ரிலாக்ஸ் பண்ண நினைச்சது ஒரு குத்தமா? காபி ஆர்டர் போட்ட கஸ்டமருக்கு ஜொமாட்டோ தந்த பயங்கர அதிர்ச்சி
டெல்லி: டெல்லியில் காபி குடிக்கலாம் என நினைத்து ஜொமாட்டோவில் ஆர்டர் போட்ட வாடிக்கையாளருக்கு அதிர்ச்சி காத்திருந்தது.
உட்கார்ந்த இடத்திலிருந்து உணவை ஆர்டர் செய்து சாப்பிட வசதியாக ஸ்விக்கி, ஜொமாட்டோ ஆகிய இரு ஆன்லைன் உணவு டெலிவரி நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த நிறுவனங்களுடன் உணவு டெலிவரியில் தாமதம், பார்சலை மாற்றி கொடுத்தது உள்ளிட்ட சண்டை சச்சரவுகள் இருந்தன.
ஒரு நிறுவனத்தின் ஊழியர் உணவில் எச்சில் துப்பிய சம்பவம், பாதி உணவை சாப்பிட்டுவிட்டு அந்த பேக்கிங்கை வாடிக்கையாளரிடம் கொடுத்த சம்பவம் என நிகழ்ந்த தவறுகளை அடுக்கி கொண்டே போகலாம். அது போல் இந்தி குறித்த சர்ச்சையும் இந்த உணவு டெலிவரி நிறுவனத்தால் நிகழ்ந்துள்ளது.

வித்தியாசமான அனுபவம்
ஆனால் டெல்லியில் ஒரு வித்தியாசமான அனுபவம் கிடைத்துள்ளது. டெல்லியை சேர்ந்தவர் சுமித் சவுரப். இவர் நேற்று தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் ஜொமாட்டோவே டேக் செய்து பதிவு ஒன்றை போட்டுள்ளார். அதில் ஜொமாட்டோ மூலம் தேர்டு வேவ் இந்தியாவில் காபி ஆர்டர் செய்தேன். அந்த காபியில் ஒரு சிக்கன் துண்டு இருந்தது.

தொடர்பு
இன்றுடன் உங்களுடனான தொடர்பு முடிந்தது என குறிப்பிட்டுள்ளார். இதற்கு மன்னிப்பு கேட்ட ஜொமாட்டோ, இந்த சுமித்திற்கு இலவச ப்ரோ உறுப்பினர் சேவையை வழங்கியுள்ளது. இதையும் குறிப்பிட்ட சுமித், தவறுகளை செய்துவிட்டு எல்லாரையும் நீங்கள் என்னுடைய நன்மதிப்பை பெற முடியாது என பதிவிட்டுள்ளார்.

சிக்கன்
நானே சிக்கன் துண்டை காபியில் போட்டு விட்டதாக பலர் கருத்து பதிவிடுகிறார்கள். என்னை மன்னித்துவிடுங்கள், நீங்கள் குடிக்கும் இதே பானத்தில் உங்களுக்கும் ஒரு நாள் இந்த அனுபவம் கிடைக்க பிரார்த்திக்கிறேன். நவராத்திரியின் போதும் இது போன்ற மிகப் பெரிய தவறு நடந்துள்ளது.

வெஜ் பிரியாணி
வெஜ் பிரியாணி ஆர்டர் செய்தேன், ஆனால் சிக்கன் பிரியாணி பார்சல் வந்தது. அப்போதும் இனி தவறுகள் நடக்காது என ஜொமாட்டோ சார்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும் இது உணவகம் செய்த தவறு, இதில் எங்களுக்கு எந்த சம்பந்தமும் இல்லை என்றது. போதும்டா இனி நமக்குள் எந்த பிசினஸும் வேண்டாம் என்று குறிப்பிட்டுள்ளார்.

ஜொமாட்டோ மன்னிப்பு
ஜொமாட்டோவும் தேர்டு வேவ் இந்தியாவும் மன்னிப்பு கேட்டுள்ளனர். ஆனால் இது போன்ற அனுபவங்களால் எனக்கு மன உளைச்சல் ஏற்பட்டுள்ளது. இது யாருடைய தவறு என்பது எனக்கு தெரியவில்லை. ஆனால் நல்ல பாடம் கற்றுக் கொண்டேன் இனியாவது அதிகபட்ச கவனம் செலுத்துவார்கள் என நம்புகிறேன் என தெரிவித்துள்ளார்.
-
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை?












Click it and Unblock the Notifications