சிவா - ஜூல்பிகர் - தியாகி.. இதை கவனித்தீர்களா? டெல்லி கலவரத்தை மொத்தமாக விளக்கும் ஒரு போட்டோ!
டெல்லி: டெல்லியில் இரண்டு நாட்களாக நடக்கும் கலவரத்தை ஒரே ஒரு புகைப்படம் மொத்தமாக விளக்கி உள்ளது.
டெல்லியில் இத்தனை நாட்கள் அமைதியாக நடந்து வந்த சிஏஏ போராட்டம் பெரிய கலவரத்தில் முடிந்துள்ளது. இதனால் டெல்லியில் தற்போது பாராமிலிட்டரி குவிக்கப்பட்டுள்ளது. நேற்று முதல் நாள் மாலை தொடங்கிய கலவரம் இன்னும் தொடர்ந்து நடந்து வருகிறது.
டெல்லியில் ஜப்பார்பேட், மவ்ஜ்பூர், சாந்த்பாக், குர்ஜீ காஸ், பஜன்பூரா ஆகிய பகுதிகளில் கடுமையான கலவரம் நேற்று நடந்து வருகிறது. இதுவரை இந்த கலவரத்தில் மொத்தம் 18 பேர் கொல்லப்பட்டனர். இந்த பெரும் கலவரத்தில் 150க்கும் மேற்பட்டோர் இதில் மோசமாக காயம் அடைந்தனர்.
எப்படி கலவரம்
இந்த கலவரத்தில் இஸ்லாமியர்களின் கடைகள் மட்டும் அதிகம் குறி வைத்து தாக்கப்படுகிறது. இஸ்லாமியர்கள் இருக்கும் வீடுகள், அவர்களின் பெயர்களில் இருக்கும் கடைகள் எல்லாம் குறி வைத்து தாக்கப்படுகிறது. இஸ்லாமிய பெயர்களை எங்கு பார்த்தாலும் அதை அடித்து உடைத்து இருக்கிறார்கள். சிறு சிறு இசுலாமிய வழிபாட்டு தலங்களை கூட விடாமல் அடித்து உடைத்து நொறுக்கி உள்ளனர்.
எப்படி வழிபாட்டு தலங்கள்
அதேபோல் இஸ்லாமிய வழிபாட்டு தலங்கள் பலவற்றில் இதேபோல் பெட்ரோல் குண்டுகளை வீசி தாக்கி உள்ளனர். இதற்கான புகைப்பட ஆதாரங்கள் பல நேற்று இணையத்தில் வெளியானதும் குறிப்பிடத்தக்கது. இந்த கலவரத்தில் இன்னும் பலர் பலியாகி இருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. தற்போது வெளியாகி இருக்கும் பலி எண்ணிக்கை அதிகாரபூர்வமானது. இன்னும் பலர் கலவரம் நடந்த பகுதியில் உயிருக்கு போராடிக் கொண்டு இருக்கலாம் என்றும் கூறுகிறார்கள்.
|
எப்படி கலவரம்
அதேபோல் பல இஸ்லாமியர்கள் இந்த கலவரத்தில் கொடுமைப்படுத்தப்பட்டும் கொல்லப்பட்டுள்ளனர். இஸ்லாமியர் ஒருவர் நேற்று கும்பிட்டு நிற்கும் போது கலவரக்காரர்கள் எல்லோரும் சேர்ந்து தாக்கியது பெரிய வைரலானது. இன்று இஸ்லாமியர் ஒருவரை உடை இன்றி கலவரக்காரர்கள் எல்லோரும் அவரை தரதரவென இழுத்து செல்லும் வீடியோவும் பெரிய வைரலாகி உள்ளது.
ஒரே புகைப்படம்
இந்த கலவரத்தை மொத்தமாக விளக்கும் புகைப்படம் ஒன்றும் இணையத்தில் வெளியாகி இருக்கிறது. அதன்படி இந்த கலவரதுஇல் மவ்ஜ்பூர் பகுதியில் உள்ள இஸ்லாமிய கடைகள் அடித்து உடைக்கப்பட்டுள்ளது. ஷிவா என்ற இந்துவின் வாகன உதிரி பாக கடை பாதுகாப்பாக இருக்கிறது. கடைசியில் இருக்கும் தியாகி என்ற இந்துவின் கடையும் பாதுகாப்பான இருக்கிறது. ஆனால் இடையில் இருக்கும் ஜூல்பிகர் என்ற இசுலாமியரின் கடை மட்டும் அடித்து உடைக்கப்பட்டுள்ளது.
|
இந்துக்களின் கடைகள்
சரியாக இந்துக்களின் கடைகளை விட்டு விட்டு இஸ்லாமியர்களின் கடைகளை மட்டும் தேடி தேடி அடித்து உடைத்து இருக்கிறார்கள். டெல்லி முழுக்க இஸ்லாமியர்களின் உடைமைகள் இப்படித்தான் அடித்து உடைக்கப்பட்டுள்ளது. டெல்லி கலவரத்தை இந்த புகைப்படம் மொத்தமாக விளக்கிவிட்டது. இதுதான் உண்மையான குஜராத் மாடல் என்று பலர் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள்.