அப்பாவுக்கு கொரோனா.. சிசிச்சைக்காக துடித்த மகள்.. அதற்குள்ளாகவே மரணமடைந்த பரிதாபம்!
டெல்லி: கொரோனா வைரஸ் பாதிப்பால் ஆபத்தான நிலையில் மருத்துவமனைக்கு அழைத்து வந்த தந்தையை அவர் உயிர் பிரிவதற்குள் சிகிச்சை அளிக்குமாறு மருத்துவமனையின் வாயிலில் இருந்தபடி டெல்லி அரசிடம் மன்றாடிய நிலையில் அந்த பெண்ணின் தந்தை இறந்துவிட்ட சம்பவம் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.
நாடு முழுவதும் கொரோனா வைரஸ் அதிகரித்து வருகிறது. தலைநகர் டெல்லியில் மோசமான பாதிப்புகளை கொண்டுள்ளது. இந்த நிலையில் டெல்லியில் உள்ள எய்ம்ஸ், சப்தர்ஜங், லோக்நாயக் ஜெய் பிரகாஷ் நாராயண் மருத்துவமனை உள்ளிட்ட மருத்துவமனைகள் கொரோனா சிறப்பு வார்டுகளை அமைத்து சிகிச்சை அளித்து வருகிறது.
இந்த நிலையில் தெற்கு டெல்லியின் கிரேட்டர் கைலாஷ் பகுதியை சேர்ந்தவர் 68 வயது முதியவர். இவருக்கு கொரோனா இருந்தது. இந்த நிலையில் கடந்த இரு தினங்களுக்கு முன்னர் அவருக்கு அதிக காய்ச்சல் ஏற்பட்டு உடல்நிலை பாதிக்கப்பட்டது.

காய்ச்சல்
இதையடுத்து அவரது மகள் தனது தந்தையை லோக்நாயக் ஜெய் பிரகாஷ் மருத்துவமனைக்கு அழைத்து சென்றார். அங்கு தனது தந்தைக்கு கொரோனா இருப்பதையும் அவருக்கு காய்ச்சல் அதிகமாக இருப்பதையும் கூறினார். ஆனால் இதுகுறித்து மருத்துவ நிர்வாகம் கண்டுக் கொள்ளவில்லை என கூறப்படுகிறது.

உதவி
இதையடுத்து ட்விட்டரில் " எனது தந்தைக்கு அதிக காய்ச்சல், அவரை மருத்துவமனைக்கு மாற்ற விரும்புகிறோம். டெல்லியின் லோக்நாயக் ஜெய் பிரகாஷ் மருத்துவமனையின் வாயிலில் தந்தையுடன் நிற்கிறேன். உள்ளே அனுமதிக்கவில்லை, அவருக்கு மூச்சும் திணறுகிறது. மருத்துவ உதவி இல்லாவிட்டால் அவர் பிழைக்க மாட்டார், உதவி செய்யுங்கள் என டெல்லி அரசுக்கு காலை 8.05 மணிக்கு கோரியுள்ளார்.

ஒரு மணி நேரம்
எனினும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. ஒரு மணி நேரம் கழித்து மீண்டும் ஒரு ட்வீட்டை அனுப்பினார், அதில் தனது தந்தை உயிரிழந்துவிட்டார். அரசு எங்களை காக்க தவறிவிட்டது என தெரிவித்திருந்தார். இது சமூகவலைதளங்களில் ட்விட்டர்வாசிகளின் கோபத்தை வெளிப்படுத்தியுள்ளது. இதுகுறித்து லோக் நாயக் ஜெய் பிரகாஷ் மருத்துவமனை கூறுகையில் அந்த நபருக்கு கடந்த 1ஆம் தேதி கங்காராம் மருத்துவமனையில் கொரோனா உறுதி செய்யப்பட்டது.

ட்வீட்
இதையடுத்து அவரை வீட்டு கண்காணிப்பில் இருக்குமாறு மருத்துவமனை அறிவுறுத்தியுள்ளது. இந்த நிலையில் எங்கள் மருத்துவமனைக்கு அந்த நபர் கொண்டு வரும் போது இறந்திருந்தார் என தெரிவித்தனர். தனது தந்தைக்கு கொரோனா என்றும் எந்த உதவிமையமும் உதவவில்லை என்றும் கெஜ்ரிவால், சிசோடியா, எம்எல்ஏ திலிப் பாண்டே ஆகியோருக்கு அந்த பெண் ட்வீட் செய்ததில் திலீப் மட்டுமே பதிலளித்தார்.

பாஜக
ஒரு பெண் உதவிக்காக பல ட்வீட்டுகளை அனுப்பியும் அதை கண்டுக் கொள்ளாமல் இன்று உயிர் போய்விட்டது என்றும் இதற்கு காரணம் கெஜ்ரிவாலின் அரசின் தவறு என்றும் பாஜக கடுமையாக விமர்சனம் செய்கிறது. ட்விட்டரிலும் டெல்லி அரசுக்கு கடும் கண்டனங்கள் தெரிவிக்கப்படுகின்றன.
-
இந்தியாவை தாக்க பெரிய சதி.. பாகிஸ்தான் உளவு அமைப்புடன் தொடர்பில் இருந்த 9 பேர் கைது.. பகீர் பின்னணி -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ












Click it and Unblock the Notifications