கவனிச்சீங்களா? மோடி பற்றி அப்பவே அடித்து சொன்ன நிர்மலா சீதாராமன் கணவர்.. அச்சு பிசகாம நடக்குதே!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: பிரதமர் மோடி பற்றி மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனின் கணவர் பரகலா பிரபாகர் குறிப்பிட்ட சில விஷயங்கள் தற்போது ஏறக்குறைய உண்மையில் நடக்க தொடங்கி உள்ளன.

2024 லோக்சபா தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி வெற்றி பெற்று மீண்டும் ஆட்சிக்கு வந்தால், 'இந்தியாவின் வரைபடம் மாறும்' என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் கணவர் பரகலா பிரபாகர் தெரிவித்துள்ளார். 2024 லோக்சபா தேர்தலில் பிரதமரும் பாஜக தலைவருமான நரேந்திர மோடி மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டால், நாடு முழுவதும் லடாக்-மணிப்பூர் போன்ற சூழ்நிலை உருவாகும் என்றும் அவர் எச்சரித்தார்.

Did Nirmala Sitharam husband already predict PM Modi speech on muslims

ஊடகங்களில் அவர் பேசுகையில், 2024ல் பிரதமர் மோடி மீண்டும் பிரதமரானால், இந்தியா மீண்டும் ஒரு தேர்தலை சந்திக்காது. உங்களால் இந்தியாவை அடையாளம் கூட காண முடியாது. அந்த அளவிற்கு நாடு மோசம் ஆகும். மோடியே செங்கோட்டையில் இருந்து வெறுப்புப் பேச்சு கொடுப்பார். மோடியே வெறுப்பு பேச்சுக்களை இனி நேரடியாக பேசுவார்.

இதுவரை கட்சியினர் மட்டுமே இஸ்லாமியர்களை நேரடியாக விமர்சித்த நிலையில் மோடியே அதை பற்றி பேசுவார். மோடி இனி அமைதியாகவோ, நுட்பமாகவோ பேச மாட்டார். வெளிப்படையாக நிலைப்பாட்டை பேசுவார். வெறுப்புப் பேச்சுகளை அவர்கள் எதோ பொருளாதார புரட்சி போல பேசுவார்கள், என்று எச்சரித்து இருந்தார்.

எச்சரிக்கை - மோடி பேச்சு: அதாவது மோடியே இனி வெளிப்படையாக சில கடுமையான கருத்துக்களை பேசுவார் என்று அவர் கூறி இருந்தார் . இப்படிப்பட்ட நிலையில்தான் இஸ்லாமியர்களை வந்தேறிகள் என்று மோடி வெளிப்படையாக கூறி உள்ளார்.

ராஜஸ்தானில் பொதுக்கூட்டத்தில் பேசிய மோடி, நாட்டின் சொத்தில் இஸ்லாமியர்களுக்கே முதல் அதிகாரம் என்று காங்கிரஸ் ஆட்சியில் சொன்னார்கள்.

இஸ்லாமியர்கள் அதிக குழந்தை பெற்றுக்கொள்கிறார்கள். இதனால் இந்துக்களின் சொத்துக்கள் போகிறது. இந்துக்களின் பணத்தை எடுத்து இஸ்லாமிய பெண்களுக்கு கொடுக்க காங்கிரஸ் நினைக்கிறது. "அவர்கள் (காங்கிரஸ்) ஆட்சியில் இருந்தபோது,​​தேசத்தின் செல்வத்தில் முஸ்லீம்களுக்கு முதல் உரிமை உண்டு என்று சொன்னார்கள்.

எழுந்த சர்ச்சை: இதன் பொருள் அவர்கள் இந்தச் செல்வத்தை அதிக குழந்தைகளைப் பெற்றவர்களுக்கும், ஊடுருவல்காரர்களுக்கும் பகிர்ந்தளிப்பார்கள். நீங்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்ததை ஊடுருவியவர்களுக்கு தர போகிறீர்களா. இஸ்லாமியர்கள் ஊடுருவல்காரர்கள்.

பெண்கள் வைத்திருக்கும் தங்கத்தை கணக்கிட்டு, அந்த செல்வத்தை பங்கீடு செய்வோம் என்று காங்கிரஸின் தேர்தல் அறிக்கை கூறுகிறது. மன்மோகன் சிங் தலைமையிலான அரசு, முஸ்லீம்களுக்கு செல்வத்தில் முதல் உரிமை உண்டு என்று கூறியது. இந்த நகர்ப்புற நக்சல் சிந்தனை என் தாய்மார்கள் மற்றும் சகோதரிகளின் மங்களத்தை கூட விட்டுவைக்காது, என்று பிரதமர் மோடி கடுமையாக பேசி இருக்கிறார்.

மோடியே செங்கோட்டையில் இருந்து வெறுப்புப் பேச்சு கொடுப்பார். மோடியே வெறுப்பு பேச்சுக்களை இனி நேரடியாக பேசுவார் என்று மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனின் கணவர் பரகலா பிரபாகர் குறிப்பிட்ட நிலையில் இந்த பேச்சு மோடி மூலம் பதிவு செய்யப்பட்டு உள்ளது. இதை வெறுப்பு பேச்சு என்று 17 ஆயிரம் பேர் தேர்தல் ஆணையத்திடம் புகார் செய்துள்ளனர். மெயில் மூலம் அவர்கள் இந்த புகார்களை பதிவு செய்துள்ளனர். அதேபோல் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளும் தேர்தல் ஆணையத்தில் முறையிட்டு உள்ளன

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+