கவிதாவுக்கு ஜூன் 3 வரை நீதிமன்ற காவல் நீட்டிப்பு.. டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
டெல்லி: மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் தெலங்கானா முன்னாள் முதல்வர் கே.சந்திரசேகர ராவ் மகளும் பிஆர்எஸ் கட்சியின் எம்எல்சியுமான கவிதா தற்போது சிறையில் இருக்கிறார். இந்நிலையில், அவருக்கு ஜூன் 3ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டிருக்கிறது.
டெல்லி புதிய மதுபான கொள்கையில் முறைகேடு செய்திருப்பதாக கவிதா மீது வழக்குப்பதிவு செய்து அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வந்தது. இது குறித்த வழக்கு விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று அமலாக்கத்துறை தொடர்ந்து சம்மன் அனுப்பியிருந்தது. ஆனால், ஓரிரு முறை மட்டுமே ஆஜரான கவிதா, பல முறை சம்மன்களை ஸ்கிப் செய்திருந்தார்.

இதையடுத்து கடந்த மார்ச் 15ஆம் தேதி ஹைதராபாத்தில் அவரது இல்லத்தில் சுமார் 5 மணி ரெய்டு நடத்தப்பட்டு கவிதாவை அமலாக்கத் துறையினர் கைது செய்தனர். ஏற்கெனவே இந்த வழக்கில் டெல்லி துணை முதல்வர் மணிஷ் சிசோடியா உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், கவிதாவின் கைது சலசலப்பை ஏற்படுத்தியிருந்தது.
முதலில் 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்ட கவிதா, பின்னர் டெல்லி திஹார் சிறையில் அடைக்கப்பட்டார். இவர் திஹார் சிறையில் இருக்கும்போதே, கலால் கொள்கை முறைகேடு வழக்கில் சிபிஐ கவிதாவை கைது செய்தது. பின்னர், 3 நாட்கள் விசாரணைக்காக ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் அனுமதி கேட்டிருந்தது. இந்த அனுமதியையடுத்து கவிதா சிபிஐயால் விசாரிக்கப்பட்டார். விசாரணைக்கு பின்னர் அவர் மீண்டும் திஹார் சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்.
அவரை மே 20ம் தேதி வரை காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதற்கிடையில் தனக்கு ஜாமீன் கேட்டு கவிதா தாக்கல் செய்திருந்த மனுவை ரோஸ் அவென்யூ நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதனை தொடர்ந்து தற்போது கவிதாவின் நீதிமன்ற காவலை ஜூன் 3ஆம் தேதி வரை நீட்டித்து டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பின்னணி: கடந்த 2021-22ம் ஆண்டு டெல்லி யூனியன் பிரதேசத்தில் புதிய மதுபான கொள்கை அறிவிக்கப்பட்டது. அதாவது டெல்லியில் மதுபான விற்பனை அரசிடம் இருந்து 4 கார்ப்பரேசன்கள் கைகளுக்கு மாறின. மொத்த மது விற்பனையில் 50% இந்த 4 கார்ப்பரேசன்கள் பகுதிகளில் நடைபெறுகிறது. டெல்லி 32 மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டு 849 சில்லறை விற்பனை நிலையங்களுக்கு லைசன்ஸ் தரப்பட்டது.
இதில் ஏராளமான முறைகேடுகள் என்று புகார்கள் எழுந்தன. அதாவது, மது விற்பனை செய்ய லைசன்ஸ் பெற்றவர்களுக்கு ரூ.144.36 கோடிக்கு மேல் தள்ளுபடி செய்யப்பட்டதாகவும், விதிகள், செயல்முறைகளைப் பின்பற்றாமல் ஒரு நிறுவனத்தின் ரூ.30 கோடி மதிப்பிலான டெபாசிட் பணம் திருப்பி அளிக்கப்பட்டதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன.
இதன் மூலம் கிடைத்த பணத்தை ஆம் ஆத்மி கட்சி கோவா தேர்தலுக்கு செலவிட்டதாகவும் குற்றச்சாட்டு இருக்கிறது. இதில் கவிதாவின் பங்கு முக்கியமானது என அமலாக்கத்துறையும், சிபிஐயும் வழக்குப்பதிவு செய்திருக்கிறது.
-
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன?












Click it and Unblock the Notifications