மீண்டும் எதிரொலித்த "உதயநிதி.." "இதெல்லாம் பேசாதீங்க.." சபாநாயகர் ஸ்ட்ரிக்ட்! எம்.பி.யால் சலசலப்பு
டெல்லி: "ராஜேஷ்குமார் ஜி, மசோதாவைப் பற்றி மட்டும் பேசுங்க... உங்களுக்கு நேரம் அதற்கு மட்டும் இருக்கு. இதெல்லாம் பேசாதீங்க" என்று மாநிலங்களவை துணை தலைவரே டென்ஷன் ஆகி, கண்டிக்கும் அளவுக்கு, உதயநிதியை புகழ்ந்து தள்ளியுள்ளார் திமுக எம்பியான கேஆர்எம் ராஜேஷ்குமார்.
மாநிலங்களவை உறுப்பினர்களாக இருந்த கேபி முனுசாமி, வைத்திலிங்கம் ஆகியோர் சமீபத்தில் சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்றனர். இதையடுத்து அவர்களின் இடம் காலியானது.
காலியான அந்த மாநிலங்களவை உறுப்பினர்களுக்கான, வேட்பாளராக திமுக சார்பில் கனிமொழி சோமு, கேஆர்என் ராஜேஷ் குமார் ஆகியோர் அறிவிக்கப்பட்டனர். இவர்கள் போட்டியின்றியும் வெற்றி பெற்றனர்..

பதவியேற்பு
இந்நிலையில், குளிர்கால கூட்டத் தொடர் தொடங்கியபோது திமுகவை சேர்ந்த எம்எம் அப்துல்லா, கேஆர்என் ராஜேஷ்குமார், கனிமொழி சோமு ஆகியோர் எம்பியாக பதவியேற்று கொண்டனர்... 3 பேருமே தமிழில்தான் பதவியேற்று கொண்டனர்.. இதில், கேஆர்என் ராஜேஷ்குமார் பதவியேற்கும்போது, "வெல்க தளபதி, வெல்க அண்ணன் உதயநிதி" என்று முழக்கமிட்டார்.

வைரலானது
இதை பார்த்த துணை குடியரசு தலைவர் வெங்கய்ய நாயுடு, "முழக்கங்கள் குறிப்பில் சேர்க்கப்படாது, வெளியில் போய் நீங்கள் என்ன வேண்டுமானாலும் சொல்லி கொள்ளலாம் (Slogans will not be part of Record.. Outside, you can say whatever) என்று கடிந்து கொண்டிருந்தார். இந்த வீடியோ ஒருபக்கம் வைரலானாலும், மற்றொரு புறம் விவாதங்களையும் எழுப்பியது.. இப்போதுதான் முதல்முறையாக தேர்தலில் போட்டியின்றி எம்எல்ஏவாகி உள்ளார் உதயநிதி.. அரசியலுக்கு வந்தும் சில காலம்தான் ஆகிறது..

சர்ச்சை
அப்படி இருக்கும்போது எதற்காக டெல்லியில் சென்று அவர் பெயரை முழங்க வேண்டும்? முக ஸ்டாலினுக்கு பிறகு உதயநிதி தான் என்பதை உறுதிப்படுத்தும் வகையில் அமைந்த முழக்கமா இது? சபாநாயகரே கடுப்பாகிவிட்டாரே? என்றும் விமர்சிக்கப்பட்டது.. இப்போது இதே பிரச்சனை கிளம்பி உள்ளது.. இதே ராஜேஷ்குமார்தான், அதே உதயநிதியை புகழ்ந்து பேசப்போய், மறுபடியும் மக்களவையில் குட்டுப்பட்டுள்ளார்..

குன்னூர்
ராஜேஷ்குமார் பேசியபோது, "என்னை தேர்வு செய்த தளபதி ஸ்டாலின் அவர்களையும் இளைஞர் அணியின் எழுச்சி நாயகனாக விளங்கும் எங்கள் அண்ணன் உதயநிதி அவர்களையும் வணங்குகிறேன்... இந்திய படை தளபதி பிபின் ராவத் குன்னூரில் ஏற்பட்ட விபத்தில் இறந்துவிட்டார்... தமிழக முதலமைச்சர் மாண்புமிகு ஸ்டாலின் அவர்கள் உடனடியாக மாவட்ட நிர்வாகத்தை தொடர்புகொண்டு, மீட்பு பணிகளை துரிதப்படுத்தினார். உடனடியாக நேற்றைய தினம் மாலை 5 மணிக்கு நீலகிரி மாவட்டத்திற்கு சென்று அங்கு இருக்கின்ற ராணுவ பயிற்சி கல்லூரிக்கு சென்று தனது இரங்கலை பதிவு செய்தார்.

மசோதா
நீலகிரி சென்று ராணுவ வீரர்களிடம் நிலையை குறித்து விசாரித்தார்" என்று பேசிக் கொண்டிருக்கும்போதே, மற்ற உறுப்பினர்கள் இதில் குறுக்கிட்டனர்.. உடனே அவையை நடத்தி கொண்டிருந்த, மாநிலங்களவை துணை தலைவர் சஸ்மிட் பத்ரா, "மசோதாவை பற்றி மட்டும் பேசுங்கள்" என்று சொல்லவும் அவையிலும் சலசலப்பு எழுந்தது.. உடனே பக்கத்தில் உட்கார்ந்திருந்த டிகேஎஸ் இளங்கோவன் எழுந்து, "எங்கள் தலைவருக்கு நன்றி சொன்னோம்" என்று சொல்லவும் அனைவரும் அமைதியானார்கள்..

முக ஸ்டாலின்
பிறகு மறுபடியும் ராஜேஷ்குமார் தொடர்ந்தார், "உயிரிழந்த ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினார், எல்லா ஏற்பாடுகளும் முடிந்த பின்னரே முதல்வர் ஸ்டாலின் அங்கிருந்து கிளம்பினார்" என்று சொல்லி முடிப்பதற்குள் அவையில் மறுபடியும் சலசலப்பு ஏற்பட்டது. .. உடனே டிகேஎஸ் இளங்கோவன், "எங்கள் தலைவருக்கு நாங்கள் நன்றியை சொல்லுகிறோம். உங்களுக்கு என்ன?" என்று அவையில் கேட்க, "மசோதாவை பற்றி மட்டும் பேசுங்கள்" என்று மறுபடியும் சொல்லி கடுப்பானார் மாநிலங்களவை துணைத் தலைவர் சஸ்மிட் பத்ரா.

உதயநிதி
ஆனால், முதல்வர் ஸ்டாலின் பற்றியும், உதயநிதி குறித்தும் ராஜேஷ்குமார் புகழாரம் சூட்டிக் கொண்டே இருக்கவும், அதற்கு பாஜக உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்து கொண்டே இருந்தனர்.. இறுதியில், சஸ்மித் பத்ரா, "இப்படியெல்லாம் பேசக்கூடாது.. ஏன் இதையே பேசுறீங்க? என்று கடிந்து கொண்டார்... அதற்கு பிறகும், பெண்களுக்கு சொத்துரிமையை விவசாயிகளுக்கு கடன் ரத்து என்று மக்களின் வாழ்வுக்கு உழைத்தவர் கலைஞர் உழைப்பு உழைப்பு என்று இருப்பவர் என்றால் தளபதி என்று ராஜேஷ்குமார் பேசவும், மீண்டும் குறுக்கிட்டார் சஸ்மித் பத்ரா.

ப்ளீஸ்.. ப்ளீஸ்
"ராஜேஷ்குமார் ஜி மசோதாவைப் பற்றி மட்டும் பேசுங்க. உங்களுக்கு நேரம் அதற்கு மட்டும் இருக்கு. இதெல்லாம் பேசாதீங்க" என்று சொல்லவும், ராஜேஷ்குமார், "'ஐ ஒபே யுவர் ஆர்டர் சார்.. ப்ளீஸ் அல்லோ மீ'' என்று சொல்லி கொண்டே சப்ஜெக்ட்டுக்குள் ஒருவழியாக நுழைந்துள்ளாராம்.. இது எம்பியின் கன்னிப்பேச்சு என்றாலும், அதற்காக 2வது முறையும் இப்படி பேசுவதா? என்று விமர்சனங்கள் எழ ஆரம்பித்துள்ளன.
-
நம்பர் 1 முதல்வர் யார்? டாப் 5 லிஸ்ட்டில் யார் யார்? 1952 ராஜாஜி முதல் 2021 ஸ்டாலின் வரை! -
தேமுதிகவிற்கு 10 தொகுதிகள் ஏன்? பின்னணியில் 2 ஜாதிகளின் ஓட்டுகளுக்கு குறி.. ஸ்டாலின் போடும் கணக்கு -
திமுகவுக்கு வார்னிங்.. ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. தமிழகத்தில் எந்த வயதினர் யாருக்கு ஆதரவு! சர்வே -
ஸ்டாலின் சொல்லியும் சீட் தரல.. மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி தளர்ந்து விட்டது.. கம்யூனிஸ்ட் ஆதங்கம் -
எல்லா சின்னமும் நம்ம சின்னம் தான்.. தவிடுபொடியான சதிகாரர்களின் எண்ணங்கள்! ஸ்டாலின் போட்ட ஆர்டர்! -
கமல்ஹாசனின் மநீம தேர்தலில் போட்டியிட வேண்டும்.. ஸ்டாலினுக்கு வேண்டுகோள் வைத்த திருமாவளவன்! -
Election Exclusive: ரேசில் முந்திய எடப்பாடி.. சடன் ப்ரேக் போட்ட அறிவாலயம்! அதிருப்தி பங்காளிகளை சமாளிக்க புது வியூகம்! -
3 முறை பிரதமர்.. பாஜகவிற்கே எடப்பாடி 27 தான் தந்துள்ளார்.. காங்கிரசுக்கு 28.. திமுகவினர் குமுறல் -
மோடியை மடக்கிய ஸ்டாலின்.. எங்களைக் காக்கப் பிரதமர் தயாரா? தேதி வாரியாக பட்டியல் போட்டு விளாசல்! -
ஸ்டாலின் வீட்டில் 3 மணி நேரம் காத்திருந்து! கண்ணீருடன் வெளியேறினார் துரைமுருகன்! வேல்முருகன் பகீர் -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி அடுத்த குட் நியூஸ்? தமிழக அரசு அசத்திய ரூ.193 கோடி மகளிர் நிதி












Click it and Unblock the Notifications