அரவக்குறிச்சி உள்பட 3 தொகுதிகளிலும் தேர்தல் நடத்துங்கள்.. தேர்தல் ஆணையத்தில் திமுக மனு
டெல்லி: அரவக்குறிச்சி உள்பட 3 சட்டசபை இடைத்தேர்தலை நடத்த வேண்டும் என தேர்தல் ஆணையத்தில் திமுக மனு அளித்துள்ளது.
நாடாளுமன்றத்துக்கும் தமிழகத்தில் காலியாக உள்ள 21 சட்டசபை தொகுதிக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. இந்த நிலையில் 18 தொகுதிகளுக்கு மட்டுமே இடைத்தேர்தல் நடத்த முடியும் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தெரிவித்தார்.
அரக்கோணம் திமுக வேட்பாளர் ஜெகத்ரட்சகன்? தலைமை அறிவிக்கும் முன்பே சுவர் விளம்பரம்.. இப்படி பண்றீங்களே
அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் மற்றும் ஒட்டப்பிடாரம் ஆகிய தொகுதிகளில் வழக்குகள் நிலுவையில் உள்ளதால் தற்போது தேர்தல் நடத்த இயலாது என தெரிவித்தார். இதற்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன.
21 தொகுதிகளுக்கும் தேர்தல் நடத்தினால் அதிமுக ஆட்சி கவிழ்ந்துவிடும் என்பதாலேயே இதுபோல் ஒரு முடிவை தேர்தல் ஆணையம் உள்நோக்கத்துடன் எடுத்துள்ளதாக திமுக குற்றம்சாட்டியது. எனவே 21 தொகுதிகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த வேண்டும் என மனு அளிக்கவுள்ளதாகவும் திமுக தெரிவித்திருந்தது.
அதன்படி இன்று மாநிலங்களவை திமுக எம்பிக்கள் திருச்சி சிவா, டிகேஎஸ் இளங்கோவன் உள்ளிட்டோர் டெல்லி தேர்தல் ஆணையத்தில் மனு அளித்தனர்.
மனுவை அளித்துவிட்டு வெளியே வந்த திருச்சி சிவா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில் தேர்தல் நடத்த வழக்குகள் தடையாக உள்ளன என்று தேர்தல் ஆணையம் கருத்து தெரிவித்தது.
வழக்குகள் வாபஸ் பெறப்பட்டால் தேர்தல் நடத்த பரிசீலிப்பதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.