டிமானிடைசேஷன் திடீர் முடிவல்ல.. திட்டமிடலுடன் செய்யப்பட்டது.. பிரதமர் மோடி பேட்டி
டிமானிடைசேஷன் முறையாக திட்டமிடலுடன் செய்யப்பட்டதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
டெல்லி: டிமானிடைசேஷன் முறையாக திட்டமிடலுடன் செய்யப்பட்டதாகவும், பல முறை கருப்பு பணம் வைத்திருந்தவர்களுக்கு எதிராக எச்சரிக்கை விடுக்கப்பட்ட பின்பே கொண்டு வரப்பட்டதாகவும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு பிரதமர் மோடி பேட்டியளித்துள்ளார். 4.5 வருட ஆட்சியில் முதல்முறை அவர் இப்படி செய்தி நிறுவனம் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார்.
ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திற்கு பிரதமர் மோடி பேட்டி அளித்தார். ஏஎன்ஐ செய்தி நிறுவன ஆசிரியர் ஸ்மிதா பிரகாஷுக்கு பிரதமர் மோடி அளித்துள்ளார் . இந்த பேட்டியின் விவரங்கள் வெளியாகி உள்ளது.

டிமானிடைசேஷன்
அதில், டிமானிடைசேஷன் அவசர அவசரமாக கொண்டுவரப்படவில்லை. நாங்கள் எதோ திட்டமில்லாமல் கொண்டு வந்ததாக பேசுகிறார்கள். ஆனால் உண்மை அப்படி இல்லை. கருப்பு பணம் வைத்திருந்தவர்களுக்கு

எச்சரிக்கை விடுத்தோம்
நாங்கள் எச்சரிக்கை விடுத்தோம். கருப்பு பணத்தை திருப்பி கொடுக்க சொன்னோம். ஆனால் அவர்கள் கேட்கவில்லை. நாங்கள் இரண்டு முறை எச்சரிக்கை விடுத்தோம். நான் பிறரை போல செயல்படுவேன் என்று நினைத்தார்கள்.

சர்ஜிக்கல் ஸ்டிரைக் ஏன்
அதனால்தான் டிமானிடைசேஷன் கொண்டு வந்தோம். அது நல்ல பலனை கொடுத்தது. சர்ஜிக்கல் ஸ்டிரைக் நன்றாக திட்டமிட்டு செய்யப்பட்டது. ஆபத்து அதிகம் என்பதால் வீரர்களை கவனமாக இருக்க சொன்னார். சூரியன் அஸ்தமிக்கும் முன் வீரர்களை திரும்பி வர சொன்னேன்.

2 திட்டம்
நாங்கள் இரண்டு விதமான திட்டங்களை போட்டு இருந்தோம். வெற்றி பெற்றாலும், தோல்வி அடைந்தாலும் வீரர்கள் பாதுகாப்போடு மீண்டும் வர வேண்டும் கூறி இருந்தேன். அதன்படியே சர்ஜிக்கல் ஸ்டிரைக் வெற்றிபெற்றதில் மகிழ்ச்சி என்று பிரதமர் மோடி பேட்டி அளித்துள்ளார்.












Click it and Unblock the Notifications