சாட்டினார். அவர்கள் முதல்வரை வேட்பு மனு தாக்கல் செய்ய அனுமதிக்க மாட்டார்கள்," என்று பரத்வாஜ் குற்றம்சாட்டினார். இதனிடையே எல்லாம் முறையாக இருந்தும் வேண்டுமென்றே கெஜ்ரிவாலை 6 மணி நேரத்திற்கு மேலாக வேட்பு மனு தாக்கல் செய்யவிடாமல் தேர்தல் ஆணையத்தால் காக்க வைக்கப்பட்டிருப்பதாக புகார் எழுந்துள்ளது. கெஜ்ரிவால் பழிவாங்கப்படுவதாகவும் புகார் எழுந்துள்ளது. இதனிடயே நீண்ட நேரத்திற்கு பிறகு கெஜ்ரிவால் வேட்பு மனு தாக்கல் செய்தார்.
-
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
மொத்த பவரையும் காட்டிய இந்தியா.. கச்சா எண்ணெயுடன் குஜராத் வந்தது இந்திய டேங்கர் கப்பல்! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம் -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
29 தொகுதிகள்.. காங்கிரஸை விட 1 கூடுதலாக.. நாளை மறுநாள் அதிமுக - பாஜக ஒப்பந்தம் கையெழுத்து? -
”90 சீட், 2.5 வருடம் முதல்வர்” பேரம் பேசுனாங்க.. விஜய் சொன்ன ஒரே வார்த்தை! போட்டு உடைத்த ஆதவ் அர்ஜுனா -
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
சிறகடிக்க ஆசை: மீனா கண்ட காட்சி.. மீண்டும் ஜெயித்த ரோகிணி.. விஜயா வீட்டில் கொண்டாட்டம்! கடுப்பில் மனோஜ் -
ரெடியாகும் முக்கோண சாலை.. கோவை - திருச்சி - கரூர்.. தமிழ்நாட்டின் மிக முக்கிய பசுமை வழிச்சாலை! -
இந்தியாவில் இறங்கிய 7 வெளிநாட்டவர்.. கைமாறிய ஆயுதங்கள்.. சத்தமே இல்லாமல் தட்டி தூக்கிய என்ஏஐ!












Click it and Unblock the Notifications