Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஷாக்கிங்.. டெல்லியில் 20 ஆயிரத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு.. 7 பேர் உயிரிழப்பு..!

டெல்லிலியில் 20 ஆயிரத்தை தாண்டியது கொரோனா தொற்று பாதிப்பு

Subscribe to Oneindia Tamil

டெல்லி: டெல்லியில் ஒரு நாள் கொரோனா பாதிப்பு 20,000-ஐ தாண்டியுள்ளது.. இந்த தகவலை டெல்லி சுகாதாரத்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் கொரோனாவைரஸ் பரவல் கடந்த சில மாதங்களாக குறைந்து வந்த நிலையில், சில வாரங்களாக அதிகரித்துவருகிறது.

அக்டோபர் மாதத்துக்கு பிறகு, தொற்று பாதிப்பு எண்ணிக்கை உயர்ந்து வருகிறது.. வைரஸின் உருமாற்றமான ஒமைக்ரான் வைரஸ் பரவலும் இருப்பதால் பரவல் மேலும் அதிகரித்து வருகிறது.

வைரஸ்

வைரஸ்

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று மறுபடியும் அதிகரித்து வரும் நிலையில் ஒவ்வொரு மாநிலங்களிலும் இதுவரை இல்லாத அளவிற்கு புதிய உச்சத்தில் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு வருகிறது... டெல்லியில் கடந்த சில வாரங்களாகவே கரோனா வைரஸ் அதிகரித்து வருவதால், பல்வேறு கட்டுப்பாடுகளை டெல்லி அரசு விதித்துள்ளது...

சிகிச்சை

சிகிச்சை

இரவுநேர ஊரடங்கு, பள்ளி,கல்லூரிகளுக்கு விடுமுறை ஆகியவற்றை அரசு அமல்படுத்தியுள்ளது.. எனினும், டெல்லியில் ஒரு நாள் கொரோனா பாதிப்பு 20,000-ஐ தாண்டியுள்ளது கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.. ஒரே நாளில் 20,181 பேருக்கு கொரோா உறுதி செய்யப்பட்ட நிலையில் 7 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.. கொரோனா பரவல் தொற்று விகிதமும் 19.60 சதவீதம் அதிகரித்ததால் டெல்லிவாசிகள் கடுமையான அதிர்ச்சி அடைந்துள்ளனர்...

 பொதுமுடக்கம்

பொதுமுடக்கம்

இதுவரை கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 25,143 ஆக உயர்ந்துள்ளது.. இப்போது 48,178 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக டெல்லி சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. மறுபடியும் பொதுமுடக்கம் அமலுக்கு வந்துவிட்டால், கடுமையான பொருளாதார நெருக்கடிக்கு உள்ளாக நேரிடும் என்று புலம்பெயர் தொழிலாளர்கள் அச்சத்திர்ல் உள்ள நிலையில், டெல்லி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை இன்று 20 ஆயிரத்தை கடந்துள்ளது கூடுதல் கலக்கத்தை ஏற்படுத்தி வருகிறது...

Recommended Video

    Omicron 5 New Symptoms | AIIMS Delhi | Oneindia Tamil
     உயிரிழப்பு

    உயிரிழப்பு

    எனினும், டெல்லியில் இதுவரை ஒமைக்ரான் தொடர்பான உயிரிழப்பு பதிவாகவில்லை... நேற்று உயிரிழந்த 9 பேரில் நிறைய பேருக்கு இணை நோய்கள் இருந்துள்ளதும் தெரியவந்துள்ளது.இந்த எண்ணிக்கை மேலும் உயரக்கூடுமோ என்ற பீதியும் சூழ்ந்துள்ளது. இதையடுத்து தடுப்பூசி மற்றும் கொரோனா பரவல் தீவிர தடுப்பு நடவடிக்கைகளில் அம்மாநில அரசு முழு வீச்சில் இறங்கி வருகிறது.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+