டெல்லியில் கெஜ்ரிவால் கட்சி படுதோல்வி.. வெற்றிக்கொடி ஏற்றும் பாஜக! ஆக்சிஸ் மை இந்தியா எக்ஸிட் போல்
டெல்லி: தேசிய தலைநகரான டெல்லியில் நேற்று கடந்த பிப்ரவரி 5ம் தேதி தேர்தல் நடைபெற்றது. இதற்கிடையே டெல்லி தேர்தலில் எந்தக் கட்சி எத்தனை இடங்களில் வெல்லும் என்பது குறித்த தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகளை ஆக்சிஸ் மை இந்தியா அமைப்பு வெளியிட்டுள்ளது. அதில் இந்த முறை பாஜக 45-55 இடங்களில் வென்று ஆட்சியைப் பிடிக்க வாய்ப்பு இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டெல்லியில் இப்போது ஆம் ஆத்மி ஆட்சி நடந்து வரும் சூழலில், அதிஷி முதல்வராக இருக்கிறார். அங்கு கடந்த 10 ஆண்டுகளாக ஆம் ஆத்மியே ஆட்சியில் உள்ள நிலையில், அதைத் தக்கவைக்கும் முனைப்பில் ஆம் ஆத்மி களமிறங்கியது.

இருப்பினும், தலைநகர் டெல்லியில் எப்படியாவது ஆட்சியைப் பிடித்தாக வேண்டும் என்ற முனைப்பில் பாஜக களமிறங்கியது. இந்த இரு கட்சிகளைத் தவிரக் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளும் போட்டியில் உள்ளன.
அங்கு மொத்தம் 70 சட்டசபை இடங்கள் உள்ள சூழலில், குறைந்தது 36 இடங்களில் வெல்லும் கட்சி அல்லது கூட்டணியே ஆட்சியை அமைக்கும். நேற்று பிப்ரவரி 5ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்ற நிலையில், வரும் சனிக்கிழமை பிப்ரவரி 8ம் வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.
இதற்கிடையே ஆக்சிஸ் மை இந்தியா அமைப்பின் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் இப்போது வெளியாகியுள்ளது. அதில் டெல்லி சட்டசபைத் தேர்தலில் பாஜக ஆட்சியை அமைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மொத்தமுள்ள 70 இடங்களில் 45-55 இடங்களில் வெல்ல வாய்ப்பு இருப்பதாக ஆக்சிஸ் மை இந்தியா கருத்துக்கணிப்பில் கூறப்பட்டுள்ளது.
கடந்த 10 ஆண்டுகளாக அங்கு ஆட்சியில் இருந்த ஆம் ஆத்மி 15- 25 இடங்களில் மட்டுமே வெல்லும் என்று ஆக்சிஸ் மை இந்தியா சர்வேயில் கூறப்பட்டுள்ளது. மேலும், காங்கிரஸ் 0-1, இதர கட்சிகள் 0-1 இடங்களில் வெல்ல வாய்ப்பு இருப்பதாக ஆக்சிஸ் மை இந்தியா சர்வேயில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications