திமுக ஐடி விங் நடத்தும் ஜனநாயகத்திற்கான ''இந்தியா'' கருத்தரங்கம்! களைகட்டிய டெல்லி அறிவாலயம்!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: திமுக தகவல் தொழில்நுட்ப அணி சார்பில் ஜனநாயகத்திற்கான ''இந்தியா'' கருத்தரங்கம் டெல்லியில் உள்ள அண்ணா -கலைஞர் அறிவாலயத்தில் இன்று நடைபெறுகிறது.

அதில் ''இந்தியா'' கூட்டணி கட்சிகளின் பிரதிநிதிகள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் பலரும் பங்கேற்று பல்வேறு தலைப்புகளில் உரையாற்றவுள்ளனர். இந்திய இறையாண்மையையும், இந்தியாவின் ஜனநாயகத்தை காப்பதற்கான வழிமுறைகள் குறித்துஇக்கருத்தரங்கில் விவாதிக்கப்பட உள்ளது.

Dmk IT Wing conduct India Seminar for Democracy is being held today at Delhi.

டெல்லியில் இன்று மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை நடைபெறும் கருத்தரங்கத்தில் திமுக தகவல் தொழில்நுட்ப அணி ஆலோசகர் கோவி லெனின் வரவேற்று பேசுகிறார். இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் ஆளுநரின் பணி என்ற தலைப்பில் லோக்சபா முன்னாள் செயலாளர் தங்கப்பன் ஆச்சாரி, கூட்டாட்சி என்ற தலைப்பில் பேராசிரியர் ராஜன் குறை கிருஷ்ணன் பேசுகிறார்.

அதேபோல் பிரபல பத்திரிகையாளர் சீமா சிஸ்தி, பொருளாதார அறிஞர் பேராசிரியர் அருண் குமார், பேராசிரியர் ஜெயதி ஜோஷ், ஆகியோர் முதல் அமர்வில் பேசுகிறார்கள். பிறகு மாலை 6.25க்கு தொடங்கும் இரண்டாவது அமர்வில் அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா வரவேற்பு உரை நிகழ்த்துகிறார். அவரைத் தொடர்ந்து வழக்கறிஞர் வில்சன் எம்.பி., முன்னாள் மத்திய அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ், நாடாளுமன்ற உறுப்பினர் பிரியங்கா சதுர்வேதி, சேலம் தரணிதரனி, ஜான் பிரிட்டாஸ் எம்.பி. என பல்வேறு பிரமுகர்கள் ஜனநாயகத்திற்கான ''இந்தியா'' கருத்தரங்க உரை நிகழ்த்துகிறார்கள்.

இதனிடையே இது குறித்து பதிவு வெளியிட்டுள்ள அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, முதலமைச்சர் ஸ்டாலின் மற்றும் திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்துகளோடும், வழிகாட்டுதலோடும் இந்நிகழ்வு நடைபெறுவதாக கூறியிருக்கிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+