Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பணமதிப்பிழப்பு ஞாபகம் இருக்கா? அதற்கும் தற்போதைய அறிவிப்புக்கும் என்ன வித்தியாசம்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: கடந்த 2016 ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்ட பண மதிப்பிழப்பு நடவடிக்கையின் போது புழக்கத்தில் இருந்த ரூ.500, ரூ.1000 தாள்கள் செல்லாது என்று பிரதமர் மோடி அறிவித்தார். அன்றைய அறிவிப்புக்கும் தற்போது ரிசர்வ் வங்கி 2 ஆயிரம் ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என அறிவித்துள்ளதற்கும் உள்ள வித்தியாசத்தை பார்க்கலாம்.

கடந்த 2016 ஆம் ஆண்டு நவம்பர் 8 ஆம் தேதி திடீரென நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி தொலைக்காட்சியில் உரையாற்ற போவதாக அறிவிப்பு வெளியானது. பிரதமர் மோடி எதுவும் பேசப்போகிறாரோ என்று உற்று நோக்கிய மக்களுக்கு பணமதிப்பிழப்பு என்ற அறிவிப்பு வெளியானது.

Do you rember demonetisation? What is the difference between that and the current RBI notification

அதாவது அதுவரை நாட்டில் புழக்கத்தில் இருந்த ரூ.500, 1000 தாள்கள் செல்லாது என்று பிரதமர் மோடி அறிவித்ததும் ஒரு நொடி மக்கள் அதிர்ந்துதான் போனார்கள். கையில் இருந்த பணத்தை மக்கள் வங்கியில் செலுத்துவதற்காக அலைமோதினர். நாடு முழுவதும் புழக்கத்தில் இருந்த பணம் திடீரென செல்லாது என அறிவிக்கப்பட்டதால் மக்களும் வியாபாரிகளும் திண்டாடி போகினர்.

அப்போது டிஜிட்டல் பரிவர்த்தனையும் அந்த அளவு மக்கள் மத்தியில் அதிகமாக இல்லை. இதனால், மருத்துவமனை போன்ற அத்தியாவசிய சேவைகளுக்கு கூட பணத்தை கொடுக்க முடியாமல் மக்கள் திண்டாடிக் கொண்டு இருந்தனர். செல்லாது என அறிவிக்கப்பட்ட ரூ.500, ரூ.1000 நோட்டுகளை மாற்றிக்கொள்ள மக்களுக்குக் கால அவகாசம் வழங்கப்பட்டிருந்தது.

பெட்ரோல் நிலையங்களிலும் வங்கிகளிலும் இந்நோட்டுகளை மாற்ற வசதி செய்யப்பட்டது. தங்களது வேலையை விட்டு வங்கிகளில் வரிசைகளில் மக்கள் மணிக்கணக்கில் காத்துக் கிடந்தனர். பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பிறகு ரூ.2 ஆயிரம் தாள்கள் அறிமுகம் செய்யப்பட்டது. எனினும் அந்த பணத்தை எடுப்பதற்கும் கட்டுப்பாடுகள் இருந்ததால் ஏடிஎம்களில் மக்கள் நீண்ட வரிசையில் நின்றனர்.

அதன்பிறகு படிப்படியாக நிலை சீரானது. சுருக்கமாக சொல்வது என்றால் பண மதிப்பிழப்பு நடவடிக்கையின் போது ஒரே இரவில் பணம் செல்லாது என அறிவிக்கப்பட்டது. ஆனால் தற்போது ரூ.2 ஆயிரம் ரூபாய் தாள்கள் திரும்ப பெறப்படும் என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது. பண மதிப்பிழப்புக்கும் இதற்கும் வித்தியாசம் உள்ளது. ஏனெனில் பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் போது ரூபாய் தாளின் மதிப்பு செல்லாது என அறிவிக்கப்பட்டது.

ஆனால், தற்போது புழக்கத்தில் இருந்து திரும்ப பெறப்படும் என்று ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. அதாவது, புழக்கத்தில் உள்ள 2 ஆயிரம் ரூபாய் நோட்டுக்களை திரும்ப பெறுவதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

2 ஆயிரம் ரூபாய் நோட்டுக்கள் சட்டப்படி செல்லுபடியாகும் என்றும் மே 23 ஆம் தேதி முதல் வங்கிகளில் கொடுத்து 2 ஆயிரம் ரூபாய் நோட்டுக்களை மாற்றிக்கொள்ளலாம் என்றும் செப்டம்பர் 30 ஆம் தேதி வரை மாற்றிக்கொள்ளலாம் என்றும் ரிசர் வங்கி தெரிவித்துள்ளது. நாள் ஒன்றிற்கு 20 ஆயிரம் 2 ஆயிரம் நோட்டுக்களைமாற்றிக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்ட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+