"கொக்கி" போட்ட பாஜக.. ஆபரேஷன் தாமரை ஆரம்பம்.. மணீஷ் சிசோடியா குற்றச்சாட்டை மறுத்த சிபிஐ.. கைதாகிறாரா
மணீஷ் சிசோடியோ குற்றச்சாட்டை சிபிஐ மறுத்துள்ளதுடன் விளக்கமும் கூறியுள்ளது
டெல்லி: ஆம் ஆத்மி கட்சியில் இருந்து விலகுமாறு சொன்னதாக, மணீஷ் சிசோடியா குற்றச்சாட்டை சிபிஐ மறுத்துள்ளது.. அத்துடன், தொழில்முறை மற்றும் சட்டபூர்வமான முறையிலேயே அவரிடம் சோதனை நடத்தப்பட்டதாக விளக்கமும் சிபிஐ அதிகாரிகள் தந்துள்ளனர்.
விரைவில் எம்பி தேர்தல் நடக்க போகிறது.. இதற்காக தேசிய கட்சிகள் தயாராகி வருகின்றன.. அதிலும் அனைத்து கட்சிகளையும்விட முந்திக்கொண்டு களமிறங்கி மும்முரமாகி வருகிறது பாஜக.
காங்கிரஸ் கட்சி சமீபகாலமாகவே பலவீனமாகிவரும் சூழலில், ஆம்ஆத்மி மேலெழுந்து வர ஆரம்பித்துவிட்டது.. காங்கிரஸின் கோட்டைகளையும் மெல்ல மெல்ல கைப்பற்ற தொடங்கிவிட்டது.. அந்த வகையில் காங்கிரசுக்கு இது எரிச்சல் என்றாலும், பாஜகவுக்கு லேசான கலக்கத்தை ஆம் ஆத்மி ஏற்டுத்தி வருகிறது.

டெல்லி
எனவே, பாஜகவின் பிரதான கவனம் ஆம் ஆத்மி மீது குவிந்து வருவதை தவிர்க்க முடிவதில்லை. இப்படிப்பட்ட சூழலில், குஜராத்திலும் விரைவில் தேர்தல் வர உள்ள நிலையில், ஒரு புது பிரச்சனை கிளம்பி உள்ளது.. டெல்லியில், முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த மாநில அரசிலும் சரி, கட்சியிலும் சரி, கெஜ்ரிவாலுக்கு அடுத்த முக்கிய இடத்தில், அதாவது துணை முதல்வராக இருப்பவர், மணீஷ் சிசோடியா.. கடந்த சில வாரங்களுக்கு முன்பு, டெல்லி மதுபானக் கொள்கை விவகாரம் தொடர்பாக, மணீஷ் சிசோடியா வீட்டில் சிபிஐ அதிகாரிகள் திடுதிப்பென்று சோதனை நடத்தினர்...

டாக்குமெண்ட்கள்
அப்போது பல முக்கிய டாக்குமெண்ட்கள் கைப்பற்றப்பட்டதாக தகவல் வெளியானது.. ஆனால், இது குறித்து மணீஷ் சிசோடியா ஒரு விளக்கம் தந்தார்.. பழிவாங்கும் நோக்கத்திலேயே மத்திய பாஜக அரசு செயல்பட்டு வருகிறது என்றும், சிபிஐ சோதனையில் அப்படி எந்த டாக்குமெண்ட்டும் கைப்பற்றப்படவில்லை என்றார்.. எனினும், மதுபானக் கொள்கை வழக்கில் விசாரணைக்கு நேரில் ஆஜராகும்படி, மணீஷ் சிசோடியாவுக்கு சிபிஐ அதிகாரிகள் சம்மன் அனுப்பினார்கள்..

9 மணி நேரம்
டெல்லியில் உள்ள சிபிஐ ஆபிசில் ஆஜராகும்படி அந்த சம்மனில் குறிப்பிடப்பட்டிருந்தது... இதையடுத்து, மணீஷ் சிசோடியாவும் நேற்றைய தினம் சிபிஐ ஆபீசில் ஆஜரானார்... அவரிடம் அதிகாரிகள் 9 மணி நேரம் விசாரணை நடத்தினர். இந்த விசாரணைக்கு பிறகு, செய்தியாளர்களிடம் மணீஷ் சிசோடியா சொன்னதாவது: சிபிஐ ஆபீசில் அதிகாரிகளை சந்தித்தேன்.. என் மீதான இந்த முழு வழக்கும் போலியானது, பொய்யானது என்பதை என்னிடம் நடத்திய இந்த 9 மணி நேர விசாரணையில் எல்லாத்தையும் புரிந்து கொண்டேன்... இந்த கேஸ், என் மீதான எந்த ஊழலையும் விசாரிப்பதற்காக கிடையாது..

ஆபரேஷன் தாமரை
டெல்லியில் ஆபரேஷன் தாமரையை வெற்றிகரமாக்குவதற்காக மட்டுமே இப்படிப்பட்ட விசாரணை என்னிடம் நடத்தப்பட்டுள்ளது.. ஆனால், ஆம் ஆத்மியை விட்டு, பாஜகவுக்கு செல்ல மாட்டேன்.. முதல்வர் பதவியை தருவதாக சொன்னார்கள்.. அதையும் மறுத்துவிட்டேன்' என்றார்.. மணீஷ் சிசோடியாவின் இந்த குற்றச்சாட்டு, தேசிய அரசியலில் பரபரப்பையும் சலசலப்பையும் கூட்டிவிட்டது.. காரணம், மாற்று கட்சியில் உள்ளவர்களை, வலைவீசி பிடிப்பது பாஜகவுக்கு கைவந்த கலை என்பதால், இந்த குற்றச்சாட்டை முழுவதும் அரசியல் களத்தில் யாராலுமே நிராகரிக்க முடியவில்லை..

அரெஸ்ட்?
இந்நிலையில், சிபிஐ மணீஷ் சிசோடியோ குற்றச்சாட்டை மறுத்துள்ளது.. ஆம் ஆத்மி கட்சியில் இருந்து விலகி, பாஜகவில் சேருமாறு சொல்லவேயில்லை என்று மறுப்பு தெரிவித்துள்ளது... மேலும், இந்த சோதனை தொழில்முறை மற்றும் சட்டபூர்வமான முறையில் நடத்தப்பட்டதுதான் என்றும் சிபிஐ வலியுறுத்துவதாகவும் தெரிவித்துள்ளது... இதனிடையே, அரவிந்த் கெஜ்ரிவால் ஒரு ட்விட் பதிவிட்டுள்ளார்..

ஜோடிப்பா?
அதில், குஜராத் சட்டப்பேரவை தேர்தல் பிரச்சாரத்தில் சிசோடியா பங்கெடுப்பதை தடுக்கும் நோக்கத்தில் அவர் கைது செய்யப்படலாம்.. குஜராத் சட்டப்பேரவை தேர்தல் முடிவு டிசம்பர் 8-ல் வெளியாகிறது.. அதுவரை அவரை சிறையில் வைக்க முடிவு செய்துள்ளனர் என்றார்.. உண்மையிலேயே சிசோடியா கைது செய்யப்படுவாரா? அல்லது இந்த வழக்கு என்பதே ஜோடிக்கப்பட்ட ஒன்றா? அல்லது பாஜகவுக்கு வரும்படி சிசோடியா நிர்ப்பந்தப்படுத்தப்பட்டாரா? என்பதெல்லாம் தெரியவில்லை.. எனினும் சிசோடியா பொறுத்திருந்து பார்ப்போம்..!!
-
சிங்கம் களம் இறங்கிருச்சு.. சிங்காநல்லூரில் களம் காணும் அண்ணாமலை? அக்கா தமிழிசை எங்கே தெரியுமா? -
தேர்தலில் போட்டியில்லை.. டெல்லிக்கு கடிதம் எழுதிய அண்ணாமலை.. பாஜகவில் டிவிஸ்ட் -
சேப்டி கேம் ஆடுகிறாரா எடப்பாடி? தென் மண்டலத்தை பாஜகவிற்கு தாரை வார்த்ததில் உள் அர்த்தம் இருக்கிறதா? -
நடிகை கவுதமியை மீண்டும் ஏமாற்றிய அதிமுக – பாஜக.. ராஜபாளையம் ஜான் பாண்டியனுக்கு ஒதுக்கியதன் பின்னணி -
மதுரை தெற்கில் பாஜக வெல்லுமா.. செளராஷ்டிரா வாக்குகளை நம்பும் ராம சீனிவாசன்.. பூமிநாதன் சமாளிப்பாரா? -
அண்ணாமலைக்கு சீட் கொடுக்க கூடாது.. எடப்பாடி எடுத்த முடிவு.. பாஜக தொகுதி பங்கீட்டில் என்ன நடந்தது? -
அரைக் கிணறை தாண்டாத அறிவாலயம்.. அதிவேகத்தில் அதிமுக! போட்ட ஸ்கெட்சை பக்காவாக முடித்த எடப்பாடி! -
பலே ஆளுங்க எடப்பாடி பழனிசாமி.. பாஜகவின் 27 தொகுதிகளில் இப்படி ஒரு ட்விஸ்டா! பாவம் ஜிகே வாசன்? -
18 தொகுதிகளில் பாஜக வெல்வது கடினம்? திமுகவிடம் கோர்த்துவிட்ட எடப்பாடி பழனிச்சாமி! தாமரைக்கு ‘செக்’ -
பாஜகவுக்கு பல்ப் கொடுத்த எடப்பாடி.. வெயிட்டான தொகுதிகளை வச்சுகிட்டாரே! எந்தெந்த தொகுதிகளில் போட்டி? -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
2021 vs 2026.. அதிமுக கூட்டணியில் யாருக்கு லாபம்.. பாஜக, பாமக அமமுக வாக்கு சதவீதம் என்ன?












Click it and Unblock the Notifications