ஜனாதிபதி மாளிகையில் பணியில் இருந்த காவல்துறை உதவி ஆணையருக்கு கொரோனா தொற்று
டெல்லி: டெல்லியில் ஜனாதிபதி மாளிகையில் பணியாற்றி வந்த காவல்துறை உதவி ஆணையருக்கு கொரோனா தொற்று இருப்பது நேற்று சோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பாக வெளியிடப்பட்ட அறிக்கையில், டெல்லியில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் பணியிலிருந்த உதவி ஆணையருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. சோதனை முடிவில் அவருக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதியானது. அவரது அறிக்கைகள் குறித்து இன்று எங்களுக்கு அறிவிக்கப்பட்டது. அவர் வைரஸுக்கு சாதகமாக சோதனை செய்துள்ளார், ஆனால் அவர் அறிகுறியற்றவர். அவர் மே 13 முதல் தனிமையில் இருந்தார். தற்போது ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கொரோனாவால் பாதிக்கப்பட்ட அதிகாரி, பணியாளர்களுக்கு கடமைகளை ஒதுக்குதல், பாதுகாப்பு நிர்வாகம் மற்றும் பதுகாப்பு பணியாளர்களை நிர்வகித்தல் உள்ளிட்ட பணிகளை மேற்கொண்டு வந்துள்ளார். அவர் வசித்த கிழக்கு டெல்லி உள்ள கர்கார்டூமா பகுதியில் இருக்கும் அரசு குடியிருப்பைச் சேர்ந்தவர்கள் 6 பேருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இவர் பணிபுரிந்த கட்டடம் குடியரசுத் தலைவர் தங்கியிருக்கும் கட்டடத்திற்கு வெளியே தான் உள்ளது. . இதனால் அங்குக் கிருமி நாசினிகள் தெளிக்கும் பணிகள் நேற்று தீவிரமாக நடந்தது.
கடந்த மாதம், ஜனாதிபதி மாளிகை (ராஷ்டிரபதி பவன் ) வளாகத்தில் அங்குள்ள ஒரு ஊழியரின் உறவினருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதியானதால், அங்குள்ள சுமார் 115 வீடுகளில் வசிப்பவர்கள் சோதனை செய்து தனிமைப்படுத்தப்பட்டனர். ஜனாதிபதி செயலகத்தின் எந்த ஊழியருக்கும் கொரோனா தொற்று இல்லை.
ஏப்ரல் 13 அன்று பி.எல். கபூர் மருத்துவமனையில் உயிரிழந்த மத்திய டெல்லியைச் சேர்ந்த ஒரு கொரோனா நோயாளி, ஜனாதிபதியின் செயலகத்தில் பணியாற்றுபவரோ அல்லது ஜனாதிபதி தோட்டத்திலுள்ள குடியிருப்பாளரோ அல்ல என்று கவால்துறையின் ஒரு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications