"படிப்பறிவு இல்லாத கட்சி பாஜக" - ஒரு தேசியக் கட்சி என்றும் பாராமல்.. பயங்கரமாக கலாய்த்த சிசோடியா
டெல்லி: "படிப்பறிவு இல்லாதவர்கள் உள்ள கட்சி பாஜக; எனவே நாட்டையும் கல்வி அறிவற்ற தேசமாக மாற்ற அதன் தலைமை முயற்சி செய்கிறது" என டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா தெரிவித்துள்ளார்.
டெல்லியில் ஆம் ஆத்மி அரசு கடந்த ஆண்டு அறிமுகப்படுத்திய மதுபானக் கொள்கையில் கோடிக்கணக்கில் முறைகேடு நடைபெற்றிருப்பதாக ஆளுநர் வி.கே. சக்சேனா குற்றம்சாட்டினார். இதன்பேரில் வழக்கு பதிவு செய்த சிபிஐ, மணீஷ் சிசோடியா வீட்டில் கடந்த வாரம் சோதனை மேற்கொண்டது. இதில் பல முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக கூறப்பட்டது.

எனினும், தான் எந்த தவறும் செய்யவில்லை என ஆரம்பம் முதலாகவே மணீஷ் சிசோடியா கூறி வருகிறார். மேலும், டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் செய்து வரும் மக்கள் நலப்பணிகளை தடுத்து நிறுத்துவதற்காகவே மத்திய பாஜக அரசு இதுபோன்ற செயல்பாடுகளில் ஈடுபடுவதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.
இந்நிலையில், டெல்லியில் உள்ள அரசுப் பள்ளிக்கூடங்களில் கூடுதல் வகுப்பறைகள் கட்டியதில் முறைகேடு நடந்ததாக கூறி இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு மத்திய ஊழல் தடுப்பு ஆணையம் (சிவிசி) ஒரு விசாரணை நோட்டீஸை அரசுக்கு அனுப்பி இருந்தது. எனினும், அதற்கு டெல்லி ஆம் ஆத்மி அரசு எந்த பதிலும் அளிக்கவில்லை. இதையடுத்து, அந்த அறிக்கைக்கு பதிலளிக்காததற்கு விளக்கம் அளிக்குமாறு டெல்லி அரசுக்கு ஆளுநர் மாளிகை சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டு இருக்கிறது.
இந்த விவகாரம் குறித்து டெல்லி துணை முதல்வரும், கல்வி அமைச்சருமான மணீஷ் சிசோடி செய்தியாளர்களை இன்று சந்தித்தார். அவர் கூறியதாவது:
படிப்பறிவு இல்லாதவர்கள் இருக்கும் கட்சி பாஜக. எனவே, நாட்டு மக்களையும் படிப்பறிவு இல்லாதவர்களாக மாற்ற வேண்டும் என அக்கட்சியின் தலைமை விரும்புகிறது. அதனால்தான், பாஜக ஆளும் மாநிலங்களில் அரசுப் பள்ளிக்கூடங்கள் மூடப்படுகின்றன. முதலில் அதுகுறித்து பாஜகவினர் விசாரணை நடத்தட்டும்.
டெல்லி ஆம் ஆத்மி அரசின் நற்பணிகள் பிடிக்காமல், அரசு மீது களங்கம் விளைவிப்பதற்காக மதுபானக் கொள்கையில் முறைகேடு என பாஜகவினர் கூறினார். இதுதொடர்பான என் வீட்டிலும் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தினர். ஆனால் ஒன்றும் கிடைக்கவில்லை. அதனால் தற்போது பள்ளிக்கூட கட்டுமான விவகாரத்தை அவர்கள் கையில் எடுத்துள்ளனர். இவ்வாறு மணீஷ் சிசோடியா கூறினார்.
-
14 அமைச்சர்களிடம் நேருக்கு நேர் மோதல் இல்லை.. பாஜக, அமமுகவை கோர்த்துவிட்ட எடப்பாடி பழனிசாமி! -
சேப்டி கேம் ஆடுகிறாரா எடப்பாடி? தென் மண்டலத்தை பாஜகவிற்கு தாரை வார்த்ததில் உள் அர்த்தம் இருக்கிறதா? -
அரைக் கிணறை தாண்டாத அறிவாலயம்.. அதிவேகத்தில் அதிமுக! போட்ட ஸ்கெட்சை பக்காவாக முடித்த எடப்பாடி! -
பலே ஆளுங்க எடப்பாடி பழனிசாமி.. பாஜகவின் 27 தொகுதிகளில் இப்படி ஒரு ட்விஸ்டா! பாவம் ஜிகே வாசன்? -
குமரியில் காலியாகும் அதிமுகவின் அடித்தளம்.. 4 தொகுதிகளை கைப்பற்றிய பாஜக.. சோர்வடைந்த தொண்டர்கள்! -
சிங்கம் களம் இறங்கிருச்சு.. சிங்காநல்லூரில் களம் காணும் அண்ணாமலை? அக்கா தமிழிசை எங்கே தெரியுமா? -
அண்ணாமலை சட்டமன்றம் செல்ல வேண்டும்.. அதுவே என் விருப்பம்.. வானதி சீனிவாசன் சொன்ன வார்த்தை! -
அதிமுக வேட்பாளர்கள் யார்? 146 வேட்பாளர்களை எப்போது அறிவிப்பார் எடப்பாடி! உச்சகட்ட டென்ஷனில் ர.ர.கள்! -
30 சிறுமிகளிடம் சில்மிஷம்.. தொக்காக சிக்கிய பாஜக கவுன்சிலர் மகன்! கோவாவில் ஷாக் -
மதுரை தெற்கில் பாஜக வெல்லுமா.. செளராஷ்டிரா வாக்குகளை நம்பும் ராம சீனிவாசன்.. பூமிநாதன் சமாளிப்பாரா? -
பாஜகவுக்கு பல்ப் கொடுத்த எடப்பாடி.. வெயிட்டான தொகுதிகளை வச்சுகிட்டாரே! எந்தெந்த தொகுதிகளில் போட்டி? -
"அந்த" 54 தொகுதிகள் தான் மேஜிக்.. மம்தாவை காலி செய்ய சக்கர வியூகம்.. இறங்கி அடிக்கும் பாஜக!












Click it and Unblock the Notifications