ஆடிட்டர் குருமூர்த்தி மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை: டெல்லி ஹைகோர்ட் அதிரடி
டெல்லி: ஆடிட்டர் குருமூர்த்தி மீது உயர்நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க டெல்லி ஹைகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
சமூக ஆர்வலர் கவுதம் நவாஸ்கானுக்கு ஜாமீன் வழங்கியது தொடர்பாக உயர்நீதிமன்ற நீதிபதி முரளிதரை விமர்சித்து ஆடிட்டரும், துக்ளக் இதழ் ஆசிரியருமான குருமூர்த்தி ட்விட்டரில் கருத்துப்பதிவு செய்திருந்தார்.

அதில் நீதிபதிக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் உள்நோக்கம் புகுத்தி கருத்து கூறினார். இதை அறிந்த டெல்லி ஹைகோர்ட் தலைமை நீதிபதி தானாக முன்வந்து வழக்குப்பதிவு செய்தது.
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, குருமூர்த்தி மீது உயர்நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. கிரிமினல் அவதூறு வழக்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
[9 மணிக்கு முடிவெடுத்து.. திடீரென நடந்த அவசர அதிமுக ஆலோசனை.. முதல்வர், ஓ.பி.எஸ். பங்கேற்பு!]
சமீபத்தில் உயர் நீதிமன்றம் குறித்து இழிவாக கருத்து கூறிய, பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா, நீதிமன்றத்தில் மன்னிப்பு கேட்டார் என்பது நினைவிருக்கலாம்.












Click it and Unblock the Notifications