RT-PCR பரிசோதனையில் உருமாறிய கொரோனா வைரஸ்கள் தெரிவதில்லையா? மருத்துவர்கள் விளக்கம்
டெல்லி: RT-PCR பரிசோதனையில் உருமாறிய கொரோனா வைரஸ்கள் கண்டுபிடிக்க முடிவதில்லை; அதனால் கொரோனா நெகட்டிவ் என அறிக்கை தருவதாக கூறப்படுவது தவறு என மருத்துவர்கள் விளக்கம் தந்துள்ளது.
RT-PCR பரிசோதனை அறிக்கைகள் மீதான சந்தேகங்களை முன்வைத்து டாக்டர் அனுராக் அகர்வால் விளக்கம் அளிக்கும் வீடியோவை சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டிருக்கிறது. அதில் டாக்டர் அனுராக் அகர்வால் கூறியுள்ளதாவது:

இரட்டை மரபணு உருமாறிய கொரோனா வைரஸ்கள் PCR சோதனையில் தெரியவரும். அதேபோல் RT-PCR பரிசோதனையில் தெரிவதில்லை. ஆகையால் கொரோனா நெகட்டிவ் என அறிக்கை தரப்படுவதாக கூறுவதை ஏற்க முடியாது.
பொதுவாக கொரோனா வைரஸானது வாய் மற்றும் மூக்கில்தான் முதலில் தொற்றும். வாய் அல்லது மூக்கில் ஒருநாள் இவை இருக்கும். அப்போது நடத்தப்படும் சோதனைகளில் இந்த வைரஸ் தெரியவரும்.
கொரோனா பாதிப்புக்குள்ளானவர்கள் 7 அல்லது 8 நாட்களுக்குப் பின்னர் பரிசோதனை நடத்தினால் நெகட்டிவ் என்றுதான் தெரியவரும். ஏனெனில் வாய், மூக்கில் இருந்து கொரோனா வைரஸ் உடலின் உள் பகுதிக்கு சென்றுவிடும். இந்த அடிப்படையை புரிந்து கொள்ள வேண்டும்.
கொரோனா அறிகுறி உள்ளவர்களுக்கு நெகட்டிவ் என வந்தால் புதிய வகை வைரஸ் தாக்கி இருக்கலாம் என கருதக் கூடாது. கொரோனா பரிசோதனைகளை தாமதமாக மேற்கொண்டதால்தான் அப்படி நெகட்டிவ் என வருகிறது. இவ்வாறு டாக்டர் அனுராக் அகர்வால் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications