டெல்லியை வைத்துச் செய்யும் கனமழை.. புயல் காரணமாக இருவர் பலி! முக்கிய மசூதியும் சேதம்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: தலைநகர் டெல்லியில் தீவிர கனமழை கொட்டித்தீர்க்கும் நிலையில், அங்குப் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

Delhi rain: Two dead, middle dome of iconic Jama Masjid damaged

டெல்லியில் பல்வேறு இடங்களிலும் தீவிர கனமழை பெய்து வருகிறது. அங்குப் பலத்த காற்றுடன் மழை பெய்து வருவதால் பல இடங்களில் பல பெரிய மரங்கள் அப்படியே வேரோடு சாய்ந்துள்ளன.

நேற்று திங்கள்கிழமை பெய்த கனமழை காரணமாகத் தேசிய தலைநகரில் குறைந்தது இரண்டு பேர் உயிரிழந்துள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. டெல்லி ஜமா மஸ்ஜித் பகுதியைச் சேர்ந்த 50 வயது மதிக்கத்தக்க நபரும், வடக்கு டெல்லியை சேர்ந்த 65 வயது மதிக்கத்தக்க நபரும் பலியாகி உள்ளனர்.

அதேபோல டெல்லியில் உள்ள ஜமா மசூதியின் நடுவில் உள்ள டோமின் ஒரு பகுதியும் பலத்த மழை காரணமாக பெரும் சேதத்தைச் சந்தித்து உள்ளது. இந்தச் சம்பவத்தில் மூன்று பேர் காயமடைந்து இருக்கலாம் எனத் தகவல் வெளியாகி உள்ளது.

கனமழை, பலத்த காற்று காரணமா சில இடங்களில் நிறுத்தி வைக்கப்பட்ட கார்கள் சேதமடைந்தன. மேலும், முக்கிய சாலைகளில் மரங்கள் வேரோடு சாய்ந்ததால் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டன.

இந்த கனமழை காரணமாக டெல்லியின் பல்வேறு பகுதிகள் மின்சாரமும் துண்டிக்கப்பட்டு உள்ளது. மேலும், மோசமான வானிலை காரணமாக டெல்லி விமான நிலையத்தில் தரையிறங்க வேண்டிய எட்டு விமானங்கள் ஜெய்ப்பூர், லக்னோ, சண்டிகர், அகமதாபாத் மற்றும் டேராடூனுக்கு திருப்பி விடப்பட்டன.

மேலும், சஞ்சார் பவன் அருகே பகுதிக்கு அருகே மரம் வேரோடு சாய்ந்ததில் மரத்தின் அடியில் பேருந்து சிக்கியதால் அங்குப் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. நல்வாய்ப்பாக இந்தச் சம்பவத்தில் யாருக்கும் எவ்வித காயமும் ஏற்படவில்லை.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+