Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கலவரம் செய்பவர்களுக்கு.. புல்டோசர்தான் பதிலடி.. பாஜக கபில் மிஸ்ரா மீண்டும் சர்ச்சைக்குரிய கருத்து

Subscribe to Oneindia Tamil

டெல்லி: டெல்லியில் அனுமன் ஜெயந்தி ஊர்வலத்தையொட்டி வன்முறை நடந்தது. இந்நிலையில் சட்டவிரோதமாக வங்கதேசத்தில் இருந்து நுழைந்து அரவிந்த் கெஜ்ரிவால் அரசின் மருமகன்களாக மாறிய வங்கதேசத்தினர் மற்றும் ரோஹிங்கா ஆகியோரை வெளியேற்ற புல்டோசர் மூலம் நடவடிக்கை அவசியம் என பாஜகவின் கபில் மிஸ்ரா கூறியுள்ளார்.

Recommended Video

    அனுமன் ஜெயந்தி கலவரம்.. டெல்லியில் கலவரக்காரர்களின் ஆக்கிரமிப்பு கட்டிடங்கள் இடிப்பு! பரபரப்பு

    டெல்லயில் கடந்த சனிக்கிழமை அனுமன் ஜெயந்தி ஊர்வலத்தில் வன்முறை வெடித்தது. இருதரப்பினரும் மோதிக்கொண்டதில் போலீசார் உள்பட பல்வேறு தரப்பினரும் காயமடைந்தனர். வாகனங்கள் சேதப்படுத்தப்பட்டன.

    இதுதொடர்பாக டெல்லி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறது. தொடர்ந்து கைது நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது. மேலும் சிசிடிவியில் பதிவான காட்சிகளை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.

    பாஜக, ஆம்ஆத்மி மோதல்

    பாஜக, ஆம்ஆத்மி மோதல்

    இந்நிலையில் தான் தலைநகர் டெல்லியில் நடந்த வன்முறை தொடர்பாக அரசியல் செய்யப்பட்டு வருகிறது. பாஜக தலைவர்கள் ஆம்ஆத்மி கட்சியையும், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலையும் விமர்சனம் செய்கின்றனர். அதேபோல் ஆம்ஆத்மி கட்சியினர் பாஜகவை குற்றம்சாட்டி வருகின்றனர். அரவிந்த் கெஜ்ரிவாலை கடும் வார்த்தைகளால் மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் விமர்சித்த நிலையில் தற்போது முன்னாள் எம்எல்ஏ கபில் மிஸ்ரா அரவிந்த் கெஜ்ரிவால் அரசை சரமாரியாக தாக்கி பேசியுள்ளார்.

    எதிரியாக மாறிய நண்பர்

    எதிரியாக மாறிய நண்பர்

    ஆம்ஆத்மி கட்சியில் செயல்பட்டு வந்த கபில் மிஸ்ரா அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு மிகவும் நெருக்கமானவராக இருந்தார். அதன்பிறகு கபில் மிஸ்ரா ஆம்ஆத்மியில் இருந்து விலகி பாஜகவில் செயல்பட்டு வருகிறார். இந்நிலையில் தான் அனுமன் ஜெயந்தி தொடர்பான வன்முறை, டெல்லியில் ஆக்கிரமிப்பு அகற்றம் தொடர்பாக அவர் அவர் அரவிந்த் கெஜ்ரிவால் அரசை விமர்சனம் செய்து வருகிறார். இதுபற்றி அவர் நேற்று கூறியதாவது:

    கெஜ்ரிவாலின் மருமகன்கள்

    கெஜ்ரிவாலின் மருமகன்கள்

    ‛‛டெல்லி ஜஹாங்கிர்புரி வன்முறை என்பது தீவிரவாத செயலாகும். இதில் வங்கதேச ஊடுருவல்காரர்களின் குடியேற்றம் அதிகரித்து உள்ள நிலையில் தான் இந்திய குடிமக்கள் மீதான தாக்குதல் அதிகரித்துள்ளது. வங்கதேசம், ரோஹிங்யா அகதிகள் அரவிந்த் கெஜ்ரிவால் அரசின் மருமகன்களாக உள்ளனர். இவர்களின் ஆவணங்களை சரிபார்த்து வெளியேற்ற வேண்டும்'' என கூறியிருந்தார்.

    புல்டோசர் நடவடிக்கை ஏன்

    புல்டோசர் நடவடிக்கை ஏன்

    இந்நிலையில் இன்று கபில் மிஸ்ரா தனது டுவிட்டர் பதிவில் ஆக்கிரமிப்பு அகற்றம் தொடர்பாக கூறியுள்ளார். இதில் " டெல்லி வன்முறை என்பது வங்கதேச ஊடுருவல்காரர்களின் செயல் என்று நேற்றே கூறியிருந்தேன். டெல்லியில் உள்ள அரவிந்த் கெஜ்ரிவால் அரசின் மருமகன்களான வங்கதேசத்தினர், ரோஹிங்காவினரை வெளியேற்றும் சிகிச்சை தான் இந்த புல்டோசர்(ஆக்கிரமிப்பு அகற்றம்) நடவடிக்கை. இவர்களின் ஆவணங்களை சரிபார்த்து சட்டவிரோத ஊடுருவல்காரர்களை களையெடுப்பது அவசியம்'' என கூறியுள்ளார்.

    ஆக்கிரமிப்பு அகற்ற தடை

    ஆக்கிரமிப்பு அகற்ற தடை

    டெல்லி வடக்கு மாநகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதியில் தான் வன்முறை நடந்த ஜஹாங்கிர்புரி அமைந்துள்ளது. இங்கு முஸ்லிம் மக்கள் அதிகளவில் வசித்து வருகின்றனர். இந்நிலையில் தான் வடக்கு மாநகராட்சி சார்பில் ஆக்கிரமிப்புக் அகற்றும் நடவடிக்கை துவங்கப்பட்டது. இந்த நடவடிக்கைக்கு இன்று உச்சநீதிமன்றம் தற்காலிக தடை விதித்தது குறிப்பிடத்தக்கது.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+