மத்திய அரசு vs ட்விட்டர் முற்றும் மோதல்.. பாய்ந்தது போக்சோ சட்டம்..! அடுத்து என்ன? பரபர பின்னணி
டெல்லி: மத்திய அரசுக்கும் ட்விட்டர் நிறுனவத்திற்கும் இடையே மோதல் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், குழந்தைகள் ஆபாச வீடியோ தொடர்பாக ட்விட்டர் நிறுவனம் மீது டெல்லி போலீசார் போக்சோ பிரிவில் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
மத்திய அரசு கடந்த பிப்ரவரி மாதம் புதிய ஐடி சட்டங்களை அறிமுகப்படுத்தியது. இந்த புதிய சட்டங்களை நாட்டிலுள்ள சமூக வலைத்தளங்களும் ஓடிடி தளங்களும் பின்பற்ற வேண்டும் என மத்திய அரசு அறிவுறுத்தியது.
பேஸ்புக், கூகுள் உள்ளிட்ட நிறுவனங்கள் இந்தச் சட்டத்திற்கு உட்படுவதாக அறிவித்துவிட்டன. இருப்பினும், ட்விட்டர் நிறுவனம் இந்தச் சட்டத்திற்கு உட்படுவதாக தற்போது வரை அறிவிக்கவில்லை.

மத்திய அரசு vs ட்விட்டர்
இதனால் மத்திய அரசுக்கும் ட்விட்டர் நிறுவனத்திற்கும் கடந்த சில வாரங்களாகவே மோதல் போக்கு நிலவி வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன் அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்தின் ட்விட்டர் பக்கம் தற்காலிகமாக முடக்கப்பட்டது. அதன் பிறகு ஜம்மு & காஷ்மீர், லடாக் பகுதிகளைத் தனி நாடாகக் காட்டும் வரைபடமும் ட்விட்டரில் இடம் பெற்றுப் பரபரப்பை ஏற்படுத்தியது.

போக்சோ வழக்குப்பதிவு
மத்திய அரசு இதனால் ட்விட்டர் நிறுவனத்தின் மீது கடும் கோபத்தில் உள்ளது. இந்தச் சூழலில் ட்விட்டர் நிறுவனத்திற்கு எதிராக டெல்லி போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். குழந்தைகள் ஆபாச வீடியோ தொடர்பாகத் தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் அளித்த புகாரின் அடிப்படையில் இந்த டெல்லி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

என்ன புகார்
கடந்த ஆண்டு ட்விட்டர், போஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்களில் குழந்தைகளுக்கு எதிராக நடக்கும் பாலியல் துன்புறுத்தல் தொடர்பாகத் தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் ட்விட்டர் இந்தியா நிறுவனத்திடம் விளக்கம் கேட்டது. அப்போது ட்விட்டர் இந்தியா நிறுவனம் பொய்யான தகவல்களைச் சமர்ப்பித்துள்ளது. இது தொடர்பாக அளிக்கப்பட்ட புகாரில் தான் தற்போது ட்விட்டருக்கு எதிராக போக்சோ மற்றும் புதிய ஐடி சட்டத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

புதிய ஐடி விதிகள்
புதிய ஐடி சட்டங்களுக்கு ட்விட்டர் உட்பட மறுத்துள்ளதால், அந்நிறுவனத்திற்கு வழங்கிய சட்ட பாதுகாப்பை மத்திய அரசு விலக்கிக் கொண்டது. இதனால் இனி ட்விட்டர் பயனாளர்கள் யார் எந்த கருத்தைப் பதிவிட்டாலும் அதற்கு ட்விட்டர் இந்தியா நிறுவனமே பொறுப்பு என்ற நிலை உருவாகியுள்ளது. அடுத்தகட்டமாக ட்விட்டர் மீது கடுமையான நடவடிக்கைகளை மத்திய அரசு எடுக்கத் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
-
"மறைமுக ஊரடங்கு?" இந்தியாவை மெல்ல சுத்துபோடும் ஆபத்து.. கூட்டி கழிச்சு பாருங்க எல்லாம் புரியும் -
ஈரானை அரவணைக்கும் இந்தியா.. மீண்டும் தொடங்கும் கச்சா எண்ணெய் வர்த்தகம்? மத்திய அரசு பிளான் -
"தேங்க் யூ இந்தியா.. உங்க உதவியை நாங்கள் மறக்கவே மாட்டோம்.." போருக்கு நடுவே நன்றி சொன்ன ஈரான் -
தெறித்து ஓடும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்! பாதாளத்திற்கே போகும் இந்திய பங்குச்சந்தைகள்.. 3 காரணங்கள் -
1 மணி நேரம் நின்றாலும் ஒரு சொட்டு பெட்ரோல் இல்லை! ஹைதராபாத்தில் நிலைமை இதுதான்.. கள நிலவரம் இதுதான்! -
இந்தியாவிற்கு மிகப்பெரிய அறிவிப்பு.. சுரேஷ் கோபி vs நரேந்திர மோடி.. அடுத்தடுத்து கவனித்தீர்களா? -
பெரிய சிக்கலில் இந்தியா! 1970ல் நடந்தது போல.. இப்போதும் நடக்கப்போகுது! வெளியான ஷாக் தகவல்! -
துரந்தர் இல்லை.. துரோகி.. இந்திய விமான படை வீரர் அதிரடி கைது! பாகிஸ்தானுக்காக உளவு பார்த்தது அம்பலம் -
ஈரானுடன் ரகசிய டீல்.. சைலன்ட்டாக அம்பானி சம்பவம்.. 2019க்கு பின் இந்தியா வரும் 50 லட்சம் பேரல் ஆயில் -
ஹேப்பி நியூஸ்..சிலிண்டர் சிக்கல் இனி வராது! இந்தியாவுக்கு கைகொடுத்த ஈரான்! பாய்ந்து வரும் கப்பல்கள்! -
எல்பிஜி விஷயத்தில் இந்தியா சொதப்பல்! இனி வரும் நாட்கள் ரொம்ப கஷ்டம்! வார்னிங் வந்துடுச்சு -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி












Click it and Unblock the Notifications